வள்ளி - உனக்காகவே பிறந்த முருகன்!
வள்ளியின் பாதங்களை, முருகன் 'வருடி விடுவதாக' அருணகிரி மட்டுமே அடிக்கடி பாடுவாரு! வேறு யாரும் சொன்னதில்லை! ஏன்?
* ஏன்-ன்னா அருணகிரியின் மனம் பேதை மனம்!
அவருக்கு நிறுவனக் கட்டுகள் கிடையாது!
பெருமாளே-ன்னும் திருப்புகழில் முடிப்பாரு! வள்ளியின் காலைத் தொட்டான் முருகன்-ன்னும் பாடுவாரு! இப்படி யாருமே செய்ததில்லை!
//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா// - திருப்புகழ்
முருகன் இவ்வாறு செய்வதாக, கற்பனை பண்ணிப் பார்க்கும் போது...என் மனம் நினைத்தாலே இனிக்கும்!
பொதுவா புருசன் காலைப் பொண்டாட்டி பிடிச்சி விடுவதாகத் தான், சினிமாவில் காட்டிக் காட்டி, நம்மூருல பழக்கம்!
திருமகள் "இதோ திருவடிகள்" என்று இறைவனைக் காட்டிக் கொடுப்பதற்காக அந்தப் பக்கம் அமர்ந்திருந்தால், அவளையும் கால் பிடித்து விடுபவளாக நம் சினிமா ஆக்கி விட்டது!:)
அம்மி மிதிக்கும் போது, "என் குலத்தை நீ தான் தாங்கணும்"-ன்னு, ஒரே ஒரு முறை மட்டும், பெண்டாட்டி காலைப் புருசன் பிடிப்பான் என்று தத்துவம் பேசுவாங்க! :)
அதுக்கு அப்புறம் பிடிச்சா "ஆண்மைக்கு" இழுக்கு-ன்னு சமூகம் பேசும்! பொண்டாட்டி தாசன்-ன்னு வேற பட்டம் கட்டும்! :)
ஆனால் சேயோனாகிய முருகப் பெருமான், அடிக்கடி வள்ளியை ஏன் பாதத்தில் தொடணும்? ஆம்பளைப் பசங்க வேற என்னமோவெல்லாம் தானே தொடுவாய்ங்க? :)
இதழ், கன்னம், அதுக்கும் கீழே, அப்படி இப்படி-ன்னு இருப்பதை விட்டுட்டு...என் முருகனுக்கு "அதுல" எல்லாம் வெவரம் போதாதா? :)))
வள்ளி, மாயோன் திருமாலின் மகள்! அவளுக்கு வைணவம் தான் பொறந்த வீடு! அப்போதே முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!
ஆனால் உடனே முருகனை மணக்க முடியவில்லை! தவம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது! பூவுலகக் காதலால் தான் ஆட்கொள்ளப் படுவாள் என்றும் சொல்லப் பட்டது! என்ன செய்வாள் பேதை? :(
வைணவக் கொழுந்தானவள், நம்பியின் மகளாகப் பிறக்கிறாள்! உலகத்தையே அளந்த மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
எதற்கு காத்திருப்பு என்று தெரியாமலேயே, பாவம் அவளுக்குக் காத்திருப்பு!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூட முன்பு பேசியதில்லை!
இப்படி, தான் பார்க்காத ஒரு முருகனுக்காக,
வீட்டில் பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்!
சில சமயம் வீரமாய் விரட்டவும் விரட்டினாள்! :)
* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* முருகன் வருவானா இல்லையா = தெரியாது...
* இருப்பினும், அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!
அவன் காதலிலேயே, அவள் ஆழ்ந்து இருந்தாள்! - Hymns Of The Drowning!
காடு மேடு எல்லாம், குகைகள் தோறும், கால் தேயத் தேய, மனமும் தேயத் தேய அலைந்து திரிந்தவள் வள்ளி!
அதனால் தான் முருகப் பெருமான், அந்தத் தேய்ந்த போன வள்ளிப் பாதங்களைப் பிடித்துக் கொண்டான்! பிடித்து இன்னும் வருடிக் கொடுக்கிறான்!
இவள் எனக்காகவே மேலுலகில் நடந்து தேய்ந்தாளே, பின் அங்கிருந்து கீழே வந்து-வளர்ந்து, தினைப்புனத்தில் நடந்து நடந்து தேய்ந்தாளே! ஹைய்யோ!
நடந்த கால்கள் நொந்தவோ
இடந்த மெய் குலுங்கவோ?
//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா//
இராமனின் பாதுகைக்கு "பாதுகா பட்டாபிஷேகம்"-ன்னு சொல்லுவாய்ங்க!
ஆனால் காதல் பாதங்களுக்கு, காதல் முருகன் செய்யும், இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!
பாதம் வருடிய மணவாளா! பாதம் வருடிய மணவாளா!
ஸ்ரீ வள்ளி என்றொரு படம்!
அதற்கும் முன்பே KB சுந்தராம்பாள்-SG கிட்டப்பா மேடை நாடகம் மூலமாக...மிகப் பிரபலமான வள்ளித் திருமணக் கதை!
ஆனால் படமாக வந்த போது மெகா ஹிட்! காயாத கானகத்தே என்ற பாட்டும் இதில் தான்!
TR மகாலிங்கம் முருகனாக நடிக்க-ருக்மிணி தேவி வள்ளியாக நடித்தார்! AVM என்ற நிறுவனத்துக்கு மாபெரும் முதல் வெற்றி!
ஆனால் பல நாள் கழித்து, சிவாஜி முருகன்-பத்மினி வள்ளியாக நடிக்க, இன்னொரு படமும் வந்தது! அது அவ்வளவு ஹிட் ஆகவில்லை! முன்பு முருகனாக நடித்த TR மகாலிங்கம், இதில் நாரதர்:)
படத்தில் சுசீலாம்மா, சீர்காழி, TMS, சந்திரபாபு எனப் பலரும் பாடியுள்ளனர்! இனிமையான பாடல்கள்! அதில் ஒன்று...இன்று முருகனருளில்...
வலையேற்றித் தந்த தோழன் இராகவனுக்கு நன்றி!
உனக்காகவே பிறந்த அழகன்
உனக்காகவே பிறந்த முருகன்
உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் - வேல் முருகன்
நினைத்தாலே உள்ளமும் கனியாதா - செந்தமிழ்
நிதியான பதியோடு மகிழ் வாய்த்ததா!
இணையற்ற வீரன் குமாரன் - திரு முருகன்
உனக்காகவே பிறந்த முருகன்!
படம்: ஸ்ரீவள்ளி
வரிகள்: ?
குரல்: TR மகாலிங்கம்
இசை: ஜி.ராமநாதன்
முருகா.....உனக்காகவே பிறந்த ஜீவனை உன்னிடமே சேர்த்துக் கொள்!
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு!