Friday, January 01, 2021

உந்து மயிலெழிலன் | முருகன் திருப்பாவை - 18

உந்து மயிலெழிலன், உள்ளத்தில் பண்பொழிலன்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-18

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



18/30 | மாதவிப் பந்தல் - வள்ளி வளைக்கரத்தால், இன்பவீடு திறத்தல்!

உந்து மயிலெழிலன், உள்ளத்தில் பண்பொழிலன்
கந்தவேள் கைப்பிடிச்ச வள்ளி மணவாட்டி!
செந்தமிழ் வாய்பொழிலி, சேலாடும் கண்ணெழிலி,
வந்து கடைதிறவாய்! வாஞ்சைமிகு மாதவிப்

பந்தல்மேல் பைங்கிளிகள், குக்கூ குயிலினங்கள்
முந்துமுந் தென்று முருகவேள் பேர்பாட,
அந்தமிழ் மாதவிப்பூ அம்முருகன் தோள்படர,
வந்து திறவாய்! மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (18)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP