Tuesday, July 03, 2007

மனதுக்கு உகந்தது முருகனின் நாமம்




சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் பாதையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது அழகிய சிறுவை கிராமம். சுற்றிலும் வாழைத்தோப்பும் நெல்வயல்களுக்கு நடுவில் இருப்பது சிறுவாபுரி முருகன் கோவில்.வெகுநாட்களாகச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற சென்ற ஞாயிறு காலை காரில் மனைவியுடன் கிளம்பிச் சென்று வந்தேன். மிக அழகான கிராமம்,கோவில் சிறியதுதான் இருந்தாலும்சுத்தமாக இருந்தது. .
ஞாயிற்றுகிழமையானதால் கூட்டம் கொஞ்சம் அதிகம்.பக்தர்கள் வரிசையில் நின்று முறையாகத் தரிசனம் செய்தார்கள்.முருகன் நின்ற கோலத்தில் கம்பீரமாக மலர்மாலைகளுடன் அலங்காரமாக காட்சியளித்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.அருணகிரிநாதர் இந்த தலத்து முருகனின்மேல்
நான்கு பாடல் பாடியுள்ளார்.
சிறுவாபுரிக்கு மிக அருகில் (3 கி மி) தொலைவில் ஆண்டார்குப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கும் ஒரு முருகன் கோயில் உள்ளது.
கோவிலும் சுற்றுப்புறமும் சுத்தமாக உள்ளது. நின்ற திருக்கோலத்தில் வள்ளி தெய்வயாணையுடன் அருள்புரிகிறார்.சென்னயில் உள்ள முருகனடியார்கள் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டியதலங்கள் .
முருகனின் கோலத்தையும் அழகையும் பார்த்தவுடன் இந்தப் பாடல்தான் மனத்தை நெகிழச்செய்தது.
ராகம்: சிந்துபைரவி தாளம்: ஆதி
பல்லவி
மனதுக்குகந்தது முருகன் ரூபம்


மாயயை நீக்குவது அவன் திருநாமம்

அனுபல்லவி

தினமும் காப்பது அவன் கைவேல்

தீரா வினைகளை தீர்க்கும் கதிர் வேல்

சரணம்
எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்

பண்ணும் பூஜையானால் பலன் உண்டாகும்

மண்ணில் நாம் படும் துயர் தீரும்

மாறா இன்பமும் மனதினில் சேரும்

உள்ளம் உருகி திரு.நெய்வேலி சந்தானகோபாலன் பாடும் பாடலை

நீங்களும் கேட்டுப் பருகஇங்கே கிளிக் செய்து அனுபவியுங்கள்

Monday, July 02, 2007

50. உணவினிலே நஞ்சு வைத்தார்



1986ல வந்த படத்திலிருந்து ஒரு பாட்டு இந்தப் பதிவில் பார்க்கலாம். விஜயகாந்த்தும் அம்பிகாவும் இணைந்து நடித்த படம். இந்தப் படத்தில் நம்பியார், டெல்லி கணேஷ், வடிவுக்கரசி, செந்தில், ஜெய்கணேஷ் ஆகியோரும் உண்டு. இறையருட் கலைச்செல்வர் என்ற பட்டம் கொண்ட கே.சங்கர் இயக்கத்தில் வந்த படம் வேலுண்டு வினையில்லை. அந்தப் படத்தில் ஒரு பாட்டு. உணவில் நஞ்சு வைத்து விடுகிறார்கள். அப்பொழுது வரும் பாடல் இது. கேட்போமா? மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் யேசுதாஸ் பாடிய பாடல். மிகவும் அருமையான பாடல்.



உணவினிலே நஞ்சு வைத்தால்
நீலகண்டன் மகனே..........................
உணவினிலே நஞ்சு வைத்தால்
நீலகண்டன் மகனே
உன் ஓங்காரம் அதையழிக்கும்
யாரறிவார் குகனே

வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா...........
வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா............

(உணவினிலே நஞ்சு வைத்தால்

பொன்முகமும் உன்னருளும் பார்த்திருந்தேன் வேலா...............
பொன்முகமும் உன்னருளும் பார்த்திருந்தேன் வேலா
ஒரு பெண் வடிவில் இங்கு வந்து திகைத்து விட்டேன் தேவா

கல் நெஞ்சம் கயமைத்தனம் வஞ்சனைகள் எங்கும்
பெரும் கடல் போலத் தன்னலமே கரைமீறிப் பொங்கும்
கடல் போலத் தன்னலமே கரைமீறிப் பொங்கும்

(உணவினிலே நஞ்சு வைத்தால்

மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா............
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா
அந்த மனங்களையும் நீ மாற்றக் கூடாதா தலைவா

அன்பை விட்டு மற்றதற்கே அலைகின்ற ஜனங்கள்
யாரை அழித்தேனும் தான் வாழத் துடிக்கின்ற நரிகள்

(உணவினிலே நஞ்சு வைத்தால்

சாதனையாய் நினைத்தபடி சோதிக்கிறார் உன்னை
இவர் சதிராட்டம் காண்பதற்கோ அனுப்பி வைத்தாய் என்னை

பாதகத்தால் பணவெறியால் கொல்ல வந்தார் பெண்ணை
இந்தப் பாவிகளே கெடுக்கின்றார் நீ படைத்த மண்ணை
இந்தப் பாவிகளே கெடுக்கின்றார் நீ படைத்த மண்ணை

(உணவினிலே நஞ்சு வைத்தால்


அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 21, 2007

அன்பிற்கு இல்லை பஞ்சம்!


=================================================
அன்பிற்கு இல்லை பஞ்சம்!

இன்று ஷஷ்டி தினம். எம்பெருமான் முருகனுக்கு
உகந்த நாள். முருகனின் பெருமையைச் சொல்லும்
பாடல் ஒன்றின் வரி வடிவத்தையும் ஒலி வடிவத்
தையும் பதிவிட்டு மகிழ்கின்றேன்.

அன்பர்கள் அனைவரையும் பாடலைப் படித்தும்,
கேட்டும் இன்புற வேண்டுகிறேன்.

"உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை -
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளது பாடலின்
முத்தாய்ப்பான வரிகளாகும்
-----------------------------------------------------------
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்

பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்

சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"

பாடல் ஆக்கம்: கவிஞர். பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடியவர்கள்: சூலம்ங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR.சுப்பையா
கோயமுத்தூர்.
===========================================


Get Your Own Music Player at Music Plugin

Sunday, June 03, 2007

48. இளையராஜாவே எழுதிப் பாடியது

சில சமயங்களில் சில பாடல்கள் மிகவும் அபூர்வமாக அமைந்துவிடுவதுண்டு. ஆமாம். மிகப் பிரபலமான பாடகராக இருப்பார். மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பார். ஆனால் ஒரு பாட்டுதான் இருவரும் இணைந்து வெளிவந்திருக்கும்.

முருகன் மேல் பல பாடல்கள் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இவர் இளையராஜா இசையில் இரண்டே பாட்டுகள்தான் பாடியிருக்கிறார். பத்ரகாளி படத்திற்காக ஒன்று. "ஆடுகிறாள் ஓடுகிறாள்" என்ற பாடல். தாய் மூகாம்பிகை படத்திற்காக ஒன்று. இது வேறொரு விதத்திலும் அபூர்வப் பாடல். மெல்லிசை மன்னர், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூவரும் இணைந்து பாடிய ஒரேயொரு பாடல். அதுவும் இசைஞானியின் இசையில்.

இன்னொரு அபூர்வப் பாடல் இளையராஜாவின் இசையில் உண்டு. ஆம். "சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ" என்ற பாரதியார் பாடல். கவரிமான் என்ற திரைப்படத்திற்காக வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல். வெள்ளிமலை மன்னவா என்று கணீர்க்குரலில் பாடிய இவர் இளையராஜாவின் இசையில் பாடிய முதற்பாடல் இது. இந்தப் பாடலின் எம்.பி.3 என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இதற்குப் பிறகு குணா படத்திற்காக நான்கு வரிகள் பாடினார்.

இப்படி ஏதாவது காரணங்களால் அபூர்வப் பாடல்கள் அமைந்து விடுவதுண்டு. பல இசையமைப்பாளர்கள் இசையில் இப்படிப் பல பாடல்கள் இருந்தாலும் இப்பொழுது பார்க்கப் போகும் பாடல் இளையராஜாவின் பாடல். ஆம். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய....என்ன நிறைய பாடல்கள் இருக்கின்றனவா? சரி. முருகன் பாடல்? இசைஞானியின் இசையில் முருகன் பாடல் என்றால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மகராசன் படத்தில் ஒரு பாடல். அது தவிர அவரது கீதாஞ்சலி என்ற இசைக்கோர்ப்பில் உள்ள இந்தப் பாடல். "முருகனை நினை மனமே" என்று அவர் பாவத்தோடு பாடிய பாடல். அதைத்தான் இப்பொழுது கேட்கப் போகிறோம். கேட்கலாமா?








முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஒவ்வொரு செயலிலும் பெருமை கொடுப்பவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும்
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
அவன் விழி அசைவினில் கலைகளும் மலர்ந்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

கேட்டீர்களா? இது போன்ற அபூர்வப் பாடல்கள் இருந்தால்...மறக்காமல் மயிலனுப்பவும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: Happy Birthday! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

வைகாசி பொறந்தாச்சு. மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?

பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்); அதில் ஒரு நடனக் காட்சி. ஆடுறவங்க பேர் எல்லாம் தெரியாது...
ஆனா அந்தப் பாட்டில், மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்!

இன்று வைகாசி விசாகம் (May 30, 2007)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு?
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்!
இறைவனின் திருவடிகள் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்!
அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் ஒரு அழகன்.
அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம சுப்பையா சாரைத் தான் கேட்கணும்)

உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்று திருப்புகழும் "விசாகன்" என்றே கொண்டாடுகிறது!
அவன் தான் விசாகன்-முருகன்!


அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு முருகா!

(பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!

ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)





சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)





படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா

Monday, May 21, 2007

கொஞ்சி கொஞ்சி வா குஹனே....

முருகனை பலவிதமான ரூபங்களில் பார்த்து அனுபவித்துள்ளார்கள் அவனது பக்தர்கள்.அதுவும் குழந்தை வடிவில் பாலமுருகனாக அழகு கொஞ்சும் தமிழில் வர்ணித்தவர் திரு பெரியசாமித் தூரன் அவர்கள்.இந்தப் பாட்டைக் கேட்டாலே முருகன் தவழ்ந்து வருவது போல இருக்கும்.கொஞ்சிக் கொஞ்சி முருகனை அழைத்து நம்மையெல்லாம் அவனிடமே கொண்டு சென்றுவிடுகிறார்.பாடல் நன்றாக இருந்தாலும் அதைப் பாடுபவரும் நன்றாக பாடவேண்டுமே. அந்தக் குறையும் இல்லாமல் நீக்குகிறார் திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ தன்
இனிய குரலில் அருமையாகப் பாடி.பாடலின் வரிகள் கீழே படிக்கவும்.
ராகம்:- கமாஸ் தாளம்:- ஆதி
பல்லவி

கொஞ்சி கொஞ்சி வா குஹனே
முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..)

அனுபல்லவி

அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச
கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..)

சரணம்

பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும்
அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும்
கொஞ்சி மகிழ் குமரா முருகா
அஞ்சுடர் வடிவேலா
தஞ்சம் உன்னை அடைந்தேன்
மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)


பாடலை கேட்க இங்கே "> கிளிக் செய்யவும்

Friday, May 18, 2007

கந்தன் காலடியை வணங்கினால்...!



கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள் !


பாடல்: கந்தன் காலடியை வணங்கினால்
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்


நன்றி : கோ.கணேஷ்
துள்ளலான இசையோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல் இது.

Wednesday, May 16, 2007

சிங்கார வேலவன் வந்தான்


இன்று கிருத்திகை. முருகனைப் பற்றி நினைக்கவேண்டாமா? அவன் எப்பேற்பட்ட வேலவன். சிங்கார வேலவன். வேலவனா யார் இவன்? என்று கேட்டால் வேரிமலர்ப்பதமும் வேலும் அயிலும் மின்ன வெற்றி மயிலான் நிகர் அற்ற அழகன் இவன் என்றும் கூறலாம்.
முருகன் அருளில் அன்போடு அழைத்தால் எப்படி வருவான் தெரியுமா? படித்தும் கேட்டும்தான் பாருங்களேன்.
ராகம்:- ஆனந்தபைரவி தாளம்:- ஆதி

பல்லவி

சிங்கார வேலவன் வந்தான் எந்தனை ஆள
சிங்கார வேலவன் வந்தான் (சிங்கார)

அனுபல்லவி

பொங்காதர வோடு அடங்கா மகிழ்வோடும்
பெருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினியடை
துங்கவடிவினொடு (சிங்கார)

சரணம்

ஸ்கந்தன் பணியும் அன்பர் சொந்தன் கருணை கொள்
முகுந்தன் மருகன் முருகன்
முந்தன் வினை பயந்த பந்தந்தொலைத்து அருளை
இந்தா இந்தா என்று ஏழைகுடி முழுதும் வாழ
அருள்புரிய (சிங்கார)


என்ன ஒரு வார்த்தைஜாலம் பாருங்கள்
ஸ்கந்தன் சொந்தன் முகுந்தன் பந்தம் இந்தா இந்தா
யார் இந்த மாதிரி முருகனை அனுபவிக்க முடியும்?
நம்ப பாபநாசம் சிவன்தான் கொஞ்சு தமிழில் கொஞ்சுகிறார்
திருமதி. சௌமியா அவர்கள் தன் இனிய குரலில் பாடிய இந்தப் பாடலைக் கேட்க<"இங்கே கிளிக் செய்யவும்">

Sunday, May 13, 2007

043. தாய்ப்பால் கொடுத்தாள்



குமரகுருபரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பாண்டி நாட்டில் பிறந்த தமிழ் முத்து. ஊமைக் குழந்தையாய் இருந்து திருச்செந்தூர் முருகப் பெருமான் அருளால் பேசவும் பாடவும் அருள் பெற்ற கவி. "பூமேவு செங்கமலம்" என்று தொடங்கும் கந்தர்கலி வெண்பா எழுதியவர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எழுதியவர். இவர் திருமலை மன்னருக்குச் சம காலத்தவர்.

கவியரசர் கண்ணதாசன்
ராதா ஜெயலட்சுமி
இவரைப் பற்றிய சிறிய வரலாற்றை ஆதிபராசக்தி என்ற திரைப்படத்தில் காட்டுகிறார்கள். முருகப் பெருமான் அருளால் அவர் பேசும் திறன் பெற்றதும் பாடும் பாடலே இந்தப் பதிவில் நாம் காணப் போகும் முருகனருள் பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்து ராதா(ஜெயலட்சுமி) அவர்கள் பாடிய அருமையான பாடல். (ராதா ஜெயலட்சுமி அவர்கள் தெய்வம் என்ற திரைப்படத்தில் திருச்செந்தூரில் போர் புரிந்து என்ற அருமையான பாடலையும் பாடியுள்ளார்கள்.)

சந்தநயம் மிகுந்து தமிழ்வளம் கொழிக்கும் இந்தப் பாடல் முருகன் அடியவர்கள் கேட்கவும் பாடவும் மிகப் பொருத்தமானது. இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம். அதற்கு cooltoadல் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். ஓசிதான். வைத்துக்கொள்ளுங்கள். அங்கு வேறு நிறைய நல்ல பாடல்களும் கிடைக்கின்றன.

தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணைத் தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்
வாய்ப்பாயால் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன் ஆடும் மயில் வேலன் அருள்

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
கலைஞானக் கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்


அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 01, 2007

காலமெல்லாம் இனிக்கும் காட்சி!

===========================================
காலமெல்லாம் இனிக்கும் காட்சி!

ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி காலமெல்லாம்
இனிய நினைவாக அவர்கள் மனதில் நிற்கும்.

ஆனால் முருகபக்தர்களுக்குக் காலமெல்லாம் மனதில்
நிற்கும் இனிய காட்சி ஒன்று உண்டு என்றால் அது
வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - முருகன்
அமர்ந்திருக்கும் காட்சிதான் என்பதில் எந்தவித
ஐயப்பாடும் இல்லை!

அப்படிப்பட்ட காட்சி ஒன்றை மனதை நெகிழ்விக்கும்
விதமாகக் கவிஞர் ஒருவர் பாடலாக்கிக்
கொடுத்துள்ளார். பாடலைப் பதிவிட்டுள்ளேன்.
அன்பர்கள் அனைவரையும் படித்துமகிழ வேண்டுகிறேன்!

-----------------------------------------------
"வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி


(வேல்வந்து)

பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி


பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி


வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!


(வேல்வந்து)"
--------------------------------------------------
பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா

Sunday, April 29, 2007

ஷண்முகநாதா சரணம்


சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டும் பணிந்தாலே போதும் என்கிறார் அருணகிரிநாதர். அதற்கே மனம் மகிழ்ந்து முருகன் அருள் பாலிப்பான். அப்படி இருக்கும்போது பழனி முருகனுக்கு பால்காவடி புஷ்பகாவடி,பன்னீர்காவடிகளை கால்நடையாகவே நடந்து எடுத்துச் செல்லும் பக்தர்கள் போடும் சரணங்கள் எத்தனை தெரியுமா.கேட்டுத்தான் பாருங்களேன்!

ஷண்முகநாதா ஷண்முகநாதா
ஷண்முகநாதா சரணம்
சரவண் பவனே சக்தியின் மகனே
ஷண்முகநாதா சரணம்

சித்திரை நிலவே தத்துவப் பொருளே
செண்பக மலரே சரணம்
செந்திலை ஆளும் சுந்தர வடிவே
சேவடி தொழுதோம் சரணம்

முத்திரைப் பவுனே வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே சரணம்
மூவிரு முகமே பூவிதழ் மனமே
முடிமணி தொழுதோம் சரணம்

செங்கனிச்சுவையே திங்களின் ஒளியே
சிரித்திடும் எழிலே சரணம்
சிந்தனைக் கடலே சந்தனக் குடமே
சீரடி தொழுதோம் சரணம்

பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே
பார்வதிமகனே சரணம்
பழனியம் பதியின் அழகிய மதியே
பணிவுடன் தொழுதோம் சரணம்

மங்கையர் கனவே சங்கரன் மகனே
மயிவா கனனே சரணம்
மங்கலம் தங்கிடப் பொங்கிடம் அருளே
மலரடி தொழுதோம் சரணம்

பங்கய மலரிதழ் தங்கிய திருவே
பரமனின் குருவே சரணம்
பன்னிரு விழியே புன்னகை மொழியே
பரிவுடன் அருள்வாய் சரணம்

Thursday, April 26, 2007

முத்தமிழ் எப்போது பிறந்தது?


==========================================

முத்தமிழ் எப்போது பிறந்தது?

"முத்தமிழ் எப்போது பிறந்தது?" என்று கேட்டவுடன்
ஒரு கவிஞர் பதிலை எவ்வளவு அழகாகச்
சொல்கின்றர்ர் பாருங்கள்.

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தாராம்
முத்தமிழ் பிறந்ததாம்!
ஒரு சிறந்த பாடலைப் பதிவிடுகிறேன். படித்து இன்புற
வேண்டுகிறேன்
-------------------------------------------------------------------

வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
------வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
------பால்போல் தெரியுதடி
கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
------விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
------சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
------மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
------வேலனைத் தேடுதடி!
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
------முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
------திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
------ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
------பன்னிரு கைகளடி

பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா

Thursday, April 19, 2007

முருகனுக்கு ஒரு நாள் திருநாள்



முருகனுக்கு ஒருநாள் திருநாள். ஆம் இன்று கார்த்திகைத் திருநாள்.
ஆமாம் இன்று திருமதி.தாரா நடராஜன் எழுதி திரு. ஒ.ஸ்.அருண் பாடிய இந்தப்பாடலைக்கேட்டுக் கொண்டு இருந்தேன்.மிக அருமையான பாடல்.
நீங்களும் படியுங்கள்.இசை வடிவத்தில் போட அனுமதியில்லை.
ராகம்:-- யமுனா கல்யாணி தாளம்:--ஆதி
பல்லவி
வர மனம் இல்லையா முருகா,,
வரம்தர மனம் இல்லையா என்னிடம்....(வர மனம்)
அனுபல்லவி
பிறவிப்பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன்மைந்தா குறைதீர்க்கும் குமரா... (வர மனம்)
சரணம்
வாழ்க்கை எனும் கடலிலே மூழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம் (வர மனம் இல்லையா)
இதில் சில உண்மைகள் உண்டு. இந்தப்பாட்டை கேட்டது உண்மை.
மேலே இடப்பட்டுள்ள முருகனின் பிரதிமை சிங்கப்பூரிலிருந்து இன்று என்னிடம் வந்தது உண்மை.இதை அனுப்பித்தவர் வேறு யாருமில்லை பிறைசூடன் மைந்தன் (சந்திரசேகரனின் மைந்தன்தான் ). முருகன் சிலை எனக்கு வேண்டும் எனற என் குறைதீர்த்த குமரன். பாடியவர் பெயரும் அருண்.அனுப்பியவர் பெயரும் அதேதான்
சரி இன்றையப் பாடலை பார்த்து,படித்து, கேட்ப்போமா.
ராகம்:-- சாவேரி தாளம்:- மிஸ்ர சாபு.
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உன்தன் உள்ளம் வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ( முருகா முருகா)
அனுபல்லவி
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்.. (முருகா)
சரணம்
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பே வடிவம்கொண்ட அய்யா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள்செய்வாய்
செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவனே...(முருகா முருகா)
என்ன ஒரு அழகான பாடல். பலமுறை சொல்லவேண்டாமாம். அவன் பெயரை ஒருதரம் சொன்னாலே போதுமாம் விரைவாக ஓடி வருவான் அருள்செய்ய. அன்பே வடிவம் கொண்ட அய்யா உனக்குகூட என் பிழையால் கோபம் வந்ததா.என் அந்தக் குறையைப் பெரிது படுத்தாமல் பொறுத்து அருள் செய்ய உள்ளம் உருகி வா முருகா திருச்செந்தூரில் இருப்பவனே என்று உள்ளம் உருகி வேண்டுகிறார் திரு. பெரியசாமி தூரன் அவர்கள். பாடல் அமைந்த ராகம் சாவேரி. இரக்கத்க்கென்றே பிறந்த ராகம் சாவேரி.உள்ளத்தை உருக்கி மனக்கவலையை போக்கவல்ல ராகம் இது.
மிக அழகாக இந்தப்பாடலை திருமதி.பம்பாய் ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்கள் பாடியுள்ளார்கள்
பாடலை கேட்க < "இங்கே கிளிக்"> செய்யவும்

Friday, April 13, 2007

தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!


=====================================================
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!

இன்று இனிய தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது!
தமிழ்க்கடவுள் தணிகைவேலனுக்கு
ஒரு தமிழ்ப் பாட்டைப் பதிவிட்டு மகிழ்கிறேன்
--------------------------------------------------------------------------------

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்!

ஆறெழுத்து மந்திரத்தை தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே - அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!

கந்தனடியை நினைத்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம்ஆறுமே - பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாறுமே!

இந்த அற்புதமான பாடலை எழுதியவர்:
திருமதி செளந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்
(மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின்
மாமியாராவார்கள் இந்த அம்மையார்)
=============================================
சர்வஜித்து ஆண்டு

வருகின்ற புதுவருடம் வளமாக இருக்கட்டும்
தருகின்ற நன்மையெல்லாம் தனமாக நிறையட்டும்
பெருகின்ற பொருளெல்லாம் பேருவை கொடுத்திடவே
அருகிருந்து உதவிடுவான் அழகுமயில் வேலவனே!

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

==================================

கந்தன் கருணை புரியும் வடிவேல்

வேலை வணங்குவதே நம் வேலை


==================================================================

உலகில் உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.
திருத்தணிகைக்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்டு.வலிய அசுரர்கள் மாளவும் நற்குணமுடைய தேவர்கள் வாழும்படியும் விரைந்து செல்லுகின்ற கூரிய வேலாயுதத்தை உடையவன் முருகன். எம்குலதெய்வமானஅந்த குன்றுதோறாடும் முருகனின் வெற்றி வேலைப் புகழ்ந்து பாடிய பாடல் இது.குஹனால் இயற்றப்பட்டது.
===================================================================
ராகம்:-பீம்பிளாஸ் தளம்:-தேசாதி


பல்லவி
கந்தன் கருணை புரியும் வடிவேல்

அனுபல்லவி

அருளொலியோடு ஆவி கலந்தே
அன்பும் ஆற்றலும் அறிவும் நயந்தே
இருசுகம் இருந்தே இடர்கள் களைந்தே
இன்புறச் செய்திடும் இறைவன் கைவேல்.....(கந்தன் கருணை...)

சரணம்

வெம்பகைகொல் வேல் வெற்றிதரும் வேல்
வேதப் பொருளை விளக்கும் மயில் வேல்
நம்பும் அடியார் நலம் வளர் கொள்வேல்
நங்கை வள்ளியின் திரு நாயகன் கை வேல்...(கந்தன் கருணை...)

குன்றுதோராடும் குமரன் அருள் வேல்
கோலமயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்
அணடம் வேண்டிடும் ஆதிமகள்
நம் அன்னை பராசக்தி அருட்சுடர் வேல்...(கந்தன் கருணை....)
====================================================================
இந்தப் பாடலை இயற்றியவர் திரு. குஹன் அவ்ர்கள். இதற்கு மெட்டமைத்து உயிர்கொடுத்ததும் பின்னர் அதைப்பாடி பிரபலப் படுத்தியவர் மறைந்த கான கலாதர, ஸ்வரஸாம்ராட்.திரு. மதுரை மணிஅய்யர் அவர்கள். அவர் இந்தப்பாட்டை பாடாத கச்சேரியே கிடையாது. அப்படியே அவர் பாடாவிட்டாலும் ரசிகர்கள் இதைக் கேட்காமல் கலைந்து போகமாட்டார்கள்.


அவர் பாடிய பாட்டை கேட்க இங்கே '><"கிளிக் செய்யவும்">

சர்வஜித்வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற வெற்றிவேல் முருகன் அருள்வான்
=========================================================================

Monday, April 09, 2007

36. சொல்லச் சொல்ல இனிக்குதடா!

சில பேரின் பேரைச் சொன்னாலே நமக்கு பத்திக்கிட்டு வரும்!
ஆனா பாருங்க, இங்க முருகப் பெருமான் பேரைச் சொல்லும் போது கூட, நமக்குப்
பத்திக்கிட்டு வருது = பத்தி(பக்தி) கிட்டும் வருது! :-)

சொல்லச் சொல்ல எப்படி ஒரு பொருள் இனிக்கும்?
திருப்பதி லட்டு ஒரு விண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்க!
எப்போது இனிக்கிறது? பட்டவுடன் சற்றே தான் இனிக்கிறது!

ஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,
ஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது!

அது போல, பெருமாளிடமோ, முருகனிடமோ, இறைவனிடமோ, முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி இல்லை, எல்லாம் கரைந்து விட்டோம் என்னும்படிக்கு, சுவை பற்றிக் கொள்கிறது!
தொடக்கத்தில் சும்மானாங்காட்டியும் அவன் பேரைச் சொன்னாலும்,
பின்பு அதுவே, சொல்லச் சொல்ல இனிக்குதடா!



பாலராஜன் கீதா அனுப்பிய MP3 இங்கே!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)




படம் : கந்தன் கருணை
இசை : K.V. மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
நடிப்பு: சாவித்திரி, ஜெமினி கணேசன்
இயக்கம்: ஏ.பி. நாகராஜன்

Thursday, April 05, 2007

தீராத வினையைத் தீர்ப்பதெது?

===========================================

தீராத வினையைத் தீர்ப்பதெது?

ஒரு பக்திச் சொற்பொழிவரங்கம்.

சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப்
பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு ; கரங்கள்
பன்னிரெண்டு. அறிவீர்கள்! கால்கள் எத்தனை?"

சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான்.

"கால்கள் இரண்டுதான்!"

"ஏன் காலகள் மட்டும் இரண்டு?"

அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு
அரங்கிலிருந்து பதில் இல்லை!

அவரே தொடர்ந்து சொன்னார்.

"பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச்
சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன்
பன்னிரெண்டு காலகள் இருந்தால் எந்த இரு
கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று
தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான்
ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும்,
கால்கள் இரண்டுதான்!"
--------------------------------------------------------------------------
நோய் என்பது தீர்க்ககூடியது. பிணி என்பது
தீர்க்க முடியாதது. நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணியை (chronic Disease)
குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்
குணப்படும்.

வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும்
இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம்
அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும்
முற்பிறவியில் நாம் செய்த செயல்

ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை
தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை
தன்னைச் சேர்க்கும் என்று துன்பத்தில் உழலும்
மனிதர்க்கெல்லாம் வழி காட்டும் முகமாக
கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய பாடலை
இன்று மகிழ்வுடன் பதிவிடுகிறேன்
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

-------------------------------------------------------------------------
பாடல் ஆக்கம்:: கவிஞர் திரு. வாலி
பாடியவர்:: திரு. T.M செளந்தர ராஜன்
இராகம்: மலையமாருதம்
தாளம்: ஆதி
-------------------------------------------------------------------------
பல்லவி

"ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

அநுபல்லவி

ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

சரணம்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

மாமனைப் போலிரு மாதுடன் கூடி
மாமலையில் பழமுதிர் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்து

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்"
----------------------------------------------------------------------

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

06.04.2007 5.45 A.M

Sunday, April 01, 2007

காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!

பழனியிலே இன்று பங்குனி உத்திரம்! வழியெங்கும் காவடிகள் காவடிகள்!
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்,
முருகா என்று ஓதுவார் முன்!
அது போல், பலகாலும், பார்க்கும் இடமெங்கும், காவடிக் கடலோ என்று எண்ணும் படிக்கு, அரோகரா, அரோகரா என்று காவடிகள் ஆட்டம்!

அதுவும் எத்தனை எத்தனை காவடிகள்!
பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி!
மேலும் பல காவடிகள் என்னென்ன என்று சொல்லி உதவுங்கள்!

தைப்பூசக் காவடிகளை மிஞ்சும் பங்குனி உத்திரக் காவடிகள்!

வலப் பக்கம் காவடி, இடப் பக்கம் காவடி!
முன்னே காவடி, பின்னே காவடி!
மேலே காவடி, கீழே காவடி!
இப்படி எங்கெங்குக் காணினும் காவடியடா!

குடும்ப பாரம் சுமக்கும் அன்பான எளிய மக்கள், இன்று அன்பு ஒன்றே சுமந்து எடுத்து வரும் காவடிகள்!
காவடியின் மகிமை தமிழகம் மட்டுமா பேசும்? ஈழம், சிங்கை, மலேசியா, இன்னும் தமிழ் இருக்கும் இடமெல்லாம் அல்லவா பேசும்!
இந்த இனிய நாளில், காவடிப் பாடல் ஒன்றைப் பாடி, காவடியானைப் போற்றுவோம்!





உன்னி கிருஷ்ணன் பாடுவது, இங்கே!

சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்

(ஜகம்=உலகம்; புய=புஜம்=தோள்; வரை=மலை
ஜகம் மெச்சிய மதுரமான கவிமாலை; அதைத் தன் மலை போன்ற அகன்ற தோளில் சார்த்திக் கொள்கிறான் முருகன்)

வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே

(கழுகாசலம்=கழுகு மலை; அந்த மலையின் பதியான முருகன் கோவிலின் வளத்தை நான் சொல்கிறேன் பெண்ணே!)

சன்னிதியில் த்வஜ ஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்

(த்வஜ ஸ்தம்பம் = கொடி மரம்; கும்பம்=குடம்; சலராசி=கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது )

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

(காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்கள் செவியையே சென்று அடைக்கும்!)

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.

(நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கி வருகிறார்கள்;
முருகக் கனலில் உருகிய மெழுகாய் வரும் பக்தர்கள் கதி காண்பார், இன்பம் பூண்பார்)


வரிகள்: அண்ணாமலை ரெட்டியார்
ராகம்: காவடிச் சிந்து
தாளம்: ஆதி

தமிழிசைக்குப் பெரும் பணி செய்தவர் அண்ணாமலை ரெட்டியார்.
அவரின் காவடிச் சிந்து பாடல்கள், மிகவும் புகழ் பெற்றவை. எளிய தமிழ்! அதே சமயம் துள்ளும் தமிழ்!
சென்னிக்குளம் அவர் சொந்த ஊர். அங்குள்ள முருகன் மேல் அவர் பாடிய சில பாடல்களில் அப்படியொரு சந்தம்!
பாடும் போதே, கால்கள் தானே ஆடி விடும்!

நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள் தெரியும், கால்கள் தானே ஆடுகிறாதா என்று! :-)
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் காக்கும் அடியா!

அரோகரா! அரோகரா!!


நீலக்கடல் ஓரத்திலே...




நீலக் கடல் ஓரத்திலே ஆலயம் அமைந்ததடி
கோலக் கிளிகள் குயில்கள் குமரா எனக் கூவுதடி(நீலக்கடல்)

வேலன் ஏறும் நீல மயில் நாலுவேதம் ஓதுமடி
பாலன் தன் தந்தை ஹரனுக்குபதேசம் செய்தானடி (நீலக்கடல்)

குறுநகை தவழும் குறுமுனி வதனம்
ஈராறு கரங்களும் இருள்வினை இருள் போக்கும்
குவலயம் போற்றிடும் குருபரன் சரணமடி
குறுநகை தவழ் வள்ளி குறத்தி மணவாளனடி
ஒருதரம் சரவண பவ வென உரைப்போர்க்கு
தருணமே குறை நீங்கி
இம்மை மறுமை பயன் அருள (நீலக்கடல்)

பதிவர் ஷைலஜா பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்தப் பாடலைப் பாடி அனுப்பினார்.

Saturday, March 31, 2007

கனிமொழியால் கற்றவை!

============================================

கனிமொழியால் கற்றவை!

இராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி
பாடியவர்: திரு.T.M.செளந்தரராஜன்
பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி

பல்லவி

"கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

அநுபல்லவி

அற்புதமாகிய அருட் பெரும் பொருளே
அருமறை தேடிடும் கருணையாம் கடலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

சரணம்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின்செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!"

-----------------------------------------------------------------------
இன்று பங்குனி உத்திரம்.
அதோடு நிதியாண்டின் முதல் நாள்.
புதுக் கணக்கு எழுதப் பலர் பழநிக்குச் செல்வார்கள்.

எனக்கு எல்லாக் கணக்கும் அவரோடுதான்!
அந்தப் பழநியம்பதியில் தண்டாயுதத்துடன்
நிற்கும் பழநியாண்டவரோடுதான்.

அவர் புகழைப் பாடுவதும் மட்டும்தான்
என்வேலை. என்னுடைய வரவு செலவுகளை
யெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது!

அதனால் அவர் புகழ் பாடும் இந்தப் பதிவிற்கு
வந்து என் புதுக் கணக்கை மேற்கண்ட
பாடலுடன் துவக்கியுள்ளேன்.

முருகனருள் முன்னிற்கும் இந்தப்பதிவின்
வெளியில் நின்று இதுவரை அவர் புகழ்
பாடும் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தவனைக்
கதவைத் திறந்து உள்ளே விட்டு என்னையும்
முருகனின் புகழ் பாட அனுமதித்த
நண்பர் சிபி அவர்களுக்கு என் நன்றி!

அன்புடன்,
SP.VR..சுப்பையா
1.4. 2007

Friday, March 30, 2007

வா... முருகா... வா... வடிவழகா வா...


முருகனைப் பற்றிய பல பாடல்கள் இருந்தாலும் குறிப்பாக இந்தப் பாடல் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது ஏன் என்றால் அதற்கு காரணம் இரண்டு. ஒன்று இதை இயற்றியவர் மறைந்த என் நண்பர் திரு.' ஸ்பென்சர்' வேணுகோபால். மற்றொன்று மனதை மயக்கும் தமிழின் இனிமை.தமிழ்க்கடவுளான முருகனுக்கு அவர் அளித்த தமிழ்ச்சொல் மாலை இது.இந்தப் பாடலை கேட்ட பின்பும் அந்த முருகனுக்கு வர மனமில்லாமல்தான் இருக்குமா? அல்லது வரம் தரத்தான் மன்மில்லாமல் இருக்குமா?

இந்தப் பாடலுக்கு அமைத்திட்ட ராகமோ 'பேகடா' தாளமோ ருபகம்
பல்லவி

வா முருகா வா வடிவழகா ஷண்முகா வா வா (முருகா வா)

அனுபல்லவி

மாமறைப் பொருளே நீ வா வரையில்லாத அருளே வா
தேமதுரச் சுவையே வா தீரா என் வினை தீராய் வா .........(வா முருகா)

சரணம்

செய்தவப்பயனே சிவகுரு தெய்வமே நீ வா
சீலனே சிவகாமி பாலனே ஸ்ரீவள்ளிலோலனே வா
பொய்கைதரு மெய்ப்பொருளே போதஞான வேத சுடரே வா
புண்யதீன சரண்ய திவ்ய லாவண்ய ஸ்ரீசுப்ரமண்ய காருண்யா வா (வா )
(வா முருகா)
திருமதி எம்.எல். வஸந்தகுமாரி பாடிய படலைக் கேட்க இங்கே'><"கிளிக்"> செய்யவும்

Friday, March 23, 2007

031: குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!!!



குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் (குன்றத்திலே)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு வேல் வேல்!



பாடியவர்: ஏ.ஆர். இரமணி அம்மாள்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: தெய்வம்

Saturday, March 10, 2007

கலியுக வரதன் காட்சியளிப்பது பழனியிலே!



நண்பர் ப்ரசன்னா இப்பாடலை முருகனருள் பதிவில் இடுமாறு சொல்லி மின்னஞ்சலில் பாடல் வரிகளையும் பாடலின் சுட்டியையும் அனுப்பியிருந்தார். இப்போது தான் பதிவில் இட நேரம் கிடைத்தது. மிக அருமையான பாடல்.

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் (கலியுக)

பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள், சௌம்யா
ஆக்கம் : பெரியசாமி தூரன்
ராகம் : ப்ருந்தாவன சாரங்கா
தாளம் : ஆதி

Wednesday, March 07, 2007

சித்தம் இராங்கா தேனையா செந்தில் வேலையா..


கருணைகூர் முகங்கள் ஆறும் கொண்டவன் அல்லவா முருகன். அதனால்தான் மொத்த இரக்கமும் அவனிடத்தில் இறக்கம் கொண்டுள்ளது.ஆனாலும் தன் மேல் முருகன் இரக்கம் காட்டவில்லையே என்று திரு. பாபநாசம் சிவன் அவருடைய தனித்தமிழில் உள்ளம் உருகிப் பாடுகிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட ராகமும் இரக்கம் பற்றிய ராகமான ஸஹானா தான்.

ராகம்:- ஸஹானா தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

சித்தம் இரங்காதேனையா செந்தில்வேலையா--நின்....(சித்தம்)

அனுபல்லவி

சித்தம் இரங்கதேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின்.(சித்)

சரணம்

பக்தர்க் கிரங்கும் தீனபந்து என்றுன்னை நம்பி
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்று

உலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைத்துளி இருந்தால்
வையம் வியக்க ராமதாஸன் தன்னை ரக்ஷிக்க நின்...(சித்தம்)


திருமதி.சௌமியா அவர்கள் பாடிய இந்தப்பாட்டை கேட்க இங்கே "> <'கிளிக்"> செய்யவும்
திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிய இந்தப் பாடலைக் கேட்க இங்கே"'><"கிளிக்>" செய்யவும்

Monday, February 26, 2007

028: குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது


குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது
தணிகை மலை தென்றலும் தாலாட்டு பாடுது
செந்தூரின் அலை ஓசை ஸ்ருதியாக மாறுது
(குமர மலை குயிலினம்)

தெள்ளு தமிழ் பாட்டிலே புள்ளி மயில் ஆடுது
வள்ளலவன் பேரைத் தினம் சேவலினம் பாடுது
சரவணபவாவென்ற சங்கீதம் பரவுது
ஆறுபடை வீடுடைய எழில் வேந்தன் நாமத்தை
(குமர மலை குயிலினம்)

பழமுதிரும் சோலையில் வண்டினம் முழங்குது
அழகன் அவன் அருளமுதம் தேனாகப் பாயுது
வள்ளியுடன் குஞ்சரியின் மணக்கோலம் காணுது
அன்னை உமை தந்தை சிவன் அருளாசி கேட்குது
திருமுருகன் நாமம் அதை பக்தியுடன் பாடும் போது
பழனி மலை பஞ்சாமிருதம் நாவினிலே இனிக்குது
(குமர மலை)

இராகம்: மாண்ட்
தாளம்: கண்ட சாபு
பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: கே.எஸ். இரகு


பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Monday, February 12, 2007

027: சிங்கார வேலனே தேவா - ஒரு பின்னணி!

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த, ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே சாந்தா!

பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள். கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது.
நாதஸ்வரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சியாரின் வாசிப்பு அப்படி!

அப்படியே காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம்,
பாலைய்யாவின் கன ஜோரான வாசிப்பு பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் அழகே தனி!

karaikurichi

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, தெரியுமா?
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை!
அவர் போட எண்ணிய பாட்டு, தேவாரப் பாடல்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு...

இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம், 'சிங்கார வேலனே தேவா' என்கிற மெட்டில்.

பின்னர் யாரோ ஒருவர், வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, ஜானகியம்மா வரவழைக்கப்பட்டார்.
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது; கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் "சிங்கார வேலனே தேவா" என்று எழுதினார். ஜானகியம்மா பாடினார்.
ஆனால் காருக்குறிச்சியார் ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை.
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்.
ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா? அத்தனை நேர்த்தி.

(ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டது)



சரி, நாம் சிக்கல் சிங்காரவேலர் சந்நிதிக்குச் செல்வோம் வாருங்கள்!
நாகைப்பட்டினத்தில் இருந்து கூப்பிடு தூரம் தான்.

pic2

முருகன் கொள்ளை அழகு. வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்.
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை!
இங்கு உற்சவ மூர்த்தி மட்டும் தான்!
இக்கோவிலின் மூலமூர்த்தி சிவனார், நவநீத ஈஸ்வரர் - வேல் நெடுங் கண்ணி அம்மை.
சூர சம்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, ஒரு அதிசயம் காணலாம். என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது.

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!

சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா



படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா. பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு

026: மனம் இரங்காதோ ஐயா?




முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?

முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?
திருத்தணிகை வாழும் (முருகா)

வருக வருக நீ வண்ண மயில் ஏறி!
வாரண முகத்தோனே வணங்கும் சிவபாலன் (முருகா)

வையகம் போற்றும் வானவர் தலைவா!
வள்ளி மணவாளா வேலாயுதா கந்தா!
கைவிடுமாகில் யார் கதி எனக்கு?
கார்த்திகேயனே உன்னைச் சரணடைந்தேன்! (முருகா)


இராகம்: சண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ??
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Saturday, February 03, 2007

025: முருகா முருகா முருகா வா!

22 Nov 2016
அமரர். பாலமுரளி கிருஷ்ணா, தாமே எழுதி + பாடிய, முருகன் பாடல்!

 

முருகா முருகா முருகா வா!
மோகன குஞ்சரி பதியே வா!
முருகா முருகா முருகா வா!

மறைகளின் மூலப் பொருளினை ஓதி
பரசிவன் குருவான ஞானவரா - பேர்
அருள் நிறை விழியிலே அன்பு கொண்டிட வா
முருகா முருகா முருகா வா!

குன்று தோறாடும் குகனே வாராய்
குறை அகற்றிடும் சிவகுமரனே வாராய்
வென்றிட வல்வினை வேருடனே என் முன்
முருகா முருகா முருகா வா!

பெரும் இசை வித்தகர் திரு.பாலமுரளிகிருஷ்ணாவே இயற்றிப் பாடிய பாடல் இது.

இராகம்: குந்தளவராளி
தாளம்: ஆதி

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
(Changed the link to https://www.youtube.com/watch?v=f84-_28phLk )

***

அருஞ்சொற்பொருள்:

குஞ்சரி - தெய்வயானை
மறைகளின் மூலப்பொருள் - ஓம்காரம்
ஞானவரா - ஞானத்தில் சிறந்தவன்

Friday, February 02, 2007

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!


ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்
பாடியவர்கள்: பிரியா உடன்பிறந்தோர் (சகோதரிகள்)
பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Monday, January 29, 2007

023 : ஸ்ரீஸ்கந்த குரு கவசம் - 1




ராகம் : நாட்டை

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசந்தனை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகின்றேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள போற்றுகின்றேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சந் தீர்த்தென்னை ரட்சித்திடுவீரே!

Wednesday, January 10, 2007

022: முருகா நீ வரவேண்டும்!



முருகா நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!

நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! (நினைத்த)

கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே (நினைத்த)


பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைத்தவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்: என்.எஸ். சிதம்பரம்

Tuesday, January 09, 2007

021: யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!!!



யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!

அதிகோர சம்சாரத்தில் யாரே கதி?
குமரன் தாள் பணிந்தே துதி!

சமரம் தன்னில் சூரனை தாரகனோடு
சம்ஹாரம் செய்த சிங்கார சங்கர
குமரன் தாள் பணிந்தே துதி!

ஈசன்! வள்ளி தெய்வானை நேசன்! பக்தர் ஹ்ருதய
வாசன்! சண்முக ராமதாசன் குலதெய்வ
குமரன் தாள் பணிந்தே துதி!

இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: D.K. பட்டம்மாள்
இராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி


***

அருஞ்சொற்பொருள்:

அதிகோர சம்சாரம் - மிகக் கடுமையான உலக வாழ்க்கை
சமரம் - போர்
சூரன், தாரகன் - சூரபத்மனும் அவன் தம்பியும்

Sunday, January 07, 2007

020: முருகா முருகா முருகா - பாரதியார் பாட்டு



முருகா முருகா முருகா

வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலர் இங்கு உளரே
அவரை விடுவித்து அருள்வாய்
முடியா மறையின் முடிவே - அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே (முருகா)

அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடி மேல்
பொறிவேலுடனே வளர்வாய் - அடியார்
புது வாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)

எஸ்.பி. இராம் இந்தப் பாடலைப் பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Tuesday, December 26, 2006

019: அசுரர் தம்மை வென்ற வடிவேலன்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!



அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்





குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்



நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்



மெட்டு: காவடிச்சிந்து
இயற்றியவர்: அண்ணாமலை ரெட்டியார்
பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள்

Monday, December 18, 2006

018: பாரதியின் வேலன் பாட்டு!

பாரதியின் வேலன் பாட்டு

பாடியவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
பாடல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!


வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!

சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே


கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!



வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.


கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!


பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை

"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!

Sunday, December 03, 2006

017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)




திரைப்படம்: கந்தன் கருணை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


திருக்கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயன் புகழைப் பாடுவோம்!

Thursday, November 23, 2006

016. வனவேடன் ஒருவன் வந்தான்

எத்தனையே அரிய பெரியவர்கள் கவி சமைத்துக் கந்தனைக் களித்திருக்கிறார்கள். அதை இசை வல்லுனர்கள் இனிமை கூட்டி உளமும் உயிரும் உருகிடப் பாடிப் புண்ணியம் செய்திருக்கிறார்கள். நாமும் முருகன் மேல் பாடல் எழுதி அதற்கு இசையும் கோர்த்தால் எப்படியிருக்கும் என்று நெடுநாள் ஆவல். ஆவல் பெருகினால் செயல்படுத்துவது கந்தனல்லவா. கவியும் தந்து அதைப் பாட ஷைலஜா அவர்களையும் அறிமுகப்படுத்தினான். இதோ பாடல். இதை இங்கே ஷைலஜா அவர்களின் இனிய மெட்டிலும் குரலிலும் கேட்கலாம்.



வனவேடன் ஒருவன் வந்தான்
எனைக் கணை போலும் விழியாலே
உருக்கியே நின்றான்
முருகன் என்னும் பெயரோடு (வனவேடன்

சிலை தொட்ட கை கண்டுச் சிலையாவதோ
மலை தோற்ற தோள் கண்டு மலைப்பாவதோ
தலையோடும் அறிவில் அவன் தலைப்பாவதோ
நிலைமாறி நான் இன்று தடுமாறவோ (வனவேடன்

வேல் கொண்ட கந்தன் எனக் காட்சி நின்றான்
கோள் தன்னை விரட்டி நல்ல ஆட்சி தந்தான்
பாலுள்ளம் பொங்கி எழ மாட்சி செய்தான்
கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான் (வனவேடன்

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, November 18, 2006

015: என்னைக் கா வா வா! முருகா வா வா!

கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?

சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!

பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)

தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)


ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!




இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சுதா ரகுநாதன்
இராகம்: வராளி
தாளம்: ஆதி

Thursday, November 16, 2006

014 : தமிழுக்கு உரிமை உண்டு!!!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?

முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ நீ இப்படி இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!





பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!


திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்
இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்

Sunday, November 05, 2006

013 : எத்தனை கண் வேண்டுமைய்யா?

தங்க ரதத்தில் சுப்ரமணிய சுவாமி, திருத்தணி


எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு! (2)
- எத்தனை கண்

தணிகைதனில் கோவில் கொண்ட
சுப்ரமணிய நாதா நீயும்
சேவற்கொடி தானும் கொண்டு
தங்க ரதம் ஏறி வர!
- எத்தனை கண்

குன்றதனில் ஏறி நின்றே
குமரகுரு நாதா நீயும்
குறையிலாத செல்வம் தருவாய்
செந்தில் வடி வேலவனே!
- எத்தனை கண்

அறுபடை வீடு கொண்ட
ஆறுமுக நாயகனே!
உன்னடியை நாடி வந்தோம்
பொன்னடியைத் தாருமைய்யா!
- எத்தனை கண்

முத்தான முத்துக் குமரா!
காக்கும் கதிர் வேலவனே!
பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!
- எத்தனை கண்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP