ஓம் முருகா
இன்று கிருத்திகை நாள். முருகனுக்கு உகந்த நாள். இந்நாளில் குமரனின் படத்தையும் பார்த்து, மற்றும் அவன் மீது உள்ள ஒரு பாடலையும் கேட்டு அவனை நினைப்போம்.தணிக்கை விஷயமாக சுற்றுப்பயணத்தில் இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை
.ராகம்: ஷண்முகப்பிரியா
விருத்தம்
ஓம் முருகா
ஒரு முகம் சலித்தால்
மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ
நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா
ராகம்:ஸஹாணா
ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா
ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா
ராகம் :-ஹம்ஸநாதம்
ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே
திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க
நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா
-