9ராத்திரி-01: ஆறுபடைவீடும் ஒரே பாட்டில்!
இது ஒன்பதிரா (எ) அன்னையின் நவராத்திரி நேரம்! அந்த அன்னையின் வேலேந்தி தோளேந்தும் என் மன்னவன் வீட்டிலே, பாட்டு இல்லாமலா?
முருகன் ஆண்மகன் - அவனுக்கு ஏது நவராத்திரி என்று கேட்டால்...
அந்த முருகனுக்கு நான் உண்டு, எனக்கே நவராத்திரி! அவன் யுவராத்திரி-ன்னு வச்சிக்க வேண்டியது தான்:)
* அறுபடை வீடுகளும் ஒரே பாட்டில் வரும், சிலவே சில பாடல்களில், இதுவும் ஒன்று!
* இன்னொன்னு = சொந்தக் கவிதை, ஆறுபடைக் காவடிச் சிந்து, இங்கே!
படம்: குமாஸ்தாவின் மகள்
இசை: குன்னக்குடி
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: பூவை செங்குட்டுவன்
இதை வலையேற்றித் தந்த நண்பர் பெங்களூர் குமரன் - கூமுட்டை (on twitter @kuumuttai) அவர்கட்கு, என் இனிய நன்றி!:)
எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
(எழுதி எழுதி)
திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்!
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்!
(எழுதி எழுதி)
பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும்!
வண்ணக் கவிதை பாடப் பாட, வாழ்வும் வளமும் தேடி வரும்!
(எழுதி எழுதி)
பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!
(எழுதி எழுதி)
அறுபடை முருகன்கள் ஒரு சேர நிற்கும் அழகு!!!