ஆடும் பரிதனில் ஆடி வருபவன்!
அனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் வாழ்த்துகள்!
சுப்பு தாத்தா அருமையாக அனுபவித்துப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
("பாதி மதி நதி போது மணி சடை" என்ற திருப்புகழின் மெட்டில்...)
தான தனதன தான தனதன
தான தனதன… தனதான
ஆடும் பரிதனில் ஆடி வருகின்ற
வேடன் மருகனே…வடிவேலா
கூறும் அடியவர் குறைகள் தீர்த்திடும்
குறத்தி வள்ளியின்…மணவாளா
சூர பதுமனைக் கீறிப் பிளந்திட்டு
சுரபதிக் கருளிய…சுடர்வேலா
நாறும் எழில்மலர் சூடி மகிழ்ந்திடும்
தேவ யானையின்… மணவாளா
பூத கணத்தொடு சூழ வருகின்ற
வேத நாயகன்…திருமகனே
பாதச் சிலம்புகள் கீதம் இசைத்திட
பறந்து மயிலினில்…வாகுகனே
காதின் அணிகொண்டு வானின் மதிசெய்த
மாது சக்தியின்…மணிமகனே
நாதனுனை நம்பி நாளும் வணங்கிடும்
ஏழை அடியர்க்கு…அருள்குகனே
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/gallery/017.html
(படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)
படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/gallery/017.html
(படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)