Saturday, January 09, 2021

மாலே மணிவண்ணா | முருகன் திருப்பாவை - 26

மாலே மணிவண்ணா மால்மருக வேல்முருகா!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-26

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


26/30 | பாவை நோன்பின் 6 பொருட்கள்!

மாலே மணிவண்ணா மால்மருக வேல்முருகா!
பாலேய் தமிழ்கொண்டு பாவைநல் நோன்புக்கு,
ஏலே எவைஎவை? செப்புவோம் கேட்டிதியோ!
கோலமும், தீபம், கொடிமயில், வெண்கடம்பும்,

வேலும், விழைநெஞ்சும்.. இவ்வாறும் அவ்வாறாம்!
சாலவும் நீபரிந்து சாற்றுக-எம் கோட்பறையை!
மேலோர்கள் நூல்தமிழை மேதினியில் நீடூழி
ஆல்போல் தழைத்து அருளேலோ ரெம்பாவாய்!   (26)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP