வைகாசி விசாகம்: Happy Birthday! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!
வைகாசி பொறந்தாச்சு. மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?
பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்); அதில் ஒரு நடனக் காட்சி. ஆடுறவங்க பேர் எல்லாம் தெரியாது...
ஆனா அந்தப் பாட்டில், மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்!
இன்று வைகாசி விசாகம் (May 30, 2007)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு?
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்!
இறைவனின் திருவடிகள் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்!
அது மட்டுமா?
விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் ஒரு அழகன்.
அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம சுப்பையா சாரைத் தான் கேட்கணும்)
உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம
இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே!
என்று திருப்புகழும் "விசாகன்" என்றே கொண்டாடுகிறது!
அவன் தான் விசாகன்-முருகன்!
So....
Happy Birthday, Dear Muruga!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு முருகா!
(பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!
ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்
சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)
பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)
மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..(அழகன் முருகனிடம்)
படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா