Friday, December 18, 2020

ஆழி மழைமுருகா | முருகன் திருப்பாவை - 04

ஆழி மழைமுருகா, யார்க்கும்-நீ கைகரவேல்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-04

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


04/30 | நோன்புக்கு, இயற்கையே ஆதாரம் எனல்!

ஆழி மழைமுருகா, யார்க்கும்-நீ கைகரவேல்!
ஆழி அவன்மருகா, அண்ணல்-உன் செங்-கர-வேல்!
தாழும்நீர் சூடாகித், தாவியெழும் மேலாப்பு,
சூழும்நீர் சூடுவிட்டு, வெண்துமி பின்-துளியாகி,

மூழும்நீர் முத்தாகி, மூள்முகிலாய்த் தண்வளிமம்
வீழும்நீர் பற்பலவாய்; பற்பலவும் ஒன்றாகும்!
ஊழி உலகினிலே ஆழிமேல் நாடகங்கள்!
வாழிநீ, வாழிநாம், வாழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (04)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP