Wednesday, December 30, 2020

நாயகனாய், நற்றமிழ் | முருகன் திருப்பாவை - 16

நாயகனாய், நற்றமிழ் நன்னிலத்தின் செங்குறிஞ்சி...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-16

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



16/30 | முருகன் முற்றம்; காவல் கோட்டத்தானை வணங்கல்!

நாயகனாய், நற்றமிழ் நன்னிலத்தின் செங்குறிஞ்சிக்
கோயிலைக் காப்பவனே, கோன்வீட்டுத் தாழ்திறவாய்!
மேயத்தொல் காப்பியச் சேயோன், நெருநலில்
நேயப் பறைதருவேன் என்றே வழிமொழிந்தான்!

வேயுறு தோளியாள் வள்ளியே முன்மொழிந்தாள்!
தூயவாய், யாக்கை, மனமொடு வந்துளோம்!
நீயதை ஏற்று-எம் அம்மானைக் கைக்கூட
ஆய அருங்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்!   (16)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP