கறவைகள் பின்செல்லும் | முருகன் திருப்பாவை - 28
கறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்!
(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-28
(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா
’ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)
28/30 | ஆதிகுடி மக்கள், இயற்கை வாழ்வு
கறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்,
பறவைகள் பின்செல்லும் பார்குறிஞ்சி மக்கள்,
உறவுகள் கொண்டு உயர்ந்தோங்கி வாழ்வார்!
அறிவு-இயற்கை ஆதிகுடிச் செந்தமிழின் செல்வம்!
பிறவிக்கு வித்தாகும் பேர்-ஆசை நீக்கி,
அறத்துக்கு மாயோனும் சேயோனும் ஆகி,
குறையொன்று மில்லாத கோவிந்தக் கந்தா,
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்! (28)
முருகன் திருப்பாவை தொடரும்..
1 comments:
மிக மிக அருமை ஐயா
Post a Comment