Tuesday, July 31, 2007

"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]


"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.

இந்தப் புனித கவசத்தை இங்கு அளிக்க அருள் புரிந்த ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்கும், நாமக்கல் சிபிக்கும், இதனைத் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் எனது நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

Monday, July 30, 2007

"கந்தகுரு கவசம்" -- 10 [362-400]


"கந்தகுரு கவசம்" -- 10 [362-400]

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

Sunday, July 29, 2007

"கந்தகுரு கவசம்" -- 9 [321-361]


"கந்தகுரு கவசம்" -- 9 [321-361]

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

Thursday, July 26, 2007

"கந்தகுரு கவசம்" -- 8 [282-320]



"கந்தகுரு கவசம்" -- 8 [282-320]
[ஸ்கந்தகிரியின் பெருமையும், அது இருக்கும் இடமும், அத்தலத்தைப் போற்றிடும் பெரியோரைப் பற்றியும் இங்கு சொல்லப்படுகிறது.]

மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

07/27/07 "கந்தகுரு கவசம்" -- 7 [241-281]




"கந்தகுரு கவசம்" -- 7 [241-281]

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்


[எல்லாமே அன்புதான் என்பதை உணர்த்தும் அருமையான வரிகள்!
அனைவரும் இதனை உணர்ந்தால், கேள்விகள்தான் ஏது?]

Sunday, July 22, 2007

07/26/07"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]



"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

[இன்னும் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்த, கவசம் தொடரும்!]


இடகலை பிங்கலை= முன்னம் சொன்ன ஸோஹம் ஹம்ஸம் எனும் ஹம்ஸ மந்திரம் மூலமமக, இடது, வலது நாசி வழியே செல்லும் காற்று!
நித்யானந்தம்= உனை உணர்ந்ததால் எனக்கு வரும் இன்பம்.
அத்வைதானந்தத்தில்= நீயும் நானும் ஒன்றானோம் எனும் ஆனந்தம்.

"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]



"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]

முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.

மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.

முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]


பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ
என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205


[கவசம் தொடரும்!]
**********************************

படிப்பவர்களின் வசதிக்காக முழு மூல மந்திரமும் இங்கே!

"ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ"

[Om Saum saravaNabhava sriim hriim kliim
klaum Saum namaha]

அக்ஷர லக்ஷம் என்றால், ஒவ்வொருஎழுத்துக்கும் ஒரு லக்ஷம் எனப் பொருள்.
"ஓம்[1] ஸௌ[2] ம்[3] ச[4] ர[5] வ[6] ண[[7] ப[8] வ[9] ஸ்ரீ[10] ம்[11] ஹ்ரீ[12]] ம்[13] க்லீ[14] ம்[15]
க்லௌ[16] ம்[17] ஸௌ[18] ம்[19] ந[20] ம[21] ஹ[: என்பதால் இது கணக்கில் வராது.]"

21 லக்ஷம் முறை ஜெபிக்க வேண்டும்.

கோடித்தரம் என்றால், ஒரு கோடி முறை இதை ஜெபிக்க வேண்டும்.

இதை ஜெபிப்பதால் கிடைக்கும் பலன்கள் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.

முருகனருள் முன்னிற்கும்!

"கந்தகுருகவசம்" -- 4 [136-170]

"கந்தகுரு கவசம்" -- 4 [136-170]

[கந்தகுருவின் கவசம் காப்பாற்ற வருகிறது!]

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170


[காத்த கந்தகுரு, கவசமான மந்திரத்தை உபதேசிக்க வருகிறான், நாளை!]

"கந்தகுரு கவசம்" -- 3




"கந்தகுரு கவசம்" -- 3 [81-135]

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135


[கந்தனருள் கூடவரும்!]

மித்தை = பொய், மாயை, அநித்தியம் [வேதாந்தம் எல்லாம் கூட மித்தையே!];

அட்டமா சித்திகள் = அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

அணிமா= அணுப்போலாகை
மகிமா= இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனும் நிறையும் பெருமை
கரிமா= மிகக் கனமாகை
லகிமா= கனமற்றதாகும் ஆற்றல்
பிராத்தி= விரும்பிய ஒன்றை அடைதலாகிய பெரும்பேறு
பிராகாமியம்= ஒன்றுக்கு மேலும் விரும்பிய பலவற்றையும் அடையும் பெரும்பேறு
ஈசத்துவம்= எல்லாவற்றிலும் மேன்மையாகும் தனிப்பெரும் பேறு
வசித்துவம்= எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி

அஜபை = மூச்சினை உள்ளிழுக்கும் போதும், வெளிவிடும் போதும் யோகிகள் உச்சரிக்கும் 'ஸோஹம், ஹம்ஸம்' எனும் ஹம்ஸ மந்திரம்.

யோகிகள் இந்த மந்திரத்தின் மூலம் மூச்சை வெளிவிடாமலும், உள்ளே சென்றுவிடாமலும் நடுவிலே அசையாமல் நிறுத்தி வைத்து, அட்டமாசித்திகளும், ஞானசித்தியும், கைவரப் பெற்று, சிவானந்தத் தேனில் திளைப்பார்கள் எனச் சொல்லுவர்.




அப்போது 'தான் யார்?' எனும் அறிவும் புலப்படுமாம்.




இவை அத்தனையும் கூடிவர ஞானமே உருவான கந்தன் அருளின்றி இயலாது!
இதனைத்தான் சூக்குமமாக ஸ்வாமிகள் இவ்வரிகளில் உணர்த்துகிறார்கள்.

"கந்தகுரு கவசம்" -- 2 [41-80]



"கந்தகுரு கவசம்" -- 2 [41-80]

[ஸ்கந்தகிரிக் குமரனை அழைக்கையில், அப்படியே அடுத்தடுத்து, அனைத்துக் கோயில்களிலும் குடிகொண்டிருக்கும் குமரனையெல்லாம் கூடவே கூப்பிட்டு அழைக்கிறார்.]

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80


[கவசம் தொடரும்]

Saturday, July 21, 2007

"கந்த குரு கவசம்" -- 1

"கந்த குரு கவசம்" -- 1



முருகனருள் பதிவில் என்னையும் சேரச்சொல்லி சிபியார் அழைத்தபோது, ஏதோ திருப்புகழ் பதிவுகள் எழுதுவதால் நம்மையும் இணைத்திருக்கிறார்கள் எனநினைத்து, சும்மா இருந்துவிட்டேன்.

இதுவரை பெரிதாக என் பங்களிப்பு இதில் இல்லை.

நேற்று மாத சஷ்டி பூஜை.

முடிந்தவுடன், மனதில் ஒரு எண்ணம் தட்டியது.

நாமும் எதாவது முருகனருளில் எழுதணும் என!

என்ன செய்யலாம் என இந்த வலைப்பூவுக்கு வந்து பார்த்தவுடன், கண்ணில் பட்டது ஒன்று!

[சிபியார்] எழுத ஆரம்பித்து, தொடராமல் விட்ட, அனைவருக்கும் தெரிந்த, ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்!

இதை முடிக்கலாமே என ஒரு முடிவெடுத்தேன்.

இன்று தொட்ங்கி, நாளொன்றுக்கு 40 வரிகளாக, பன்னிருகையனின் புகழ் பாடும் இந்தத் தோத்திரத்தை, 12 நாட்களில் முடிக்கலாம் என்விருக்கிறேன்..... அவன் அருளோடு!

தொடர்ந்து இது வெளிவர, இப்பூவில் இணைந்திருக்கும் மற்றவரின் ஒத்துழைப்பைக் கோருகிறேன்.

இனி அவன் புகழ் பாடுவோம்!

அனைவ்ரும் வருக!
முருகனருள் பெறுக!
முருகனருள் முன்னிற்கும்!!


ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
அருளிய
கந்த குரு கவசம்



... விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40


[முருகனருள் தொடரும்]

Tuesday, July 03, 2007

மனதுக்கு உகந்தது முருகனின் நாமம்




சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் பாதையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது அழகிய சிறுவை கிராமம். சுற்றிலும் வாழைத்தோப்பும் நெல்வயல்களுக்கு நடுவில் இருப்பது சிறுவாபுரி முருகன் கோவில்.வெகுநாட்களாகச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற சென்ற ஞாயிறு காலை காரில் மனைவியுடன் கிளம்பிச் சென்று வந்தேன். மிக அழகான கிராமம்,கோவில் சிறியதுதான் இருந்தாலும்சுத்தமாக இருந்தது. .
ஞாயிற்றுகிழமையானதால் கூட்டம் கொஞ்சம் அதிகம்.பக்தர்கள் வரிசையில் நின்று முறையாகத் தரிசனம் செய்தார்கள்.முருகன் நின்ற கோலத்தில் கம்பீரமாக மலர்மாலைகளுடன் அலங்காரமாக காட்சியளித்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.அருணகிரிநாதர் இந்த தலத்து முருகனின்மேல்
நான்கு பாடல் பாடியுள்ளார்.
சிறுவாபுரிக்கு மிக அருகில் (3 கி மி) தொலைவில் ஆண்டார்குப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கும் ஒரு முருகன் கோயில் உள்ளது.
கோவிலும் சுற்றுப்புறமும் சுத்தமாக உள்ளது. நின்ற திருக்கோலத்தில் வள்ளி தெய்வயாணையுடன் அருள்புரிகிறார்.சென்னயில் உள்ள முருகனடியார்கள் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டியதலங்கள் .
முருகனின் கோலத்தையும் அழகையும் பார்த்தவுடன் இந்தப் பாடல்தான் மனத்தை நெகிழச்செய்தது.
ராகம்: சிந்துபைரவி தாளம்: ஆதி
பல்லவி
மனதுக்குகந்தது முருகன் ரூபம்


மாயயை நீக்குவது அவன் திருநாமம்

அனுபல்லவி

தினமும் காப்பது அவன் கைவேல்

தீரா வினைகளை தீர்க்கும் கதிர் வேல்

சரணம்
எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்

பண்ணும் பூஜையானால் பலன் உண்டாகும்

மண்ணில் நாம் படும் துயர் தீரும்

மாறா இன்பமும் மனதினில் சேரும்

உள்ளம் உருகி திரு.நெய்வேலி சந்தானகோபாலன் பாடும் பாடலை

நீங்களும் கேட்டுப் பருகஇங்கே கிளிக் செய்து அனுபவியுங்கள்

Monday, July 02, 2007

50. உணவினிலே நஞ்சு வைத்தார்



1986ல வந்த படத்திலிருந்து ஒரு பாட்டு இந்தப் பதிவில் பார்க்கலாம். விஜயகாந்த்தும் அம்பிகாவும் இணைந்து நடித்த படம். இந்தப் படத்தில் நம்பியார், டெல்லி கணேஷ், வடிவுக்கரசி, செந்தில், ஜெய்கணேஷ் ஆகியோரும் உண்டு. இறையருட் கலைச்செல்வர் என்ற பட்டம் கொண்ட கே.சங்கர் இயக்கத்தில் வந்த படம் வேலுண்டு வினையில்லை. அந்தப் படத்தில் ஒரு பாட்டு. உணவில் நஞ்சு வைத்து விடுகிறார்கள். அப்பொழுது வரும் பாடல் இது. கேட்போமா? மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் யேசுதாஸ் பாடிய பாடல். மிகவும் அருமையான பாடல்.



உணவினிலே நஞ்சு வைத்தால்
நீலகண்டன் மகனே..........................
உணவினிலே நஞ்சு வைத்தால்
நீலகண்டன் மகனே
உன் ஓங்காரம் அதையழிக்கும்
யாரறிவார் குகனே

வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா...........
வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா............

(உணவினிலே நஞ்சு வைத்தால்

பொன்முகமும் உன்னருளும் பார்த்திருந்தேன் வேலா...............
பொன்முகமும் உன்னருளும் பார்த்திருந்தேன் வேலா
ஒரு பெண் வடிவில் இங்கு வந்து திகைத்து விட்டேன் தேவா

கல் நெஞ்சம் கயமைத்தனம் வஞ்சனைகள் எங்கும்
பெரும் கடல் போலத் தன்னலமே கரைமீறிப் பொங்கும்
கடல் போலத் தன்னலமே கரைமீறிப் பொங்கும்

(உணவினிலே நஞ்சு வைத்தால்

மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா............
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா
அந்த மனங்களையும் நீ மாற்றக் கூடாதா தலைவா

அன்பை விட்டு மற்றதற்கே அலைகின்ற ஜனங்கள்
யாரை அழித்தேனும் தான் வாழத் துடிக்கின்ற நரிகள்

(உணவினிலே நஞ்சு வைத்தால்

சாதனையாய் நினைத்தபடி சோதிக்கிறார் உன்னை
இவர் சதிராட்டம் காண்பதற்கோ அனுப்பி வைத்தாய் என்னை

பாதகத்தால் பணவெறியால் கொல்ல வந்தார் பெண்ணை
இந்தப் பாவிகளே கெடுக்கின்றார் நீ படைத்த மண்ணை
இந்தப் பாவிகளே கெடுக்கின்றார் நீ படைத்த மண்ணை

(உணவினிலே நஞ்சு வைத்தால்


அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 21, 2007

அன்பிற்கு இல்லை பஞ்சம்!


=================================================
அன்பிற்கு இல்லை பஞ்சம்!

இன்று ஷஷ்டி தினம். எம்பெருமான் முருகனுக்கு
உகந்த நாள். முருகனின் பெருமையைச் சொல்லும்
பாடல் ஒன்றின் வரி வடிவத்தையும் ஒலி வடிவத்
தையும் பதிவிட்டு மகிழ்கின்றேன்.

அன்பர்கள் அனைவரையும் பாடலைப் படித்தும்,
கேட்டும் இன்புற வேண்டுகிறேன்.

"உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை -
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளது பாடலின்
முத்தாய்ப்பான வரிகளாகும்
-----------------------------------------------------------
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்

பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்

சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"

பாடல் ஆக்கம்: கவிஞர். பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடியவர்கள்: சூலம்ங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR.சுப்பையா
கோயமுத்தூர்.
===========================================


Get Your Own Music Player at Music Plugin

Sunday, June 03, 2007

48. இளையராஜாவே எழுதிப் பாடியது

சில சமயங்களில் சில பாடல்கள் மிகவும் அபூர்வமாக அமைந்துவிடுவதுண்டு. ஆமாம். மிகப் பிரபலமான பாடகராக இருப்பார். மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பார். ஆனால் ஒரு பாட்டுதான் இருவரும் இணைந்து வெளிவந்திருக்கும்.

முருகன் மேல் பல பாடல்கள் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இவர் இளையராஜா இசையில் இரண்டே பாட்டுகள்தான் பாடியிருக்கிறார். பத்ரகாளி படத்திற்காக ஒன்று. "ஆடுகிறாள் ஓடுகிறாள்" என்ற பாடல். தாய் மூகாம்பிகை படத்திற்காக ஒன்று. இது வேறொரு விதத்திலும் அபூர்வப் பாடல். மெல்லிசை மன்னர், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூவரும் இணைந்து பாடிய ஒரேயொரு பாடல். அதுவும் இசைஞானியின் இசையில்.

இன்னொரு அபூர்வப் பாடல் இளையராஜாவின் இசையில் உண்டு. ஆம். "சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ" என்ற பாரதியார் பாடல். கவரிமான் என்ற திரைப்படத்திற்காக வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல். வெள்ளிமலை மன்னவா என்று கணீர்க்குரலில் பாடிய இவர் இளையராஜாவின் இசையில் பாடிய முதற்பாடல் இது. இந்தப் பாடலின் எம்.பி.3 என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இதற்குப் பிறகு குணா படத்திற்காக நான்கு வரிகள் பாடினார்.

இப்படி ஏதாவது காரணங்களால் அபூர்வப் பாடல்கள் அமைந்து விடுவதுண்டு. பல இசையமைப்பாளர்கள் இசையில் இப்படிப் பல பாடல்கள் இருந்தாலும் இப்பொழுது பார்க்கப் போகும் பாடல் இளையராஜாவின் பாடல். ஆம். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய....என்ன நிறைய பாடல்கள் இருக்கின்றனவா? சரி. முருகன் பாடல்? இசைஞானியின் இசையில் முருகன் பாடல் என்றால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மகராசன் படத்தில் ஒரு பாடல். அது தவிர அவரது கீதாஞ்சலி என்ற இசைக்கோர்ப்பில் உள்ள இந்தப் பாடல். "முருகனை நினை மனமே" என்று அவர் பாவத்தோடு பாடிய பாடல். அதைத்தான் இப்பொழுது கேட்கப் போகிறோம். கேட்கலாமா?








முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஒவ்வொரு செயலிலும் பெருமை கொடுப்பவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும்
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
அவன் விழி அசைவினில் கலைகளும் மலர்ந்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

கேட்டீர்களா? இது போன்ற அபூர்வப் பாடல்கள் இருந்தால்...மறக்காமல் மயிலனுப்பவும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: Happy Birthday! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

வைகாசி பொறந்தாச்சு. மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?

பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்); அதில் ஒரு நடனக் காட்சி. ஆடுறவங்க பேர் எல்லாம் தெரியாது...
ஆனா அந்தப் பாட்டில், மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்!

இன்று வைகாசி விசாகம் (May 30, 2007)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு?
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்!
இறைவனின் திருவடிகள் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்!
அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் ஒரு அழகன்.
அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம சுப்பையா சாரைத் தான் கேட்கணும்)

உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்று திருப்புகழும் "விசாகன்" என்றே கொண்டாடுகிறது!
அவன் தான் விசாகன்-முருகன்!


அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு முருகா!

(பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!

ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)





சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)





படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா

Monday, May 21, 2007

கொஞ்சி கொஞ்சி வா குஹனே....

முருகனை பலவிதமான ரூபங்களில் பார்த்து அனுபவித்துள்ளார்கள் அவனது பக்தர்கள்.அதுவும் குழந்தை வடிவில் பாலமுருகனாக அழகு கொஞ்சும் தமிழில் வர்ணித்தவர் திரு பெரியசாமித் தூரன் அவர்கள்.இந்தப் பாட்டைக் கேட்டாலே முருகன் தவழ்ந்து வருவது போல இருக்கும்.கொஞ்சிக் கொஞ்சி முருகனை அழைத்து நம்மையெல்லாம் அவனிடமே கொண்டு சென்றுவிடுகிறார்.பாடல் நன்றாக இருந்தாலும் அதைப் பாடுபவரும் நன்றாக பாடவேண்டுமே. அந்தக் குறையும் இல்லாமல் நீக்குகிறார் திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ தன்
இனிய குரலில் அருமையாகப் பாடி.பாடலின் வரிகள் கீழே படிக்கவும்.
ராகம்:- கமாஸ் தாளம்:- ஆதி
பல்லவி

கொஞ்சி கொஞ்சி வா குஹனே
முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..)

அனுபல்லவி

அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச
கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..)

சரணம்

பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும்
அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும்
கொஞ்சி மகிழ் குமரா முருகா
அஞ்சுடர் வடிவேலா
தஞ்சம் உன்னை அடைந்தேன்
மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)


பாடலை கேட்க இங்கே "> கிளிக் செய்யவும்

Friday, May 18, 2007

கந்தன் காலடியை வணங்கினால்...!



கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள் !


பாடல்: கந்தன் காலடியை வணங்கினால்
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்


நன்றி : கோ.கணேஷ்
துள்ளலான இசையோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல் இது.

Wednesday, May 16, 2007

சிங்கார வேலவன் வந்தான்


இன்று கிருத்திகை. முருகனைப் பற்றி நினைக்கவேண்டாமா? அவன் எப்பேற்பட்ட வேலவன். சிங்கார வேலவன். வேலவனா யார் இவன்? என்று கேட்டால் வேரிமலர்ப்பதமும் வேலும் அயிலும் மின்ன வெற்றி மயிலான் நிகர் அற்ற அழகன் இவன் என்றும் கூறலாம்.
முருகன் அருளில் அன்போடு அழைத்தால் எப்படி வருவான் தெரியுமா? படித்தும் கேட்டும்தான் பாருங்களேன்.
ராகம்:- ஆனந்தபைரவி தாளம்:- ஆதி

பல்லவி

சிங்கார வேலவன் வந்தான் எந்தனை ஆள
சிங்கார வேலவன் வந்தான் (சிங்கார)

அனுபல்லவி

பொங்காதர வோடு அடங்கா மகிழ்வோடும்
பெருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினியடை
துங்கவடிவினொடு (சிங்கார)

சரணம்

ஸ்கந்தன் பணியும் அன்பர் சொந்தன் கருணை கொள்
முகுந்தன் மருகன் முருகன்
முந்தன் வினை பயந்த பந்தந்தொலைத்து அருளை
இந்தா இந்தா என்று ஏழைகுடி முழுதும் வாழ
அருள்புரிய (சிங்கார)


என்ன ஒரு வார்த்தைஜாலம் பாருங்கள்
ஸ்கந்தன் சொந்தன் முகுந்தன் பந்தம் இந்தா இந்தா
யார் இந்த மாதிரி முருகனை அனுபவிக்க முடியும்?
நம்ப பாபநாசம் சிவன்தான் கொஞ்சு தமிழில் கொஞ்சுகிறார்
திருமதி. சௌமியா அவர்கள் தன் இனிய குரலில் பாடிய இந்தப் பாடலைக் கேட்க<"இங்கே கிளிக் செய்யவும்">

Sunday, May 13, 2007

043. தாய்ப்பால் கொடுத்தாள்



குமரகுருபரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பாண்டி நாட்டில் பிறந்த தமிழ் முத்து. ஊமைக் குழந்தையாய் இருந்து திருச்செந்தூர் முருகப் பெருமான் அருளால் பேசவும் பாடவும் அருள் பெற்ற கவி. "பூமேவு செங்கமலம்" என்று தொடங்கும் கந்தர்கலி வெண்பா எழுதியவர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எழுதியவர். இவர் திருமலை மன்னருக்குச் சம காலத்தவர்.

கவியரசர் கண்ணதாசன்
ராதா ஜெயலட்சுமி
இவரைப் பற்றிய சிறிய வரலாற்றை ஆதிபராசக்தி என்ற திரைப்படத்தில் காட்டுகிறார்கள். முருகப் பெருமான் அருளால் அவர் பேசும் திறன் பெற்றதும் பாடும் பாடலே இந்தப் பதிவில் நாம் காணப் போகும் முருகனருள் பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்து ராதா(ஜெயலட்சுமி) அவர்கள் பாடிய அருமையான பாடல். (ராதா ஜெயலட்சுமி அவர்கள் தெய்வம் என்ற திரைப்படத்தில் திருச்செந்தூரில் போர் புரிந்து என்ற அருமையான பாடலையும் பாடியுள்ளார்கள்.)

சந்தநயம் மிகுந்து தமிழ்வளம் கொழிக்கும் இந்தப் பாடல் முருகன் அடியவர்கள் கேட்கவும் பாடவும் மிகப் பொருத்தமானது. இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம். அதற்கு cooltoadல் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். ஓசிதான். வைத்துக்கொள்ளுங்கள். அங்கு வேறு நிறைய நல்ல பாடல்களும் கிடைக்கின்றன.

தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணைத் தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்
வாய்ப்பாயால் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன் ஆடும் மயில் வேலன் அருள்

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
கலைஞானக் கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்


அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 01, 2007

காலமெல்லாம் இனிக்கும் காட்சி!

===========================================
காலமெல்லாம் இனிக்கும் காட்சி!

ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி காலமெல்லாம்
இனிய நினைவாக அவர்கள் மனதில் நிற்கும்.

ஆனால் முருகபக்தர்களுக்குக் காலமெல்லாம் மனதில்
நிற்கும் இனிய காட்சி ஒன்று உண்டு என்றால் அது
வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - முருகன்
அமர்ந்திருக்கும் காட்சிதான் என்பதில் எந்தவித
ஐயப்பாடும் இல்லை!

அப்படிப்பட்ட காட்சி ஒன்றை மனதை நெகிழ்விக்கும்
விதமாகக் கவிஞர் ஒருவர் பாடலாக்கிக்
கொடுத்துள்ளார். பாடலைப் பதிவிட்டுள்ளேன்.
அன்பர்கள் அனைவரையும் படித்துமகிழ வேண்டுகிறேன்!

-----------------------------------------------
"வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி


(வேல்வந்து)

பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி


பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி


வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!


(வேல்வந்து)"
--------------------------------------------------
பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா

Sunday, April 29, 2007

ஷண்முகநாதா சரணம்


சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டும் பணிந்தாலே போதும் என்கிறார் அருணகிரிநாதர். அதற்கே மனம் மகிழ்ந்து முருகன் அருள் பாலிப்பான். அப்படி இருக்கும்போது பழனி முருகனுக்கு பால்காவடி புஷ்பகாவடி,பன்னீர்காவடிகளை கால்நடையாகவே நடந்து எடுத்துச் செல்லும் பக்தர்கள் போடும் சரணங்கள் எத்தனை தெரியுமா.கேட்டுத்தான் பாருங்களேன்!

ஷண்முகநாதா ஷண்முகநாதா
ஷண்முகநாதா சரணம்
சரவண் பவனே சக்தியின் மகனே
ஷண்முகநாதா சரணம்

சித்திரை நிலவே தத்துவப் பொருளே
செண்பக மலரே சரணம்
செந்திலை ஆளும் சுந்தர வடிவே
சேவடி தொழுதோம் சரணம்

முத்திரைப் பவுனே வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே சரணம்
மூவிரு முகமே பூவிதழ் மனமே
முடிமணி தொழுதோம் சரணம்

செங்கனிச்சுவையே திங்களின் ஒளியே
சிரித்திடும் எழிலே சரணம்
சிந்தனைக் கடலே சந்தனக் குடமே
சீரடி தொழுதோம் சரணம்

பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே
பார்வதிமகனே சரணம்
பழனியம் பதியின் அழகிய மதியே
பணிவுடன் தொழுதோம் சரணம்

மங்கையர் கனவே சங்கரன் மகனே
மயிவா கனனே சரணம்
மங்கலம் தங்கிடப் பொங்கிடம் அருளே
மலரடி தொழுதோம் சரணம்

பங்கய மலரிதழ் தங்கிய திருவே
பரமனின் குருவே சரணம்
பன்னிரு விழியே புன்னகை மொழியே
பரிவுடன் அருள்வாய் சரணம்

Thursday, April 26, 2007

முத்தமிழ் எப்போது பிறந்தது?


==========================================

முத்தமிழ் எப்போது பிறந்தது?

"முத்தமிழ் எப்போது பிறந்தது?" என்று கேட்டவுடன்
ஒரு கவிஞர் பதிலை எவ்வளவு அழகாகச்
சொல்கின்றர்ர் பாருங்கள்.

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தாராம்
முத்தமிழ் பிறந்ததாம்!
ஒரு சிறந்த பாடலைப் பதிவிடுகிறேன். படித்து இன்புற
வேண்டுகிறேன்
-------------------------------------------------------------------

வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
------வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
------பால்போல் தெரியுதடி
கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
------விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
------சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
------மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
------வேலனைத் தேடுதடி!
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
------முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
------திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
------ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
------பன்னிரு கைகளடி

பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா

Thursday, April 19, 2007

முருகனுக்கு ஒரு நாள் திருநாள்



முருகனுக்கு ஒருநாள் திருநாள். ஆம் இன்று கார்த்திகைத் திருநாள்.
ஆமாம் இன்று திருமதி.தாரா நடராஜன் எழுதி திரு. ஒ.ஸ்.அருண் பாடிய இந்தப்பாடலைக்கேட்டுக் கொண்டு இருந்தேன்.மிக அருமையான பாடல்.
நீங்களும் படியுங்கள்.இசை வடிவத்தில் போட அனுமதியில்லை.
ராகம்:-- யமுனா கல்யாணி தாளம்:--ஆதி
பல்லவி
வர மனம் இல்லையா முருகா,,
வரம்தர மனம் இல்லையா என்னிடம்....(வர மனம்)
அனுபல்லவி
பிறவிப்பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன்மைந்தா குறைதீர்க்கும் குமரா... (வர மனம்)
சரணம்
வாழ்க்கை எனும் கடலிலே மூழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம் (வர மனம் இல்லையா)
இதில் சில உண்மைகள் உண்டு. இந்தப்பாட்டை கேட்டது உண்மை.
மேலே இடப்பட்டுள்ள முருகனின் பிரதிமை சிங்கப்பூரிலிருந்து இன்று என்னிடம் வந்தது உண்மை.இதை அனுப்பித்தவர் வேறு யாருமில்லை பிறைசூடன் மைந்தன் (சந்திரசேகரனின் மைந்தன்தான் ). முருகன் சிலை எனக்கு வேண்டும் எனற என் குறைதீர்த்த குமரன். பாடியவர் பெயரும் அருண்.அனுப்பியவர் பெயரும் அதேதான்
சரி இன்றையப் பாடலை பார்த்து,படித்து, கேட்ப்போமா.
ராகம்:-- சாவேரி தாளம்:- மிஸ்ர சாபு.
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உன்தன் உள்ளம் வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ( முருகா முருகா)
அனுபல்லவி
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்.. (முருகா)
சரணம்
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பே வடிவம்கொண்ட அய்யா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள்செய்வாய்
செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவனே...(முருகா முருகா)
என்ன ஒரு அழகான பாடல். பலமுறை சொல்லவேண்டாமாம். அவன் பெயரை ஒருதரம் சொன்னாலே போதுமாம் விரைவாக ஓடி வருவான் அருள்செய்ய. அன்பே வடிவம் கொண்ட அய்யா உனக்குகூட என் பிழையால் கோபம் வந்ததா.என் அந்தக் குறையைப் பெரிது படுத்தாமல் பொறுத்து அருள் செய்ய உள்ளம் உருகி வா முருகா திருச்செந்தூரில் இருப்பவனே என்று உள்ளம் உருகி வேண்டுகிறார் திரு. பெரியசாமி தூரன் அவர்கள். பாடல் அமைந்த ராகம் சாவேரி. இரக்கத்க்கென்றே பிறந்த ராகம் சாவேரி.உள்ளத்தை உருக்கி மனக்கவலையை போக்கவல்ல ராகம் இது.
மிக அழகாக இந்தப்பாடலை திருமதி.பம்பாய் ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்கள் பாடியுள்ளார்கள்
பாடலை கேட்க < "இங்கே கிளிக்"> செய்யவும்

Friday, April 13, 2007

தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!


=====================================================
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!

இன்று இனிய தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது!
தமிழ்க்கடவுள் தணிகைவேலனுக்கு
ஒரு தமிழ்ப் பாட்டைப் பதிவிட்டு மகிழ்கிறேன்
--------------------------------------------------------------------------------

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்!

ஆறெழுத்து மந்திரத்தை தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே - அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!

கந்தனடியை நினைத்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம்ஆறுமே - பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாறுமே!

இந்த அற்புதமான பாடலை எழுதியவர்:
திருமதி செளந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்
(மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின்
மாமியாராவார்கள் இந்த அம்மையார்)
=============================================
சர்வஜித்து ஆண்டு

வருகின்ற புதுவருடம் வளமாக இருக்கட்டும்
தருகின்ற நன்மையெல்லாம் தனமாக நிறையட்டும்
பெருகின்ற பொருளெல்லாம் பேருவை கொடுத்திடவே
அருகிருந்து உதவிடுவான் அழகுமயில் வேலவனே!

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

==================================

கந்தன் கருணை புரியும் வடிவேல்

வேலை வணங்குவதே நம் வேலை


==================================================================

உலகில் உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.
திருத்தணிகைக்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்டு.வலிய அசுரர்கள் மாளவும் நற்குணமுடைய தேவர்கள் வாழும்படியும் விரைந்து செல்லுகின்ற கூரிய வேலாயுதத்தை உடையவன் முருகன். எம்குலதெய்வமானஅந்த குன்றுதோறாடும் முருகனின் வெற்றி வேலைப் புகழ்ந்து பாடிய பாடல் இது.குஹனால் இயற்றப்பட்டது.
===================================================================
ராகம்:-பீம்பிளாஸ் தளம்:-தேசாதி


பல்லவி
கந்தன் கருணை புரியும் வடிவேல்

அனுபல்லவி

அருளொலியோடு ஆவி கலந்தே
அன்பும் ஆற்றலும் அறிவும் நயந்தே
இருசுகம் இருந்தே இடர்கள் களைந்தே
இன்புறச் செய்திடும் இறைவன் கைவேல்.....(கந்தன் கருணை...)

சரணம்

வெம்பகைகொல் வேல் வெற்றிதரும் வேல்
வேதப் பொருளை விளக்கும் மயில் வேல்
நம்பும் அடியார் நலம் வளர் கொள்வேல்
நங்கை வள்ளியின் திரு நாயகன் கை வேல்...(கந்தன் கருணை...)

குன்றுதோராடும் குமரன் அருள் வேல்
கோலமயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்
அணடம் வேண்டிடும் ஆதிமகள்
நம் அன்னை பராசக்தி அருட்சுடர் வேல்...(கந்தன் கருணை....)
====================================================================
இந்தப் பாடலை இயற்றியவர் திரு. குஹன் அவ்ர்கள். இதற்கு மெட்டமைத்து உயிர்கொடுத்ததும் பின்னர் அதைப்பாடி பிரபலப் படுத்தியவர் மறைந்த கான கலாதர, ஸ்வரஸாம்ராட்.திரு. மதுரை மணிஅய்யர் அவர்கள். அவர் இந்தப்பாட்டை பாடாத கச்சேரியே கிடையாது. அப்படியே அவர் பாடாவிட்டாலும் ரசிகர்கள் இதைக் கேட்காமல் கலைந்து போகமாட்டார்கள்.


அவர் பாடிய பாட்டை கேட்க இங்கே '><"கிளிக் செய்யவும்">

சர்வஜித்வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற வெற்றிவேல் முருகன் அருள்வான்
=========================================================================

Monday, April 09, 2007

36. சொல்லச் சொல்ல இனிக்குதடா!

சில பேரின் பேரைச் சொன்னாலே நமக்கு பத்திக்கிட்டு வரும்!
ஆனா பாருங்க, இங்க முருகப் பெருமான் பேரைச் சொல்லும் போது கூட, நமக்குப்
பத்திக்கிட்டு வருது = பத்தி(பக்தி) கிட்டும் வருது! :-)

சொல்லச் சொல்ல எப்படி ஒரு பொருள் இனிக்கும்?
திருப்பதி லட்டு ஒரு விண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்க!
எப்போது இனிக்கிறது? பட்டவுடன் சற்றே தான் இனிக்கிறது!

ஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,
ஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது!

அது போல, பெருமாளிடமோ, முருகனிடமோ, இறைவனிடமோ, முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி இல்லை, எல்லாம் கரைந்து விட்டோம் என்னும்படிக்கு, சுவை பற்றிக் கொள்கிறது!
தொடக்கத்தில் சும்மானாங்காட்டியும் அவன் பேரைச் சொன்னாலும்,
பின்பு அதுவே, சொல்லச் சொல்ல இனிக்குதடா!



பாலராஜன் கீதா அனுப்பிய MP3 இங்கே!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)




படம் : கந்தன் கருணை
இசை : K.V. மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
நடிப்பு: சாவித்திரி, ஜெமினி கணேசன்
இயக்கம்: ஏ.பி. நாகராஜன்

Thursday, April 05, 2007

தீராத வினையைத் தீர்ப்பதெது?

===========================================

தீராத வினையைத் தீர்ப்பதெது?

ஒரு பக்திச் சொற்பொழிவரங்கம்.

சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப்
பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு ; கரங்கள்
பன்னிரெண்டு. அறிவீர்கள்! கால்கள் எத்தனை?"

சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான்.

"கால்கள் இரண்டுதான்!"

"ஏன் காலகள் மட்டும் இரண்டு?"

அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு
அரங்கிலிருந்து பதில் இல்லை!

அவரே தொடர்ந்து சொன்னார்.

"பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச்
சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன்
பன்னிரெண்டு காலகள் இருந்தால் எந்த இரு
கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று
தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான்
ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும்,
கால்கள் இரண்டுதான்!"
--------------------------------------------------------------------------
நோய் என்பது தீர்க்ககூடியது. பிணி என்பது
தீர்க்க முடியாதது. நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணியை (chronic Disease)
குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்
குணப்படும்.

வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும்
இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம்
அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும்
முற்பிறவியில் நாம் செய்த செயல்

ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை
தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை
தன்னைச் சேர்க்கும் என்று துன்பத்தில் உழலும்
மனிதர்க்கெல்லாம் வழி காட்டும் முகமாக
கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய பாடலை
இன்று மகிழ்வுடன் பதிவிடுகிறேன்
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

-------------------------------------------------------------------------
பாடல் ஆக்கம்:: கவிஞர் திரு. வாலி
பாடியவர்:: திரு. T.M செளந்தர ராஜன்
இராகம்: மலையமாருதம்
தாளம்: ஆதி
-------------------------------------------------------------------------
பல்லவி

"ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

அநுபல்லவி

ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

சரணம்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

மாமனைப் போலிரு மாதுடன் கூடி
மாமலையில் பழமுதிர் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்து

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்"
----------------------------------------------------------------------

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

06.04.2007 5.45 A.M

Sunday, April 01, 2007

காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!

பழனியிலே இன்று பங்குனி உத்திரம்! வழியெங்கும் காவடிகள் காவடிகள்!
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்,
முருகா என்று ஓதுவார் முன்!
அது போல், பலகாலும், பார்க்கும் இடமெங்கும், காவடிக் கடலோ என்று எண்ணும் படிக்கு, அரோகரா, அரோகரா என்று காவடிகள் ஆட்டம்!

அதுவும் எத்தனை எத்தனை காவடிகள்!
பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி!
மேலும் பல காவடிகள் என்னென்ன என்று சொல்லி உதவுங்கள்!

தைப்பூசக் காவடிகளை மிஞ்சும் பங்குனி உத்திரக் காவடிகள்!

வலப் பக்கம் காவடி, இடப் பக்கம் காவடி!
முன்னே காவடி, பின்னே காவடி!
மேலே காவடி, கீழே காவடி!
இப்படி எங்கெங்குக் காணினும் காவடியடா!

குடும்ப பாரம் சுமக்கும் அன்பான எளிய மக்கள், இன்று அன்பு ஒன்றே சுமந்து எடுத்து வரும் காவடிகள்!
காவடியின் மகிமை தமிழகம் மட்டுமா பேசும்? ஈழம், சிங்கை, மலேசியா, இன்னும் தமிழ் இருக்கும் இடமெல்லாம் அல்லவா பேசும்!
இந்த இனிய நாளில், காவடிப் பாடல் ஒன்றைப் பாடி, காவடியானைப் போற்றுவோம்!





உன்னி கிருஷ்ணன் பாடுவது, இங்கே!

சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்

(ஜகம்=உலகம்; புய=புஜம்=தோள்; வரை=மலை
ஜகம் மெச்சிய மதுரமான கவிமாலை; அதைத் தன் மலை போன்ற அகன்ற தோளில் சார்த்திக் கொள்கிறான் முருகன்)

வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே

(கழுகாசலம்=கழுகு மலை; அந்த மலையின் பதியான முருகன் கோவிலின் வளத்தை நான் சொல்கிறேன் பெண்ணே!)

சன்னிதியில் த்வஜ ஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்

(த்வஜ ஸ்தம்பம் = கொடி மரம்; கும்பம்=குடம்; சலராசி=கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது )

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

(காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்கள் செவியையே சென்று அடைக்கும்!)

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.

(நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கி வருகிறார்கள்;
முருகக் கனலில் உருகிய மெழுகாய் வரும் பக்தர்கள் கதி காண்பார், இன்பம் பூண்பார்)


வரிகள்: அண்ணாமலை ரெட்டியார்
ராகம்: காவடிச் சிந்து
தாளம்: ஆதி

தமிழிசைக்குப் பெரும் பணி செய்தவர் அண்ணாமலை ரெட்டியார்.
அவரின் காவடிச் சிந்து பாடல்கள், மிகவும் புகழ் பெற்றவை. எளிய தமிழ்! அதே சமயம் துள்ளும் தமிழ்!
சென்னிக்குளம் அவர் சொந்த ஊர். அங்குள்ள முருகன் மேல் அவர் பாடிய சில பாடல்களில் அப்படியொரு சந்தம்!
பாடும் போதே, கால்கள் தானே ஆடி விடும்!

நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள் தெரியும், கால்கள் தானே ஆடுகிறாதா என்று! :-)
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் காக்கும் அடியா!

அரோகரா! அரோகரா!!


நீலக்கடல் ஓரத்திலே...




நீலக் கடல் ஓரத்திலே ஆலயம் அமைந்ததடி
கோலக் கிளிகள் குயில்கள் குமரா எனக் கூவுதடி(நீலக்கடல்)

வேலன் ஏறும் நீல மயில் நாலுவேதம் ஓதுமடி
பாலன் தன் தந்தை ஹரனுக்குபதேசம் செய்தானடி (நீலக்கடல்)

குறுநகை தவழும் குறுமுனி வதனம்
ஈராறு கரங்களும் இருள்வினை இருள் போக்கும்
குவலயம் போற்றிடும் குருபரன் சரணமடி
குறுநகை தவழ் வள்ளி குறத்தி மணவாளனடி
ஒருதரம் சரவண பவ வென உரைப்போர்க்கு
தருணமே குறை நீங்கி
இம்மை மறுமை பயன் அருள (நீலக்கடல்)

பதிவர் ஷைலஜா பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்தப் பாடலைப் பாடி அனுப்பினார்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP