Tuesday, September 17, 2013

"இளையராஜ முருகன்": செல்லப் பிள்ளை சரவணன்!

பொதுவா...
முருகனைப் பற்றிய இளையராஜா பாடல்கள் மிகவும் குறைவு (சினிமாவில்)

தனிப்பட்ட Album-களில், இசைஞானி அவர்கள், சில பல பாடி/ இசையமைத்து இருக்கலாம்!
(கீதாஞ்சலி Album - முருகனை நினை மனமே)

ஆனால் சினிமாவில்?


1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம் - மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

வள்ளி வள்ளி என வந்தான் என்ற "பொதுவான" பாட்டும் உண்டு!
But, இவ்ளோ தான் "ராஜா-முருகன்" கூட்டணியா?:(


அல்ல!
பெண் ஜென்மம்!

அண்மையில் ஒரு தேடலில், அபூர்வமான ராஜா பாடல் ஒன்னு கிடைச்சுது = ராஜா & சுசீலாம்மா Solo
நீண்ட நாள் கழிச்சிக் கேக்குறேன்; மிக்க இனிமை!

ஒரு கோயிலின் இரு தீபங்கள், இரு வேறு திசை பார்ப்பது என்ன?
ஒரு பாடல் தான் நாம் பாடினோம்; இறு வேறு இசை கேட்பதென்ன?

This song is very close to my feelings!
ஆனா, அப்படியே நூல் பிடிச்சிப் போனாக்கா.....
Wow! அதே படத்தில் = 2 முருகன் பாடல்கள்!
Dei Loosu Muruga, two more Raja Songs for u da!:)

Someone lucky to have u, my honey:) .. And you are lucky to have Raja Songs = 6 in total:))


பெண் ஜென்மம் என்ற படம்!
ராஜாவின் அபூர்வங்களில் ஒன்று! ஆனா இந்தப் படம் பேசப்படாமலே போனது ஏனோ?
*"ஓய் மாமா" என்ற ஜானகி பாடலும் உண்டு, with SPB:)
*சுசீலாம்மா பாடலும் உண்டு, with Yesudass

இது ஆரம்ப இளையராஜா! அதனால் MSV வாடை அடித்தாலும் அடிக்கலாம்:)
ஆனா, Tabla & Guitar காட்டிக் கொடுத்துரும்!
பாடலின் சரணம் அழகோ அழகு! = வள்ளி மான் - புள்ளி மான்! 
செம்மான் மகளைத் திருடும் திருடன் என்ற அநுபூதி போலவே வரும்!

ஒரே படத்தில் = 2 முருகன் பாடல்கள், ராஜ இசையில்:
1. செல்லப் பிள்ளை சரவணன் -  Susheelamma & Yesudass
2. வண்ணக் கருங்குழல் வள்ளி - Susheelamma

இரண்டாம் பாட்டில், இளையராஜா சொல்லித் தரச், சுசீலாம்மா, ஒரு கதா காலட்சேபமே பண்ணுறாங்க:)
So different :)) மேயாத மான்! = அதை, அடுத்த வாரம் பார்ப்போம்!
இன்னிக்கி "செல்லப் பிள்ளை சரவணனுக்கு" hai சொல்லுவோமா?:) வாங்க....



செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
கோபத்தில் மன ஸ்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்!!
(செல்ல)

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் - பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்!
கூந்தலில் மலர் சூடியே - அவன்
கூட நான் வர வேண்டுவான்!
மயங்கி நான் மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்!!

செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
வள்ளியை இன்ப வல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்!
(செல்ல)

மாலையில் ஒரு மல்லிகை - என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை!
மன்மதன் கணை ஐவகை - அதில்
ஓர் வகை இவள் புன்னகை!!

இடை துவள
கலை பயில
(செல்ல)

கார்குழல் உந்தன் பஞ்சணை - இரு
கைகளே உந்தன் தலையணை!
வேலவன் கொஞ்சும் புள்ளி மான் - அதன்
வடிவம் தான் இந்த வள்ளி மான்!

அருகில் நான் வந்தேன்..
இதழ்ச் செந்தேன்
இதோ தந்தேன்
(செல்ல)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

ராகம்: மாண்ட்

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela

6 comments:

Krubhakaran September 17, 2013 7:56 AM  

Muruganai ninai maname from his Devotional album "Geethanjali"

http://www.raaga.com/play/?id=9688

சீராளன் September 19, 2013 2:29 AM  

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு,,,,

அழகு அருமை

வாழ்த்துக்கள்

maithriim September 24, 2013 9:47 PM  

தேடித் தேடி முருகன் பாடல்களை சேகரிக்கும் உங்கள் குணம் தேடித் தேடி மலர்களைப் பறித்து அவனுக்குச் சூட்டுவதற்கு சமம் :-))

amas32

maithriim September 24, 2013 9:48 PM  

தேடித் தேடி முருகன் பாடல்களை சேகரிக்கும் உங்கள் குணம் தேடித் தேடி மலர்களைப் பறித்து அவனுக்குச் சூட்டுவதற்கு சமம் :-))

amas32

Vaasi engira Sivakumar June 28, 2016 11:41 AM  

லால்குடி அவர்கட்கு இயற்றிய தவறிழைத்த...

Vaasi engira Sivakumar June 28, 2016 11:41 AM  

லால்குடி அவர்கட்கு இயற்றிய தவறிழைத்த...

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP