Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

Thursday, February 13, 2014

வேலன்-tines Day!

சும்மா கிண்டலுக்குத் தான்...
Valentines Day, தமிழில் எழுதும் போது வேலன்-டைன்ஸ் என்று ஆவதால்..

வேலன் யாரு? = என்-"அவன்" தானே!
அதான், என்னவனுக்கே, இந்தக் காதல் வாழ்த்தும் சொல்லீடறேன்:)

Happy Valentines Day, Muruga! Love u Honey:)
Kisses to u all over | முத்தத் திருமுழுக்கு



சிலப்பதிகாரத்தில், பெண்கள் விரும்பும் காதல்-முருகன் காட்டப் பெறுவான்;
எங்கே?
கோவலன் அறிமுகமாகும் கல்யாணப் பந்தலில்!

ஆயத்தில், கோவலன் நுழையும் போது, பெண்கள் பலரும், பண் தேய்த்த மொழியில் அவனைப் பாராட்டுறாங்க!
பார்த்தவுடனே வணங்கவல்ல முருகன் போல் இருக்கானே! நல்ல மாப்பிள்ளை-ன்னு பாராட்டு பெறும் கோவலன்!

மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ? 
(சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - மங்கல வாழ்த்து)

கண்டேத்தும் செவ்வேள்
= கண்ட மாத்திரத்தில் தானாய்க் கை குவியும், மனங் குவியும் செவ்வேள்!

அதனால், "வேலன்"-டைன்ஸ் நாள் அன்று, நாம் வேலன் பாட்டு ஒன்னைப் பார்ப்போமா?
சினிமாப் பாட்டு தான்! அசூயை வேணாம்!:)
சினிமாவா இருந்தாலும், அந்த மொழியில் சிரிப்பவனும் அவனே தான்!
In Ilayaraja's husky voice & percussion of tabla rocking throughout the song!


படம்: தெய்வ வாக்கு
குரல்: இளையராஜா, ஜானகி
வரி: வாலி
இசை: இளையராஜா



வள்ளி வள்ளி என வந்தான்
வடி "வேலன்" தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான்
புதுக் கோலம் தான்

சொல்லித் தரச் சொல்லி கேட்டு - தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்ப வல்லி என்று - தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி..)
-----------

சொல்லால் சொல்லாதது..
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது..
கைகள் தொட இந்நாள் ஒன்றானது

வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா?
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா?

என்னை மீண்டும் 
கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் - நாணம் என்னம்மா?
(வள்ளி வள்ளி..)
-----------

வந்தாள் புல்லாங்குழல் 
வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி 
மங்கைக்கு அது காதல் நீலாம்பரி

அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத் தான் என் கண்கள் சந்திக்கும்

எந்தன் ஜீவன் 
கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு, இங்கு யாரும் இல்லையே!
(வள்ளி வள்ளி..)


மண வாழ்க்கை = ஒரு "மாதுர்யமான" (மதுரமான) பயணம்!

அந்தப் பயணம் செய்யப் படித்துறையில் காத்திருக்கும்..
நல்ல பெண்களுக்கும்
கையசைத்து வழியனுப்பக் காத்திருக்கும் அம்மா-அப்பாவுக்கும்..
இந்த வேலன்-tines day, ஒரு புதுப்பக்கத்தைத் திருப்பட்டும்!
வரட்டும் வேலன்!

வள்ளி வள்ளி என வந்தான்
வடி "வேலன்" தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான்
புதுக் கோலம் தான்

Tuesday, October 15, 2013

மதுரை சோமு: துணைவன்! வழித் துணைவன்!

மதுரை சோமு -ன்னாலே நினைவுக்கு வரும் பாடல்:
தெய்வம் படத்தில் - மருதமலை மாமணியே முருகய்யா தான்!


அந்தப் பாட்டின் வரிகளும், வேகமும்,
கனத்த குரலின் உருக்கமும், அப்படியே ஆளைக் கட்டிப் போடும்!

ஆனால் அதே மதுரை சோமு, தேவர் பிலிம்ஸின், சஷ்டி விரதம் என்கிற இன்னொரு படத்திலும் பாடி இருக்காரு! அதான் இன்றைய பாடல்!


அடிப்படையில் மதுரை. சோமசுந்தரம் (எ) சோமு = கர்நாடக இசைக் கலைஞர்;
வேறு சில முருகன் பாடல்களும் பிரபலம் தான்!
ஆனால் அவை கச்சேரிப் பாடல்கள்; சினிமாப் பாடல்கள் அல்ல! - என்ன கவி பாடினாலும், நினைக்காத நேரமில்லை முருகா - போன்ற பாடல்கள்!

வாங்க, நாம சினிமாப் பாட்டுக்குப் போவோம்!
சிவகுமார் - பூர்ணிமா ஜெயராம் நடித்த படம்;


இந்தப் படத்தைப் பார்த்தால், திருச்செந்தூர் ஆலயத்தின் பல உள் நிகழ்வுகளைத் தெரிஞ்சிக்கிடலாம்;
அப்படிச் செந்தூர் அலயத்துக்குள்ளேயே சுத்திச் சுத்தி வரும் காட்சிகள்!

