தைபூச நாயகனே!
பூசத்தின் நாயகனே பூவுலகம் காப்பாயா ?
புள்ளி மயில் ஏறி வரும் வடிவழகா
தை மாத ஒரத்திலே தங்க ரதம் கண்டவரே
காவடியில் உன் முகம் கண்டோம் கதிர்காமா (பூசத்தின்)
செந்தூர்க் கடலினிலும் பரங்குன்றத் தரையினிலும்
பழமுதிர்ச் சோலையிலும் பழனிமலை மீதினிலும்
தணிகை மலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும்
சுவாமி மலை அருளினிலும் அரங்கேற்ற வந்தவரே (பூசத்தின்)
தைபூச விழா காணும் முருகனுக்கு அரோகரா
சித்ரம் அவர்கள் எழுதி அனுப்பியது...