முருகன் பாடல் என்றால் கே.பி.சுந்தராம்பாள் பாட்டு இல்லாமலா! இதோ இன்றைய முருகனருளில்!
பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா
பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா
பால்
பழம்
தேனோடு
பஞ்சாமிர்தம் தந்து
பக்தரைக் காக்கும் முருகா
பக்தரைக் காக்கும் முருகா
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்
சக்தி வடிவுண்டு
மயிலுண்டு
கொடியுண்டு வேல் வேல்
வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற கரம் பல நூறு
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
எங்கள் இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
வேல் வேல் சக்தி வேல் வே
வெற்றி வேல் வேல்
ஞான வேல் வேல்
வடி வேல் வேல்
பாடியவர் : கேபி.சுந்தராம்பாள்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்
திரைப்படன் : துணைவன்
படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/K._B._Sundarambal
இந்தப் பாடலைக் கேட்க
அன்புடன்,
கோ.இராகவன்