இன்று ஷஷ்டி தினம். எம்பெருமான் முருகனுக்கு
உகந்த நாள். முருகனின் பெருமையைச் சொல்லும்
பாடல் ஒன்றின் வரி வடிவத்தையும் ஒலி வடிவத்
தையும் பதிவிட்டு மகிழ்கின்றேன்.
அன்பர்கள் அனைவரையும் பாடலைப் படித்தும்,
கேட்டும் இன்புற வேண்டுகிறேன்.
"உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை -
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளது பாடலின்
முத்தாய்ப்பான வரிகளாகும்
-----------------------------------------------------------
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
பாடல் ஆக்கம்: கவிஞர். பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடியவர்கள்: சூலம்ங்கலம் சகோதரிகள்.
அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR.சுப்பையா
கோயமுத்தூர்.
===========================================
Get Your Own Music Player at Music Plugin