Sunday, January 10, 2021

கூடாரை வெல்லும்சீர் | முருகன் திருப்பாவை - 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-27

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



27/30 | பாவை நோன்பு நிறைவு - கருப்பட்டிப் பொங்கல்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா,
கூடாரைக் கூட்டும்நம் காதல் திருமுருகா!
பாடிப் பறைகொண்டோம் பாருக்கு நன்னலங்கள்,
மூடிப் புதைத்திட்டோம் ஆன்மீகத் தன்னலங்கள்!

தேடி,வனப் புத்தட்டும், தெள்ளிய ராக்கொடியும்,
நாடி நலம்புனைந்து, நல்லாடை தானுடுத்தி,
பாடியே, பொங்கல் கருப்பட்டி தான்கலந்து,
கூடியே உண்போம்; குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!   (27)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP