Tuesday, January 05, 2021

அங்கண்மா ஞாலத்தில் | முருகன் திருப்பாவை - 22

அங்கண்மா ஞாலத்தில், நம்குறிஞ்சி ஊர்த்தலைவர்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-22

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


22/30 | குறிஞ்சியின் ஊர்த் தலைவர்கள், 
தலைவர்க்குத் தலைவனாம், முருகனைக் காணல்


அங்கண்மா ஞாலத்தில், நம்குறிஞ்சி ஊர்த்தலைவர்,
பங்கு குற-வெற்பன், வேல்-சிலம்பன், மா-பொருப்பன்,
கொங்குக் கொடிச்சி, தமிழ்ப்பறையன் தொல்குடிகள்,
இங்கு திரண்டுள்ளார் பாராய் திருமுருகா!

செங்கண் சிறுமாணிக்க மாதுளையின் முத்துக்கள்
தங்கும் விழியாலே எங்கள்மேல் வி்ழியாவோ!
கங்குல் கலைந்து, கவின்பெற்று யாம்வாழ,
எங்கள்மேல் கந்தா இழிந்தேலோ ரெம்பாவாய்!   (22)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP