சிந்தையிலே கந்தனை வை!
என்றனுயிர் உன்றனுக்கு
கன்னிமகன் கந்தனுக்கு
வண்ணமயில் வேலனுக்கு
வேதியனின் பாலனுக்கு!
காவடிகள் ஆடிவரும்;
கந்தனுன்னைத் தேடிவரும்;
சேவடிகள் கண்டுவிட்டால்,
சென்மம்கடைத் தேறிவிடும்!
பக்தரெல்லாம் பாடிவர,
சித்தரெல்லாம் நாடிவர,
கத்துங்குயில் புள்ளினமும்
கந்தன்புகழ் கூறிவர!
பால்குடங்கள் கூடவரும்;
பாலனுன்னைத் தேடிவரும்;
வேலன்முகம் கண்டுவிட்டால்
பாவமெல்லாம் ஓடிவிடும்!
கந்தன்முகம் கண்டிடவே
சிந்தையிலே கந்தனைவை
பந்தம்விட்டு வந்தவனை
சொந்தமிவன் என்றேவை!
--கவிநயா