Tuesday, December 26, 2006

019: அசுரர் தம்மை வென்ற வடிவேலன்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!



அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்





குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்



நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்



மெட்டு: காவடிச்சிந்து
இயற்றியவர்: அண்ணாமலை ரெட்டியார்
பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள்

Monday, December 18, 2006

018: பாரதியின் வேலன் பாட்டு!

பாரதியின் வேலன் பாட்டு

பாடியவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
பாடல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!


வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!

சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே


கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!



வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.


கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!


பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை

"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!

Sunday, December 03, 2006

017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)




திரைப்படம்: கந்தன் கருணை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


திருக்கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயன் புகழைப் பாடுவோம்!

Thursday, November 23, 2006

016. வனவேடன் ஒருவன் வந்தான்

எத்தனையே அரிய பெரியவர்கள் கவி சமைத்துக் கந்தனைக் களித்திருக்கிறார்கள். அதை இசை வல்லுனர்கள் இனிமை கூட்டி உளமும் உயிரும் உருகிடப் பாடிப் புண்ணியம் செய்திருக்கிறார்கள். நாமும் முருகன் மேல் பாடல் எழுதி அதற்கு இசையும் கோர்த்தால் எப்படியிருக்கும் என்று நெடுநாள் ஆவல். ஆவல் பெருகினால் செயல்படுத்துவது கந்தனல்லவா. கவியும் தந்து அதைப் பாட ஷைலஜா அவர்களையும் அறிமுகப்படுத்தினான். இதோ பாடல். இதை இங்கே ஷைலஜா அவர்களின் இனிய மெட்டிலும் குரலிலும் கேட்கலாம்.



வனவேடன் ஒருவன் வந்தான்
எனைக் கணை போலும் விழியாலே
உருக்கியே நின்றான்
முருகன் என்னும் பெயரோடு (வனவேடன்

சிலை தொட்ட கை கண்டுச் சிலையாவதோ
மலை தோற்ற தோள் கண்டு மலைப்பாவதோ
தலையோடும் அறிவில் அவன் தலைப்பாவதோ
நிலைமாறி நான் இன்று தடுமாறவோ (வனவேடன்

வேல் கொண்ட கந்தன் எனக் காட்சி நின்றான்
கோள் தன்னை விரட்டி நல்ல ஆட்சி தந்தான்
பாலுள்ளம் பொங்கி எழ மாட்சி செய்தான்
கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான் (வனவேடன்

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, November 18, 2006

015: என்னைக் கா வா வா! முருகா வா வா!

கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?

சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!

பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)

தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)


ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!




இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சுதா ரகுநாதன்
இராகம்: வராளி
தாளம்: ஆதி

Thursday, November 16, 2006

014 : தமிழுக்கு உரிமை உண்டு!!!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?

முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ நீ இப்படி இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!





பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!


திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்
இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்

Sunday, November 05, 2006

013 : எத்தனை கண் வேண்டுமைய்யா?

தங்க ரதத்தில் சுப்ரமணிய சுவாமி, திருத்தணி


எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு! (2)
- எத்தனை கண்

தணிகைதனில் கோவில் கொண்ட
சுப்ரமணிய நாதா நீயும்
சேவற்கொடி தானும் கொண்டு
தங்க ரதம் ஏறி வர!
- எத்தனை கண்

குன்றதனில் ஏறி நின்றே
குமரகுரு நாதா நீயும்
குறையிலாத செல்வம் தருவாய்
செந்தில் வடி வேலவனே!
- எத்தனை கண்

அறுபடை வீடு கொண்ட
ஆறுமுக நாயகனே!
உன்னடியை நாடி வந்தோம்
பொன்னடியைத் தாருமைய்யா!
- எத்தனை கண்

முத்தான முத்துக் குமரா!
காக்கும் கதிர் வேலவனே!
பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!
- எத்தனை கண்

Sunday, October 29, 2006

012: நீயே சரண் ஷண்முகா


நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீ அருள்வாய் என நான்
நின் அடிமைக்கு (நீயே சரண்)

சேய் யாரிடமும் செல்லுமோ - ஈன்ற
தாய் அல்லால்
திருமால் மருகனே
வடிவேல் முருகனே (நீயே சரண்)

சுவாமிநாத மாமயூர வாஹ
சங்கர கௌரி குமார விசாக
ராமதாசன் பணியும் குஹா
சுரராச பூஜித வர முருகா (நீயே சரண்)

பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
இராகம்: காம்போஜி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

Wednesday, October 25, 2006

011 : மண்ணுக்கும் விண்ணுக்கும்....!

Photobucket - Video and Image Hosting

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2)

குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ
குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2)
என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2)
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்

Thursday, October 12, 2006

010. பழநி மலை மீதிலே

முருகன் பாடல் என்றால் கே.பி.சுந்தராம்பாள் பாட்டு இல்லாமலா! இதோ இன்றைய முருகனருளில்!



பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பால்
பழம்
தேனோடு
பஞ்சாமிர்தம் தந்து
பக்தரைக் காக்கும் முருகா
பக்தரைக் காக்கும் முருகா

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்
சக்தி வடிவுண்டு
மயிலுண்டு
கொடியுண்டு வேல் வேல்

வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற கரம் பல நூறு
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
எங்கள் இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
வேல் வேல் சக்தி வேல் வே
வெற்றி வேல் வேல்
ஞான வேல் வேல்
வடி வேல் வேல்

பாடியவர் : கேபி.சுந்தராம்பாள்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்
திரைப்படன் : துணைவன்
படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/K._B._Sundarambal

இந்தப் பாடலைக் கேட்க



அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, October 10, 2006

008 : முருகன்மேற் காதல்

"முருகன்மேற் காதல்" என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் இயற்றிய பாடல். ஒலி வடிவம் எனக்கு கிடைக்கவில்லை.

முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)


கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)

வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)


குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)


குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)


ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)


பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)


கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)


முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)


வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்புத் திட்டம்

Thursday, October 05, 2006

007 : மருதமலை மாமணியே முருகய்யா...!



கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
(மருதமலை)

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
(மருதமலை)

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா



திரைப்படம்: தெய்வம்
பாடியவர் : மதுரை சோமு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்

"துள்ளி விளையாடும்"

"துள்ளி விளையாடும்"

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஆதிரை என்ற சிறுமி இந்தப் பாடலை எங்கள் வீட்டிற்கு வந்த போது பாடினார்.
கேட்டதுமே மனம் பறி கொடுத்தேன்.
செட்டிநாட்டு மக்கள் அந்தக் காலத்தில் மலேயாவுக்கு பிழைக்கப் போனபோது கூடவே செந்திலாண்டவனையும் கூட்டிச் சென்று கோயில் கட்டி, 'தண்ணீர்மலையான்' எனப் பெயரிட்டு வழிபட்டனர்.
இப்போதும் பல செட்டி நாட்டுப் பெயர்கள் தண்ணீர்மலையான் என்று இருக்கும்.
அந்த நிலையைக் காட்டும் இப்பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.[குறிப்பாக ஆசிரியர் ஐயா அவர்களுக்கு!!]

பாடல்

துள்ளி விளையாடும் - சின்னப்
பிள்ளை முகம் மறந்து

வெள்ளி விளையாடும் -- மலேயா
சீமைநகர் அடைய

நாகப்பட்டினத்து - கடலில்
நங்கூரம் பாய்ச்சி நிற்கும்

செட்டிக்கப்பலுக்கு - துணையாம்
செந்தில் ஆண்டவனே


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

கப்பல் ஏறுகையில் - முதலில்
கடல் முகம் தெரியும்

கண்களில் நீரோடு -- நிற்கும்
மனைவி முகம் தெரியும்

அன்னை முகம் தெரியும் -- அன்பு
பிள்ளை முகம் தெரியும் [2]

அந்த முகங்களிலே -- செந்தில்
கந்தன் முகம் தெரியும்


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

பினாங்க் துறைமுகத்தை -- கப்பலும்
நெருங்கி விட்டதையா

கப்பல் அடியினிலே -- கூட்டம்
கண்டிட வந்திருக்கு

தண்ணீர் பூ மலையில் -- நிற்கும்
தண்ணிமலையானே[எங்கள்]

பெண்டுபிள்ளைகளைக் -- காக்கும்
புனித மலையானே


தண்ணி மலையானே -- எங்கள்
தண்ணிமலையானே
கண்களில் நீர் வழிய -- நாங்கள்
கைகள் கூப்புவோமே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

தைப்பூச நாளினிலே -அவனும்
நகரத்தைக் கண்டிட

தங்க ரதமேறி - தேரில்
நகர்ந்து வருவானாம்

பார்க்குமிடமெங்கும் -- மக்கள்
பக்தி முகம் தெரியும்

காவடி ஆடிவரும் -- சீனர்
காலடியும் தெரியும்


தண்ணிமலையானே -- எங்கள்
தாகம் தீர்ப்போனே
வந்தவரைக் காக்கும் -- எங்கள்
தண்ணிமலையானே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

[விரைவு கதியில்][fast speed]
செந்தில் ஆண்டவனே -- ஐயா

செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே x3

கந்தனுக்கு வேல் வேல் - அந்தக்
காவடிக்கும் வேல் வேல்
கந்தனுக்கும் வேல் வேல்- எங்கள்
கடம்பனுக்கும் வேல் வேல் x 3
****************************************************

முருகனருள் முன்னிற்கும்!
வேலும் மயிலும் துணை!

005. கந்தனைக் கண்டீர்களா

இது ஒரு மீள்பதிவு. ஏன்? இதோ இந்தப் பாடல் ஒலி வடிவில் நீங்கள் கேட்க. கேட்ட பிறகு இந்தப் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் கண்டிப்பாகச் சொல்லுங்கள்.

Photobucket - Video and Image Hosting

கந்தனைக் கண்டீர்களா
கன்னித் தமிழ்ப் பெண்டீர்களா (கந்தனைக் கண்டீர்களா

அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

கையிலே வேலிருக்கும்
கண்ணிலே ஒளியிருக்கும்
நெற்றியிலே நீறிருக்கும்
மத்தியிலே பொட்டிருக்கும்
செம்பவழ இதழ் இருக்கும்
திங்களைப் போல் முகம் இருக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

தோளிலே அழகிருக்கும்
வேதத்தில் கொலுவிருக்கும்
காலிலே கொலுசிருக்கும்
தாளமாய் அது ஒலிக்கும்
மழலை மொழி இருக்கும்
தமிழே கலந்திருக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

கால் கோடு பட்ட இடம்
கமகமன்னு மணக்கும்
மயிலேறிப் போகையிலே
மங்கல மணி ஒலிக்கும்
அவன் பெயர் சொன்னதுமே
அமுதமாய் இதழ் இனிக்கும்

எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

பாடியவர் : தெரியவில்லை
பாடல் : தெரியவில்லை
இசை தெரியவில்லை

கேட்பதற்கு மிகவும் இனிமையான இந்தப் பாடல் பற்றித் தகவல் கொடுத்தால் மிக்க நன்றி. அப்படிக் கொடுப்பவருக்கு இன்னொரு இனிய பாடல் அனுப்பப்படும்.

படம் நன்றி : http://www.holytreebalasubramaniar.com/Arupadai%20Veedu.htm

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, October 01, 2006

006: ஆடி வருவாய் குகனே



ஆடி வருவாய் குகனே ஷண்முகனே
ஓடி வருவாய் மயில் ஏறிவருவாய் (ஆடி)

பாடி வரும் பக்தர் துன்பங்கள் தீர்த்திடு
நாடி வந்து அன்பர்களை அணைத்து மகிழ்வாய் (ஆடி)

பாடிப்பாடி அகமகிழ்ந்தேன் ஆறுமுகனே
தேடித்தேடிக் காத்திருந்தேன் கார்த்திகேயனே
கோடிக்கோடி இன்பம் தரும் கதிர்காம வேலனே
கூடிக்கூடிப் பக்தர் போற்றும் சுப்ரமண்யனே (ஆடி)

மிகச் சிறிய பாடல் தான். ஆனால் கர்நாடக இசையில் கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.

பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்
இராகம்: அம்ருத வர்ஷிணி
தாளம்: ஆதி
இயற்றியவர்: புனிதாஸ்ரீ

Monday, September 18, 2006

004. வருவான் வடிவேலன்

Photobucket - Video and Image Hosting

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன் (வருவான்......

சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாயிதழை நனைக்கின்றவன் (சிரித்துக்.....
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (ஆஆஆஆஆஆ...இடையினில்...

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியனவன் நமக்கு இனியனவன் (கொடியவர்.....

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்

திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
கந்தர் சஷ்டிக் கவசக் கதை பாடவா
அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா (வருவான்.....


பாடியவர் : வாணி ஜெயராம்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்தவர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
திரைப்படம் : வருவான் வடிவேலன்
முருகன் படம் நன்றி
www.murugan.org

Tuesday, September 12, 2006

003 : தவமிருந்தாலும் கிடைக்காதது



தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
அதைத் தருவதுதான் முருகா உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
அருள் வடிவாகி ஆறுதல் தருமே
ஓமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

கார்த்திகை ஒளியும் காவடி அழகும்
பார்த்திடும் வேளையில் பலன் வந்து சேரும்
கருணையின் வடிவே நான் காணும் துணையே
அடியவர் தினம் தினம் வணங்கிடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

பாடியவர் : பி.சுசீலா
இசை : சோமு - காஜா

002 : சொல்லாத நாளில்லை..சுடர்மிகு வடிவேலா..!

Photobucket - Video and Image Hosting


பாடல்: சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்




சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !

நன்றி : கோ.கணேஷ், கோவில்பட்டி

001 : விநாயகனே வினை தீர்ப்பவனே!

Photobucket - Video and Image Hosting


ஆற்றங்கரை அமர்ந்த ஆனை முகத்தோனே!
ஐயமேதுமின்றி அருள்வழங்கும் ஐங்கரனே!
வினைகள் தீர்க்கவல்ல வேழமுகத்தோனே - விநாயகனே!
எந்தமிழால் வணங்குகிறேன்! ஆசிதந்து அருளுமைய்யா!
***************************************************************************
பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP