சிற்றஞ் சிறுகாலே | முருகன் திருப்பாவை - 29
சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்து...
(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-29
(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா
’ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)
29/30 | முருகா, எனக்கு நீயேநீ!
சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்துக்
கற்றாபோல் நாங்கள் கசிந்துருகி நிற்கின்றோம்!
பெற்றாய், பெரியாய், பெருவாழ்வே, பெம்மானே,
மற்றேதும் வேண்டாம் முருகாநீ போதும்வா!
(மற்றே-எம் கொங்கை உனக்கே திருமுருகா)
இற்றைப் பறைமேலே கோவிந்தக் கந்தா-உன்
உற்ற உறவுக்குள் மூச்சாகிப் பேச்சாகி,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயேநீ!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்! (29)
முருகன் திருப்பாவை தொடரும்..
0 comments:
Post a Comment