இந்தப் பாடலில், திருச்செந்தூர்க் கோயிலின் குடமுழுக்கு விழாவையும் காட்டுவார்கள்; கண்டு களியுங்கள்!
பாடலின் காணொளிச் சுட்டி இதோ:
http://www.youtube.com/watch?v=C7ByT4Oa3qc (cannot be embedded)

கேட்டுக் கொண்டே வரிகளைத் தட்டச்சினேன்; சில இடங்களில் சிற்சில சொற்கள் புரியவில்லை; கேட்போர் திருத்தி உதவவும்; நன்றி!


(நினைத்திருந்தேன் - நானும் உன்னை நினைத்திருந்தேன் 
கும்பிட்டால் காத்தருளும் குமரனுக்குக் குடமுழுக்கு!
ஈராறு வருடம் அதில் ஓர்முறை தான் பாருங்கள்
சீராரும் செந்தூரின் சந்நிதிக்கே வாருங்கள்)

துணைவன், வழித் துணைவன்,
வாழ்க்கைத் துணைவன்!

திக்கற்ற பேர்க்கெல்லாம் தக்கநலம் புரியும்
அழகன் முருகன் - எழில் 
குன்று தோறும் நின்றிருக்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
தாய்க்குத் தாயான தெய்வம் அவன்
தந்தைக்குக் குருவான பிள்ளை அவன்
வாய்க்கு உணவாக, விழிக்கு ஒளியாக
நோய்க்கு மருந்தாக, நல்லருள் விருந்தாக..

உதவும் தலைவன் - அன்பர்க்கு என்றும் பூத்து 
கண்ணில் நிற்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
மந்திர நீர்க்குடம் மண்டபம் அங்கு விளங்க
மங்கல வாத்தியம் தத்தள ஓசைகள் முழங்க
செந்தூர் அழகனின் சந்நிதி பூஜைகள் தொடங்க
கச்சிக் குமாரனை வக்ர கணங்கள் வணங்க

தகதக தகவென திருமுடி ஜொலிக்க
கணகண கணவென மணிகளும் ஒலிக்க
பளபள பளவென ஒளிவிளக்கு எரிய
பலப்பல வினைகளும் பொடிபட அழிய

தொழுதால் அழுதால் நிலைத்தல் தருவானே
மலைமேல் இருக்கும் மயில்மேல் வருவானே

துணைவன்
வள்ளித் துணைவன்
துணைவன், வழித் துணைவன்
வாழ்க்கைத் துணைவன்!
------------------------

குரல்: மதுரை சோமு
வரி: வாலி
இசை: சங்கர் கணேஷ்
ப்டம்: சஷ்டி விரதம்


திருச்செந்தூர் உற்சவர் - சண்முகரின் அணுக்கத் தோற்றம்
***
என்னவன் திருமுகம்!
என் துணைவா -  வழித் துணைவா 
என் ஐயா - எனக்கொரு துணை வா! 
என் வாழ்க்கைத் துணைவா!!

Tuesday, September 24, 2013

இளையராஜா செய்து வைக்கும்: "வள்ளித் திருமணம்"!

சென்ற பதிவில், இளையராஜா-முருகன் பாடல்கள் = (சினிமாவில்) "six-o-six"-ன்னு சொல்லியிருந்தேன்!

ஒடனே.. நண்பர்கள் சிலர், ராஜா (எ) கடலில் மூழ்கி,
மூச்சடக்கி, முத்துக் குளித்து,
6->9 ஆக்கி, சில அழகிய முத்துக்களை எடுத்துக் கொடுத்தனர்:)

So.. இளையராஜா-முருகன் = 9 songs!
பதிவின் இறுதியில், ஒரு பட்டியலாய் இட்டு வைக்கிறேன்! போதுமாய்யா?:)

பெண் ஜென்மம் (எ) பழைய படம் பார்க்க நேரிட்டது;
அதன் விளைவு: ஒரே Family சினிமாவில் = இரண்டு முருகன் பாடல்கள்!
*முதற் பாடல் = சென்ற வாரம்
*இரண்டாம் பாடல் = இந்த வாரம்!

இன்றைய செவ்வாய், ஒரு கதா காலட்சேபம்!
= செய்வது: பி.சுசீலா

என்ன வியப்பா இருக்கா?:)
இளையராஜா செய்து வைக்கும் = வள்ளித் திருமணம்!


vaLLi kodi - creeper
வள்ளித் திருமணம் = சங்கத் தமிழில் ஊறி விட்ட ஒன்னு!
கொடிநிலை கந்தழி வள்ளி -ன்னு தொல்காப்பியம்!

கந்து (எ) நடுகல்லில் படர்ந்த வள்ளிக் கொடி
= தமிழ்த் தொன்மத்தின் "யாரோ"
= குடி காத்த முன்னோர்கள்! ஆணும்-பெண்ணுமாய்!

விநாயகர், நாரதர் எல்லாம் பின்னாள் சம்ஸ்கிருதக் கலப்பு;
இந்தக் கலப்பெல்லாம் இல்லாமலேயே, வள்ளித் திருமணம் = உள்ளம் உருக்குவது!

வள்ளி:
= முல்லை நில நடுகல், திருமாலின் மகள்!
= குறிஞ்சி நில முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!

மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை! முன்னே-பின்னே நெருங்கிப் பார்த்ததும் இல்லை!

இப்படித், தான் பார்க்காத ஒரு முருகனுக்காக...
பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்...
சில சமயம் வீரத் தமிழச்சியாய், விரட்டவும் விரட்டினாள்! :)


* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* இது கைக்கிளையா? one-sided? = தெரியாது...
* முருகன் வருவானா? = தெரியாது...
= இருப்பினும், "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!

காடு - மேடு - குகைகள் தோறும்,
கால் தேயத் தேய,
மனமும் தேயத் தேய..

அதனால் தான் முருகன், "தேய்ந்த போன வள்ளி" - அவள் பாதத்தை இன்றும் பிடித்து விடுகிறான்!
என்னாது? பொம்பளை காலை, ஆம்பிளை, சதா பிடிச்சி விடுவதா?

ஆமாம்!
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
-ன்னு அருணகிரி மட்டுமே, இயைந்து பாடுவாரு! மதப் பிடிப்புள்ள வேறு யாரும், முருகன், அவ காலைத் தொட்டான் -ன்னு பாட மாட்டாங்க!

காதல் பாதங்களுக்கு, முருகன் செய்யும், "பாதுகா பட்டாபிஷேகம்"!
பாதம் வருடிய மணவாளா! 
பாதம் வருடிய மணவாளா!

வள்ளியின் காதல் = "கைக்கிளை" -ன்னு சொல்ல மனசு வருமா?
கைக்கிளை = Not Just one-sided Love!
முல்லை/ குறிஞ்சி அகத் திணைகளுக்கும் = முற் சொல்லப்படுவது கைக்கிளையே! = ஏன்?
Try reading tholkaapiyar's heart & sangam landscape = here

இதுவே வள்ளித் திருமணம்! அவன் வருவானா?-ன்னு கூட அறியாது,
* அவள் = அவனே அவனே!
* அவனுக்கு = அவளே அவளே!



பொதுவா, வள்ளித் திருமணத்தைத் தொடாத, சொற்பொழிவாளர்களே இல்லை! (சம்ஸ்கிருதம் கலந்து தொட்டாலும்)
வாரியார் முதற்கொண்டு..., புலவர் கீரன், தேச மங்கையர்க்கரசி, நாகை முகுந்தன் -ன்னு பலரும் தொடும் Topic!

அதைச் சுசீலாம்மா தொட்டால்?
பாட்டுக்கு அரசி = கதா காலட்சேபத்துக்கும் அரசி ஆகிறார்:))

முருகன் பாமாலை (எ) Album - அதில், சுசீலாம்மா, முருகன் வரலாற்றைப் பாட்டாத் தான் பாடுவாங்க! ஆனா, கதா காலட்சேபமாக???
= வாரியார் போல் செய்து காட்டும் வாய்ப்பு?
= இளையராஜா உருவத்தில் வந்தது!

கீழே, நீங்களே கேட்டு மகிழுங்கள்! = ராஜாவின் "காலட்சேப" இசையை;
Subtle Veenai & Violin - ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா, ஏய்ச்சுப் புட்டேனே!:)))



வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள் - அந்தப்
புண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்!

(நம்பிராசன் திருமகளான வள்ளியின் பேரழகை, நாரத மாமுனி வந்து, முருகனிடம் சென்று...)

கண்டேன், கனியொன்று கண்டேன்
வடிவேலனே, சிவபாலனே,
உன் பின்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம்..
கண்டேன், கனியொன்று கண்டேன்

அழகிய விழி வண்ணம், மழைநிகர் குழல் வண்ணம்
உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம்!
கண்டேன், கனியொன்று கண்டேன்

(வள்ளியின் வடிவழகை நாரதர் சொல்லக்கேட்டு.. வேலவன் வேடனாகக் கோலம் பூண்டான்; மானைத் தேடும் பாவனையில், மங்கை வள்ளி இருக்கும் தினைப் புனத்தினுக்கு வந்து சேர்ந்தான்)

எந்த மான்? தேடி வந்த மான்?
(- என்று வள்ளி கேட்க...)
மேயாத மான் - புள்ளி
மேவாத மான்

பாயும் நடையழகும், பின்னல் நடையழகும்
கண் கவரும் முகமும் இதழும் - பொன்
செங் கமலம் எனவே திகழும் - தனில்
அந்தம் மிகுந்திட வந்து பிறந்தது... மேயாத மான்...

(அவன் சொன்ன மான், இந்தக் கன்னி மான் என்று கண்டு கொண்ட வள்ளி, சினந்தாள், சீறினாள்)

மானைத் தேடி வந்த வேடா
அடடா மூடா - சரி தான் போடா - உன்
கள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா? - அட
மானைத் தேடி வந்த வேடா!

(உடனே வேடனாய் இருந்த வேலன், மர வேங்கையாய் மாறி, வள்ளியைத் தொடர்ந்து வந்து..)

ஆவியே, என் ஆருயிர் சஞ்ஜீவியே, மன்மதன் என்னும்
பாவியே, மலர்க் கணைகள், தூவியே வாட்டுறான் கண்ணே!
ஆயல் ஓட்டும் பெண்ணே! - பெண்ணே! பெண்ணே!

(வள்ளி என்ன இந்தக் காலத்து Modern Girlஆ,
சரியென்று உடனே சொல்ல? சாரியென்று மறுத்து விட்டாள்;
வாலிப முருகன் உடனே வயோதிகன் ஆனான்!
வள்ளி குடுத்த தினை மாவைத் தின்ற அந்தத் தாத்தாவுக்கு..)

விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி
(காதல்) சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி!

(வள்ளி பாத்தா, அடி ஆத்தா, இவர் பொல்லாத தாத்தா  என்று வள்ளி வெறுக்க... ஆறுமுகன், அண்ணன் ஆனைமுகனை அழைத்தார்; வள்ளி பயந்து, திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள்; யானை விலகிப் போயிற்று)

ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா
ஏய்ச்சுப் புட்டேனே!

(மறுபடியும் யானையை முருகன் அழைக்க, அது தும்பிக்கையால் வள்ளியைத் தூக்கிப் போட..
அவள் முருகாஆ, முருகாஆ என்று அலற,
வள்ளியை முருகன் வாங்கிக் கொண்டான், கையில் தாங்கிக் கொண்டான்;
மனம் போல் முருகனை வள்ளி மணந்து கொண்டாள்!)

வள்ளியம்மை நாதனுக்கும் 
புள்ளி மயில் வேலனுக்கும்
மங்களம், சுப மங்களம்!
மங்களம், சுப மங்களம்!


(பாட்டைக் கேட்டுக் கொண்டே தட்டச்சியது;
பிழைகள் இருப்பின், தயங்காது சுட்டிக் காட்டவும்; திருத்தி வைக்கிறேன்- நன்றி)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

*கதா காலட்சேப மெட்டில் = இளையராஜா இசை
*கதா காலட்சேப மெட்டில் = சுசீலாம்மா பாடல்
= இது அபூர்வம்!

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela



சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:

1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம்மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது (Bhairavi Ragam)

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

4. தெய்வ வாக்கு படத்தில் - வள்ளி வள்ளி என வந்தான், வடிவேலன் தான் - இளையராஜாவே பாடியது, ஜானகியுடன்

5. கும்பக்கரை தங்கய்யா படத்தில் - என்னை ஒருவன் பாடச் சொன்னான் - இளையராஜாவே பாடியது (kalyani ragam)
----------

6. ஊமை உள்ளங்கள் படத்தில் - மனதினில் புதிய அருவி (வேலனின் தோளில் வேடனின் செல்வி) - சசிரேகா பாடியது (திருத்தணி, பரங்குன்றம் எல்லாம் வரும்)

7. புயல் பாடும் பாட்டு படத்தில் - வேல் முருகனுக்கு மொட்டை ஒன்னு போடப் போறோம் டோய் - மலேசியா வாசுதேவன் பாடியது (Mohana Ragam)

8. பெண் ஜென்மம் படத்தில் - செல்லப் பிள்ளை சரவணன் - யேசுதாஸ்/ பி. சுசீலா பாடியது (Maand Ragam) 

9. அதே பெண் ஜென்மம் படத்தில் - வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் வேலனை மாலையிட்டாள் - பி.சுசீலா பாடியது (கதா காலட்சேபமாக)

= Raja-Murugan Songs (எ) நவரத்தினங்கள் இவையே!

Tuesday, September 17, 2013

"இளையராஜ முருகன்": செல்லப் பிள்ளை சரவணன்!

பொதுவா...
முருகனைப் பற்றிய இளையராஜா பாடல்கள் மிகவும் குறைவு (சினிமாவில்)

தனிப்பட்ட Album-களில், இசைஞானி அவர்கள், சில பல பாடி/ இசையமைத்து இருக்கலாம்!
(கீதாஞ்சலி Album - முருகனை நினை மனமே)

ஆனால் சினிமாவில்?


1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம் - மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

வள்ளி வள்ளி என வந்தான் என்ற "பொதுவான" பாட்டும் உண்டு!
But, இவ்ளோ தான் "ராஜா-முருகன்" கூட்டணியா?:(


அல்ல!
பெண் ஜென்மம்!

அண்மையில் ஒரு தேடலில், அபூர்வமான ராஜா பாடல் ஒன்னு கிடைச்சுது = ராஜா & சுசீலாம்மா Solo
நீண்ட நாள் கழிச்சிக் கேக்குறேன்; மிக்க இனிமை!

ஒரு கோயிலின் இரு தீபங்கள், இரு வேறு திசை பார்ப்பது என்ன?
ஒரு பாடல் தான் நாம் பாடினோம்; இறு வேறு இசை கேட்பதென்ன?

This song is very close to my feelings!
ஆனா, அப்படியே நூல் பிடிச்சிப் போனாக்கா.....
Wow! அதே படத்தில் = 2 முருகன் பாடல்கள்!
Dei Loosu Muruga, two more Raja Songs for u da!:)

Someone lucky to have u, my honey:) .. And you are lucky to have Raja Songs = 6 in total:))


பெண் ஜென்மம் என்ற படம்!
ராஜாவின் அபூர்வங்களில் ஒன்று! ஆனா இந்தப் படம் பேசப்படாமலே போனது ஏனோ?
*"ஓய் மாமா" என்ற ஜானகி பாடலும் உண்டு, with SPB:)
*சுசீலாம்மா பாடலும் உண்டு, with Yesudass

இது ஆரம்ப இளையராஜா! அதனால் MSV வாடை அடித்தாலும் அடிக்கலாம்:)
ஆனா, Tabla & Guitar காட்டிக் கொடுத்துரும்!
பாடலின் சரணம் அழகோ அழகு! = வள்ளி மான் - புள்ளி மான்! 
செம்மான் மகளைத் திருடும் திருடன் என்ற அநுபூதி போலவே வரும்!

ஒரே படத்தில் = 2 முருகன் பாடல்கள், ராஜ இசையில்:
1. செல்லப் பிள்ளை சரவணன் -  Susheelamma & Yesudass
2. வண்ணக் கருங்குழல் வள்ளி - Susheelamma

இரண்டாம் பாட்டில், இளையராஜா சொல்லித் தரச், சுசீலாம்மா, ஒரு கதா காலட்சேபமே பண்ணுறாங்க:)
So different :)) மேயாத மான்! = அதை, அடுத்த வாரம் பார்ப்போம்!
இன்னிக்கி "செல்லப் பிள்ளை சரவணனுக்கு" hai சொல்லுவோமா?:) வாங்க....



செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
கோபத்தில் மன ஸ்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்!!
(செல்ல)

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் - பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்!
கூந்தலில் மலர் சூடியே - அவன்
கூட நான் வர வேண்டுவான்!
மயங்கி நான் மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்!!

செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
வள்ளியை இன்ப வல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்!
(செல்ல)

மாலையில் ஒரு மல்லிகை - என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை!
மன்மதன் கணை ஐவகை - அதில்
ஓர் வகை இவள் புன்னகை!!

இடை துவள
கலை பயில
(செல்ல)

கார்குழல் உந்தன் பஞ்சணை - இரு
கைகளே உந்தன் தலையணை!
வேலவன் கொஞ்சும் புள்ளி மான் - அதன்
வடிவம் தான் இந்த வள்ளி மான்!

அருகில் நான் வந்தேன்..
இதழ்ச் செந்தேன்
இதோ தந்தேன்
(செல்ல)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

ராகம்: மாண்ட்

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela

Friday, July 19, 2013

முருக "வாலி" - அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே!

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!


அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அதென்ன "வாழ்ந்தவர்"?
...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!


பொன்னுடலுக்கு மட்டும், நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!



All Young - MSV, Vaali, P Susheela, TMS

வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்"...
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;

* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...

(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே: 
சில திருப்புகழ்ப் பாடல்களை விட..வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்... ஏனோ என் உள்ளத்தை... ரொம்ப உருக்கி எடுக்கும்!)

அதுவே இன்று... முருகனருள் வலைப்பூவில் = "வாலி அஞ்சலி!"



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி



இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;

என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அவன் கையும் கோத்துக்கிட்டு..
அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

கருணையே இல்லையாடா முருகா? = (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும்  நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!

இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!

Sunday, May 27, 2012

ஜிரா பிறந்தநாள்! சத்தியம், சிவம், சுந்தரம்!

முருகனருளில், இன்று ஜிரா சிறப்புப் பாடல் (May-27-2012)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா!:)))
- உனக்குப் பல்லாண்டு, பல்லாண்டு!!
- வடிவாய்த் தமிழோடும் முருகோடும் ஆயிரம் பல்லாண்டு!

சத்தியம் சிவம் சுந்தரம் - சரவணன் திருப்புகழ் மந்திரம்!





பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (Reception);
அதில் ஒரு நடனக் காட்சி.
மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
பாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும்....
சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- இது தான் அந்த நடனம் + பாடல்!
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...


சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருகப் பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா


அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் !
- வைர வரிகள் அல்லவா?

"உனக்கே என்னை விதி"யென்ற இம்மாற்றம், 
நாங்கடவா வண்ணமே நல்கு!

Saturday, July 02, 2011

ஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

ஆயில்யன் அண்ணாச்சியின் திருமணம் இன்று! (Jul-03-2011)!
முருகனருளில், இன்று ஆயில்யன் சிறப்புப் பாடல்!!


திருவாரூர் கமலாலயம் குளக்கரையில், மணப்பந்தலின் கீழ்,
கவின்மிகு இல்லறத்தில் மகிழத் துவங்கும்
அனு-ஆயில்யன்
தம்பதிகளை

வாழ்த்துவோம், மக்கா! வாங்க, வாங்க!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஆயில்யன் முருக பக்தர்! முருகனருள் வலைப்பூவின் நெடுநாள் வாசகர்!
அவர் திருமணத்துக்கு நானும்-என்னவன் முருகனும் மகிழ்வுடன் வந்து வாழ்த்துகிறோம்! :)



பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்);
அதில் ஒரு நடனக் காட்சி. மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
பாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- இது தான் அந்த நடனம் + பாடல்!
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...


சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா


அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் !
"உனக்கே என்னை விதி"யென்ற இம்மாற்றம், நாங்கடவா வண்ணமே நல்கு!

அச்சோ! 10:00 மணி ஃபிளைட் பிடிக்கணும் பிரேசிலுக்கு!
ஆல்ரெடி லேட்டு! ஓடு......
இந்தக் கல்யாணப் பதிவின் பின்னூட்டங்களைக் குமரன் அண்ணா கொஞ்சம் பாத்துக்கோங்க! :) Bfn!

Sunday, June 12, 2011

முருகன் பிறந்தநாள்! - கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்..

இன்று என் ஆசைத்திரு முருகனுக்குப் பிறந்தநாள்! (Jun 13-2011 வைகாசி விசாகம்)
Happy Birthday da, MMMMMMuruga! :)
இனிய பிறந்தநாளில் இனியது கேட்டு, உனக்கு என்றும் பல்லாண்டு பல்லாண்டு!

ஒவ்வொரு ஆண்டும் மூன்று பிறந்தநாட்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! - முருகன், தோழி கோதை, ..... !
முருகன் 'பிறவான் இறவான்' என்கிற வசனம் உள்ளதால், அவன் 'உதித்த' நாள் என்றும் கொள்ளலாம்! எதுவானாலும் என்னவனுக்கு "Happy" Birthday!:)

வைகாசியில் வரும் விசாக நட்சத்திரத்தில் உதித்ததால், விசாகன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு!
அருவமும் உருவும் ஆகி, அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!!!

அந்த விசாக-விசால மனத்தவனுக்கு, என் மேல் மட்டும்...அப்பப்போ ஊடல் வரும்! போடா-ன்னு எனக்கும் கோவம் வரும்!
அந்த நேரம் பார்த்து, சில பேர் என்னிடம் வந்து கேட்பாய்ங்க! - "முருகன்-ன்னு ஒருத்தரு இருக்காரு-ன்னு நல்லாத் தெரியுமா? இதெல்லாம் கற்பனை தானே?"

ஹா ஹா ஹா!
கற்பனை என்றாலும்...கற்சிலை என்றாலும்...
கந்தனே என் சொந்தனே!
ஊடலும் உனக்கே,
கூடலும் உனக்கே,
ஆவியும் உனக்கே,
நான் மொத்தமாய் உனக்கே!





கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை என்றாலும்)

அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
(கற்பனை என்றாலும்)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே
(கற்பனை என்றாலும்)

குரல்: TMS
வரிகள்: வாலி


திருச்சி ரயில் நிலையம்! வண்டியில் உட்கார்ந்து கொண்டு இருந்தவர் பிரபல பாடகர் TMS! அவரிடம் இளைஞர் ஒருவர் தயங்கித் தயங்கித் தான் எழுதிய பாட்டைக் காட்டுகிறார்!
பாட்டைப் பார்த்தவுடனேயே TMS-க்கு பிடித்து விட்டது! ஏன்-னா பாட்டிலேயே சந்தமும் இருக்கு! அங்கேயே மெல்லிதாய்ப் பாடிப் பார்க்க....கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...
இளைஞர், கவிஞர், வாலி.....பலருக்கும் அறிமுகமாகி, பெரும்புகழ் பெற்றார்!

வைகாசி விசாகம், இன்னும் இரண்டு பேரின் பிறந்தநாளும் கூட!
* ஒரு குழந்தை = முத்தமிழ் முருகன்
* இன்னொரு குழந்தை = அத்தமிழில் வேதம் செய்த மாறன் - நம்மாழ்வார்!
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முருகா.....
என் மேல ரொம்ப கோவப்படாதே-ன்னா?
நான் நினைப்பதும் நீ நிகழ்வதும்.....நின் செயலாலே! கரெக்ட்டு தான்!
ஆனா இதையும் தெரிஞ்சிக்கோ...
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே!

நான் உன் கண்களின் வழியாகவே! = கண்களின் வார்த்தைகள் புரியாதோ? காத்திருப்பேன் என்று தெரியாதோ? Happy Birthday Honey! :)

Thursday, December 23, 2010

பழமுதிர் சோலையிலே தோழி! - ஜெய்சங்கர், ஜமுனா!

இந்தச் செவ்வாயில் விட்டுப் போன பதிவு, ஆனால் அவன் பேர் என் செவ் வாயில் விட்டுப் போகுமா? இதோ, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!


அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்...பாட்டு தெரியும் தானே? அந்தப் படத்தில் இருந்து ஒரு முருகன் பாடல்! பார்க்கலாமா?

குழந்தையும் தெய்வமும் என்ற படம்! ஜெய்சங்கர், ஜமுனா நடிச்சது! குட்டி பத்மினி பாடுற பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்குமே?

கல்லூரிக் குறும்பில் தொடங்கி, கல்யாணம் ஆகி, பெண்ணின் அம்மாவால் குழந்தைகளைப் பிரிந்து, ஒரு குழந்தை தனியே வளர்ந்து.....
அது நாட்டியம் கற்கும் இடத்தில், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒரு காதலா?

நடன ஆசிரியை யாரை நோக்கிப் பாடுகிறார் - முருகனையா? ஜெய்சங்கரையா? :) நீங்களே கேளுங்கள்! சுசீலாம்மா பாடும் அழகிய பரதநாட்டியப் பாடல்களில் இதுவும் புகழ் பெற்ற பாடல்!





பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!

வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?

நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
(பழமுதிர் சோலையிலே தோழி)

படம்: குழந்தையும் தெய்வமும்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரி: வாலி


பி.கு: கவிநயா அக்கா, இப்பல்லாம் நான் பதிவே எதுவும் போடுறதில்லை-ன்னு குறைபட்டுக்கறாங்க! :) நான் என்னத்த சொல்ல! என் தோழன் இராகவன் கூடத் தான் பதிவே போடுறதில்ல!
முருகா, நீயே நியாயத்தைக் கேளுடா! பந்தல்-ல்ல பல்சுவை நகைச்சுவை கூட்டி ஆன்மீகம் எழுதுனாத் தான் பதிவா? அதான் என் சொந்தச் சரக்கை எல்லாம் குறைச்சிக்கிட்டு, சினிமாப் பாட்டு மட்டும் உனக்கு முருகனருள்-ல்ல போடறேன்-ல்ல? கவி-க்கா கிட்ட எடுத்துச் சொல்லு! அவுங்க கூட சேர்ந்து நீயும் பந்தலில் பதிவு போடு-ன்னு கட்சி மாறினே...பிச்சிருவேன் பிச்சி! :)

Monday, October 18, 2010

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

ஆன்மீகத்தைப் போயும் போயும், "சினிமாத்தனமாக" எழுதுவதாக முன்பெல்லாம் ஒரு அன்பான குற்றச்சாட்டு உண்டு, என் மீது! :)
ஆனால் இந்தக் குறிப்பிட்ட சினிமாப் பாட்டு போல், நான் தமிழாய் நேசிக்கும் அருணகிரியின் திருப்புகழ் கூட என்னைக் கசிய வைத்ததில்லை!

* எத்தனையோ திருப்புகழ் உண்டு! = நாத விந்த கலாதீ நமோநம, முத்தைத் தரு பத்தித் திருநகை, பாதி மதி நதி போது மணி சடை, கலை மேவும் ஞான பிரகாசா, அயெனனவாகி அரியெனவாகி...
* எத்தனையோ கந்த கவசங்கள் உண்டு! = கந்த சஷ்டிக் கவசம், சண்முக கவசம், ஸ்கந்த குரு கவசம்...

* எத்தனையோ நல்ல மரபு இசைப் பாடல்கள் உண்டு = பெ.தூரன், தண்டபாணி தேசிகர், ரமணி அம்மாள், முருகனைப் பாடவென்றே பிறந்த சீர்காழி கோவிந்தராஜன், TMS, கே.பி. சுந்தராம்பாள்!!!
* மெல்லிசையில் கூட சுசீலாம்மா, வாணி ஜெயராம் பல அழகிய முருகன் பாடல்களைப் பாடி உள்ளனர்! (முருகனருள் வலைப்பூவின் வலப்பக்கம் பாருங்கள்)

ஆனால்,
ஆனால்,
ஆனால்....
எந்தச் சந்தப் பாடலும், இந்தக் கந்தப் பாடல் போல் கசிய வைக்குமோ?

MS ராஜேஸ்வரி என்பவர் பாடியது! இன்றைய பல பேருக்கு. இவர்கள் யார் என்று கூடத் தெரியாது! ஆனால் இந்தப் பாட்டு???

எனக்கு மிகுந்த தாபமாக இருக்கும் போது, இந்தப் பாட்டில் உள்ள ரெண்டே வரி தான் மனதிலும் வாயிலும் ஓடிக்கிட்டே இருக்கும்!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

என் முருகனோடு பேசுவது போலவே இருக்கும்!
அவன் சட்டையை உலுக்கி, டேய் முருகா முருகாஆஆஆ என்று அவனை இரு கன்னத்திலும் அறைந்து,
அறைந்த கையோடு அவன் கையும் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து கொள்வது போலவே இருக்கும்!

இன்று அதே ரீங்காரத்தில்....நான்.....இதோ!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
வரி: வாலி



எல்லாருக்கும் தெரிந்த தகவல், குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
இதை வாலியா எழுதினார் என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு! இப்படிச் சாகா வரம் பெற்ற பாடலாகி விட்டதே!

இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி, குழந்தைக் குரல் பாட்டுக்கென்றே சொந்தமானவர்!
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா, மண்ணுக்கு மரம் பாரமா, படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு போன்ற பாடல்கள் பிரபலமானவை! ஆனால் அக்காலக் குழந்தைப் பாடகரான இவர் பாடிய இக்கால இன்னொரு பாட்டும் மிகவும் பிரபலம் = நான் சிரித்தால் தீபாவளி!


முருகா...என் கண்ணாளா...
நான் உன் சட்டையை உலுக்கிக் கேட்கட்டுமா?
கையால் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
இதழாலும் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
உன் தோளில் சாய்ந்து கொண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே கேட்கட்டுமா?

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: Happy Birthday! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

வைகாசி பொறந்தாச்சு. மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?

பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்); அதில் ஒரு நடனக் காட்சி. ஆடுறவங்க பேர் எல்லாம் தெரியாது...
ஆனா அந்தப் பாட்டில், மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்!

இன்று வைகாசி விசாகம் (May 30, 2007)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு?
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்!
இறைவனின் திருவடிகள் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்!
அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் ஒரு அழகன்.
அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம சுப்பையா சாரைத் தான் கேட்கணும்)

உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்று திருப்புகழும் "விசாகன்" என்றே கொண்டாடுகிறது!
அவன் தான் விசாகன்-முருகன்!


அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு முருகா!

(பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!

ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)





சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)





படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா

Thursday, April 05, 2007

தீராத வினையைத் தீர்ப்பதெது?

===========================================

தீராத வினையைத் தீர்ப்பதெது?

ஒரு பக்திச் சொற்பொழிவரங்கம்.

சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப்
பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு ; கரங்கள்
பன்னிரெண்டு. அறிவீர்கள்! கால்கள் எத்தனை?"

சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான்.

"கால்கள் இரண்டுதான்!"

"ஏன் காலகள் மட்டும் இரண்டு?"

அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு
அரங்கிலிருந்து பதில் இல்லை!

அவரே தொடர்ந்து சொன்னார்.

"பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச்
சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன்
பன்னிரெண்டு காலகள் இருந்தால் எந்த இரு
கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று
தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான்
ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும்,
கால்கள் இரண்டுதான்!"
--------------------------------------------------------------------------
நோய் என்பது தீர்க்ககூடியது. பிணி என்பது
தீர்க்க முடியாதது. நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணியை (chronic Disease)
குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்
குணப்படும்.

வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும்
இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம்
அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும்
முற்பிறவியில் நாம் செய்த செயல்

ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை
தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை
தன்னைச் சேர்க்கும் என்று துன்பத்தில் உழலும்
மனிதர்க்கெல்லாம் வழி காட்டும் முகமாக
கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய பாடலை
இன்று மகிழ்வுடன் பதிவிடுகிறேன்
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

-------------------------------------------------------------------------
பாடல் ஆக்கம்:: கவிஞர் திரு. வாலி
பாடியவர்:: திரு. T.M செளந்தர ராஜன்
இராகம்: மலையமாருதம்
தாளம்: ஆதி
-------------------------------------------------------------------------
பல்லவி

"ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

அநுபல்லவி

ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

சரணம்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

மாமனைப் போலிரு மாதுடன் கூடி
மாமலையில் பழமுதிர் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்து

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்"
----------------------------------------------------------------------

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

06.04.2007 5.45 A.M

Saturday, March 31, 2007

கனிமொழியால் கற்றவை!

============================================

கனிமொழியால் கற்றவை!

இராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி
பாடியவர்: திரு.T.M.செளந்தரராஜன்
பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி

பல்லவி

"கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

அநுபல்லவி

அற்புதமாகிய அருட் பெரும் பொருளே
அருமறை தேடிடும் கருணையாம் கடலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

சரணம்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின்செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!"

-----------------------------------------------------------------------
இன்று பங்குனி உத்திரம்.
அதோடு நிதியாண்டின் முதல் நாள்.
புதுக் கணக்கு எழுதப் பலர் பழநிக்குச் செல்வார்கள்.

எனக்கு எல்லாக் கணக்கும் அவரோடுதான்!
அந்தப் பழநியம்பதியில் தண்டாயுதத்துடன்
நிற்கும் பழநியாண்டவரோடுதான்.

அவர் புகழைப் பாடுவதும் மட்டும்தான்
என்வேலை. என்னுடைய வரவு செலவுகளை
யெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது!

அதனால் அவர் புகழ் பாடும் இந்தப் பதிவிற்கு
வந்து என் புதுக் கணக்கை மேற்கண்ட
பாடலுடன் துவக்கியுள்ளேன்.

முருகனருள் முன்னிற்கும் இந்தப்பதிவின்
வெளியில் நின்று இதுவரை அவர் புகழ்
பாடும் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தவனைக்
கதவைத் திறந்து உள்ளே விட்டு என்னையும்
முருகனின் புகழ் பாட அனுமதித்த
நண்பர் சிபி அவர்களுக்கு என் நன்றி!

அன்புடன்,
SP.VR..சுப்பையா
1.4. 2007

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP