Wednesday, January 06, 2021

மாரி மலைமுழைஞ்சில் | முருகன் திருப்பாவை - 23

மாரி மலைமுழைஞ்சில் சிங்கம் உறங்குவதால்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-23

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



23/30 | தமிழ்நிலம் தூக்கம் கலைக்கச் ‘சீறிய’ சிங்கமாய் எழுவாய்!

மாரி மலைமுழைஞ்சில் சிங்கம் உறங்குவதால்,
பூரித்த குள்ளநரி நீள்-பிடரி ஒட்டிவரும்;
ஆரியம்போல் பார்-வழக்கு செத்துவிடாச் செந்தமிழின்
வீரியத்தில் ஒட்டி உறிஞ்சுதுகாண் பண்பாட்டை!

சீரிய சிங்கம்போல் சீறியெழு வேல்முருகா!
வேரி மயிர்பொங்க மாநிலத்தின் தூக்கத்தை,
மூரிக் கலைத்து, அறிவுற்றுத் தீவிழித்துக்
காரியங்கள் ஆற்ற எழு-ஏல்-ஓர் எம்பாவாய்!   (23)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP