Saturday, December 19, 2020

மாயனை, பைந்தமிழ் | முருகன் திருப்பாவை - 05

மாயனை, பைந்தமிழ்த் தென்மதுரை மக்களின்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-05

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


05/30 | நோன்பு கைக்கூட வாயும் மனமும் வேண்டுதல்!

மாயனை, பைந்தமிழ்த் தென்மதுரை மக்களின்
தூய்மை மனந்தனில் வையை அழகனை,
ஆயர்கள் மேவு-தொல் காப்பியத் தோன்றலை,
நேயர்கள் இட்டதொரு தொன்ம-நடு கல்லினைத்,

தீயினில் கள்ள-வழி பாடுகள் வேண்டிடா
வாயினால் பாடி மனத்தினால் சிந்தனை!
தாயினும் நம்மொழி முல்லை குறிஞ்சியாய்ச்
சேயின் முருகுமால் செப்பேலோ ரெம்பாவாய்!   (05)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP