Tuesday, June 25, 2013

தணிகை மலை "தர்ம துரையே" - வா வா வா!

கல்லூரி Placement-க்கு வந்த முதல் நிறுவனம்; Hurrah எனக்கு வேலை கிடைச்சாச்சி!:)

எனக்கும், உற்ற நண்பனுக்கும் - ஒரே நிறுவனத்தில் வேலை; கூடவே ஒரு பொண்ணுக்கும்;
எல்லாரும் மும்பை சலோ!:) - Dadar Express!


வழியில், அரக்கோணம் தாண்டும் போது, நான் மட்டும் "திடும்"-ன்னு எழுந்து சென்று விடுகிறேன்!
அந்தப் பொண்ணு, "ஏய் ரவி, எங்கே தனியா போற? நானும் ஒன் கூட வரேன்" -ன்னு சொல்ல...

அந்த நண்பன், "ரவி எங்கயோ சைட் அடிக்கப் போறான்; நீ எதுக்கு எப்பமே அவன் பின்னாலயே சுத்துற?" -ன்னு கொஞ்சம் எரிச்சலாக் கேக்குறான்:)
He used to be kinda possessive abt me, being a close friend:) His name ராஜி = Reverse of ஜிரா:) Life became Full Circle!

அப்படி யாரைப் பாக்கப் போனேன்? -ன்னு பொறவு தெரிஞ்சிக்கிட்டு, அந்தப் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்குறா:)
Hey Ravi, Sometimes, you think like a baby -ன்னு அவ சொல்ல...
அந்த நண்பன், என்னைய ஒரு மொறை மொறைச்சது இன்னும் நினைவு இருக்கு:)

அப்படி, யாரைத் தான் பாக்கப் போனேன்?
= Train, அரக்கோணம் தாண்டிய பின்...  திருத்தணி மலை தெரியும்!
= "ஓம் முருகா" -ன்னு எழுதியுள்ள பேரெழுத்தும் நன்கு தெரியும்!!
= கதவோரம் தனியா நின்னுக்கிட்டு, அந்த லூசு முருகன் கிட்ட Hai சொல்வதில், எனக்கொரு தனி இன்பம்...



திருத்தணி மலை = 5ஆம் படை வீடு அல்ல!

"குன்று தோறாடல்" என்பதே 5ஆம் படைவீடு; அந்தப் பல குன்றுகளில், திருத்தணியும் ஒன்று!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! என்பது திருப்புகழ்;

திருத்தணி -ன்னாலே = முருகனுக்கு, மாம்பழக் கோவம் "தணி"ஞ்ச இடம் -ன்னு புராணக் கதை உருவாக்கிட்டாங்க; உண்மை அதுவல்ல!

* கோபம் தணிஞ்ச இடமல்ல!
* காமம் "தணி"ஞ்ச இடம் = திருத்-தணி!

தண்ணீர் -> தண் -> தணி;
* அனல் = தண்ணீரில் தணியும்!
* அனல் போன்ற காமம் = வள்ளி என்னும் பெண்ணீரில் தணியும்!

சங்கத் தமிழ்த் தொன்மமான, குறிஞ்சி நிலத்துக் காதல் பறவைகள்: முருகன் - வள்ளிக்கு, திருமணம் நிகழ்ந்த இடம் = திருத்தணி!
முருகக் காதல், வள்ளியிடம் தணிந்த மலை = தணிகை மலை!

இதுவே புராணம் கலவாத தமிழ்ப் பழங்குடியியல்!

ஏனோ... இன்னிக்கி, திருத்தணியைத் "திருமணத் தலம்" என்றே பலரும் நினைச்சிப் பார்ப்பதில்லை!
அடுத்த முறை போனீங்க-ன்னா, மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க: அங்கு இருப்பது மாப்பிள்ளை முருகன் - மணப் பொண்ணு வள்ளி!

திருத்தணிக்கு அருகில் தான், வள்ளி பிறந்து வாழ்ந்த = வள்ளி மலை!
எங்க வடார்க்காடு மாவட்டம் என்பதாலோ என்னவோ... I have a deep fantasy abt vaLLi malai & thaNigai malai;

இன்றைய பாடலும் திருத்தணிப் பாட்டே!
முருகனை = "தர்ம துரை" -ன்னு கூப்புடுறாங்க, பாடகி ரமணியம்மாள்; Super Star Movie is Dharma Durai:)

"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:) செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:) (அம்மா வழித் தாத்தா)

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்.. இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!

கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?
ஆங்கிலப் புத்தாண்டு அன்று, துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப..
வள்ளிமலை சுவாமிகள், திருத்தணிப் படி உற்சவத்தை, வேண்டுமென்றே Jan 1st நடத்தத் துவங்கினார்; முருகனும் "துரை" ஆனான்:)

Hey Honey, Muruga Durer, I aime ous.. I love you da:))




தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா

அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா
ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா
ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா

என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா
பாவி என்னை மறந்திடாதே - வா வா வா
--------------

வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா
வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா

என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா

திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப்
பெருந் துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
--------------

சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சல் ஆரம்ப மாயன்

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
சம்ப்ரம-ஆ னந்த மாயன்

மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால்
வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே
வந்துநீ அன்பில் ஆள்வாய்
--------------

கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா

கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா
கண்டலே சன்சொல்-வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று-மோ தும் ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!



வரிகள் & குரல்: பெங்களூர் ரமணியம்மாள்

அம்மாளின் குரல் = ஆண்மைக் குரல்; முடவனையும் துள்ளி ஆட வைக்கும்;
குரல் மட்டுமல்ல, தானே பாட்டு எழுதவும் செய்வார்கள்;

இந்தப் பாட்டு, மகாகவி பாரதியின், "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" மெட்டில் எழுதியது; (முன் இரு பத்திகள்)
பின் இரு பத்திகள் - திருச்செந்தூர் திருப்புகழ் - தன் பாட்டில் பயன்படுத்திக்கிட்டாங்க;
அம்மாளைப் பற்றி மேலும் அறிய = இங்கே (old kathirgamam post)

திருக் கேதாரம் (எ) கேதார்நாத் -இல்,
மலை வெள்ளத்தில் திடும்-என உயிர் துறந்த உள்ளங்களுக்கு, இவ்வமயத்தில் அஞ்சலி!

முருகா, எனக்கும்...
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா;

Monday, June 17, 2013

கேபி சுந்தராம்பாள்: எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!

சில சமயங்களில் முருகன் கொடியவன் - சேவல் கொடி-யவன்!
அவன் மனம் = இளகவே இளகாத பாறை!
ஆனால் அந்தப் பாறையிலும் = முளை விடும் செடிகள் சில உண்டு;


பசிக்கு நீர் கிடைக்காது, பாறையில்!
எதுக்க்க்க்க்கு, அப்படி, பாறையில் போய் வாழணும்?

இடம் மாற்றிப் பாருங்கள் செடியை? = வாடி வதங்கி விடும்!
அதன் உணவே = அந்தப் பாறைச் சத்து தான்! முருகச் சத்து தான்!

என்ன ஆனாலும்,
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!
வாழ்வே போனாலும்
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!

அந்த அடியவர் செடிகள், அவனைக் காட்டிலும் உயர்ந்தவை!
அதிலொரு செடி = கே.பி. சுந்தராம்பாள் (எ) KBS
அம்மாவின் வாழ்வியல் = இங்கே, http://murugan.org/tamil/sundarambal-2.tamil.htm
KBS அம்மாவைப் பூவும் பொட்டுமாய்க் காண்பதில்,
ஏனோ, எனக்கொரு இனம் புரியாத மகிழ்வு

இன்றைய பாடல்
= KBS அம்மாவின் முருகத் திரை வாழ்விலே இறுதிப் பாடல்!(1969)

பின்பு, காரைக்கால் அம்மையார் (எ) தோழி புனிதாவின் கதை!
பின்பு, திருமலைத் தெய்வம் = அதுவே கடைசி!
ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை? -ன்னு மனக்கவலையோடவே பாட வைத்தனையோ எந்தையே?

இது....முருகன் திரைப்பாடலில் இறுதிப் பாடல்!



துணைவன் -ன்னு ஒரு படம் வந்துச்சி; (தேவர் எடுத்த படம், எம்.ஏ. திருமுகம் இயக்குநர்)
இதில் தான் வாரியார், மிக நீண்ட நேரம் நடிச்ச படம்!

வாரியார் படங்கள்: சிவகவி (வசனம்), தெய்வம், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி -ன்னு சில படங்கள்!
எல்லாவற்றிலும், ஆரம்பக் காட்சிகள் (அ) சிறிது நேரம் தான்; துணைவன் படத்தில் தான், பல இடங்களிலும் வந்து போவார்!

பிறக்கும் போதே உணர்வற்றுப் போன ஒரு குழந்தை (மாறன் நம்மாழ்வார் போலவோ என்னமோ?)
அதைக் கோயில் கோயிலாகச் சுற்றி எடுத்துக்கிட்டு வேண்டும் பெற்றோர்; வழித்துணைக்கு KBS அம்மாவை அழைக்கிறார்கள்;

மொத்தம் 28 முருகன் ஆலயங்கள்!
படைவீட்டின் உள் முகப்புகளையெல்லாம் இந்தப் படத்தில் காணலாம்;

முருக உள்ளங்கள் துடிதுடிக்க...
திருச்செந்தூரிலே, கொடி-யவன் உள்ளக் கதவு திறக்கிறது;
என் செல்லக் கொடியவா,
வா வா வா! - எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா! 





ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும்,
நம்பினோர்க்கு அருளும் முருகா...
நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை
நான் கண்டு மகிழவேண்டும்....

ஊமைக் குழந்தையாம் குமர குருபரன் நாவில்
உயர்ந்த வேல் கொண்டு எழுதி
உணர்வினில் அமுதூறும் கந்தர் கலி வெண்பாவை
உவந்து அளித்த தமிழ்க் கடவுளே!

நக்கீரன் நாவிலே ஆற்றுப்படை பாட
நல்ல தமிழ் தந்த முருகா
நாள்தோறும் உன்புகழைப் பாடிட பாடிட, அதை
நீ கேட்டு மகிழ்ந்த முருகா!

இன்று தாய் இவள் கண்ணீரும் தந்தையின் ரத்தமும்
தன் நெஞ்சம் காண விலையோ?
இங்கு தவழாத பிள்ளையைத் தவழ வைத்தால்..
நீ தந்த தமிழுக்குப் பெருமை முருகா!

வேலோடும் மயிலோடும் விரைந்தோடி வா
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!

விரைந்தோடி வா வா வா
பிணி தீர்க்க வா வா வா!
செந்தூரில் வா வா வா!
குறை தீர்க்க வா வா வா!

படம்: துணைவன்
குரல்: கே.பி. சுந்தராம்பாள்
வரிகள்: மருதகாசி
இசை: கே.வி. மகாதேவன்


பெண்ணுக்குப் பெற்றோர் வீடு = சொர்க்கம் என்றாலும்,
உள்ளத்தின் ஆழத்தில் அடைய விரும்புவது = கொண்டவன் வீடே! கொடி-யவன் வீடே!

என் உயிர் போக உகந்த இடம் = செந்தூர்;
செந்தூர்... வாசல் படியாய்க் கிடந்து, உன் வசந்த வாய் காண்பேனே!

எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
(முருகவா! வா! வா!)

Monday, June 10, 2013

முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?

இன்னிக்கி.... மறுபடியும் TMS பாட்டு தான்!
டேய் முருகா - TMS குரலைக் கேட்பதை விட ஒனக்கு என்ன பெருசா வேலை?


ஒனக்கு = ஒரு பேரு வச்சா போதாதா?
அதென்ன = "வெகு கோடி நாம"?
பாரு, இந்தப் பாட்டுல, ஒன்னைய எந்தப் பேரு சொல்லிக் கூப்புடறது-ன்னு இவருக்கு அத்தனை குழப்பமும் ஏக்கமும்?

= முருகாவா? முத்துக் குமராவா? 
= வேலாவா? கோகோ கோலாவா?

நீயே பாட்டைக் கேட்டுட்டுச் சொல்லுடா... என் செல்லப் பொற்க்கீ:)
Avantree Jogger Waterproof headset-ல்ல, குளிச்சிக்கிட்டே கேப்போமா? வா! A song in the shower:)


இந்தப் பாடல், முருகனருள் வலைப்பூவில், எப்படி இத்தனை நாள் வராம இருந்தது? -ன்னு தான் எனக்கு வியப்பு!
ஏன்-ன்னா, பாட்டு முழுக்கவே துள்ளலா Tabla இசை; ஒரு தெம்மாங்கு போலக் கொட்டிக்கிட்டே இருக்கும்!

மூன்று அடியவர் கதைகளும், பாட்டில் லேசா இருக்கு பாருங்க; யார் யாரு? என்ன கதை?
1) அருணகிரி, 2) நக்கீரர், 3) குமரகுருபரர்



முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?

எப்படி அழைப்பேன்? 
உன்னை எங்கு காண்பேன்?

ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது - நீ
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!
(உன்னை... முருகா என்றழைக்கவா?)

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா - அந்தப்
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா - உலகுக்குப்
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)

முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க - நீ 
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா - நீ 
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)

நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா - முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)


வரிகள்: தமிழ்நம்பி
குரல்: ஏழிசை மன்னர், TMS
இசை:
இதே பாடலை, வீணை இசையில் கேட்க: இதோ சுட்டி

பாட்டை இன்னொருகா வாசிங்க...

எப்படி அழைப்பேன்? உன்னை எங்கு காண்பேன்?
உன்னைத் தேட, எனக்குச் சக்தி இல்லடா; நானே ரொம்ப இளைச்சிப் போயிட்டேனாம்;
இன்னிக்கி oppiceல்ல ரொம்ப நாள் கழிச்சிப் பார்த்த பார்வைல எல்லாருமே சொல்லுறாங்க; இதுல, உன்னை எங்கு போயிக் காண்பேன்???

முருகா என்று அழைக்க, வா!
முத்துக் குமரா என்று அழைக்க, வா!

வந்துருடா! அழைக்க வா
எத்தனை நாள் தான் நீ இல்லாம... நானு?
முருகா என்று அழைக்க - வா - டா! please da!

Tuesday, June 04, 2013

TMS: வடிவேலும் மயிலும் துணை!

சில நினைவுகள்:  மறக்க(வே) முடியாதவை!

சென்ற ஒரு வாரம் முழுக்க...,
1000 TMS பாடல்கள் கேட்டிருப்பேனோ? = தெரியாது; Never been non stop like this;

சினிமாப் பாடல்கள் தான் நிறைய; எப்படித் தான் சதா கேட்டுக்கிட்டு இருந்தேனோ? எனக்கே வியப்பா இருக்கு;

ஆனால், இன்பத்தை விட,  இன்ப நினைப்புகள்.... இன்பமா இருக்கும்;
ஆண்டாள் போல ஆயிருச்சோ, என் நெலமையும்?
கற்பனை என்றாலும், கந்தனே... நான் உன் சொந்தனே....



அத்தனை பாட்டு கேட்டாலும், இந்த ஒரு பாட்டு மட்டும்,
இன்னும் ரீங்காரம் இட்டுக்கிட்டே இருக்கு; ஏன்?-ன்னு தெரியல!



படம்: அம்பிகாபதி
குரல்: ஏழிசை மன்னர், TMS
வரிகள்: KD சந்தானம்
இசை: ஜிரா (எ) ஜி. ராமநாதன்



வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் - சந்ததமும் - கந்தனைப் பாட
(வடிவேலும் மயிலும் துணை)

நடராஜன் அருள்பாலன் - நான்மறை தொழும் சீலன்
தட மேவும் பொழில் சூழும் 
தணிகை வாழும் - பரம ஞான - குருபரன்
(வடிவேலும் மயிலும் துணை)

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை  மலர்மாலை - ஜெபமாலையுடன் - சந்தத்
(தமிழ்மாலை தனைச் சூடுவான்)
---------------

தாபமிகு வெப்பு - வாதமொடு பித்த
மான பிணி மொய்த்து உடம்போடு...
சாரும் உயிர் துன்ப - சாகரம் உழன்று
சாதனை இழந்து வருந்தா உன்

தாளை அளித்திட - வேணுமெனத் துதி
பாடருணை கிரி - நாதன் அழைத்திட
தயவுடன் விரைந்து - அருள்மழை பொழிந்து

முத்தைத் தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த - தழைத்த கருணையை
நினைந்து நினைந்து - கவிமலர் தொடுத்த
(தமிழ்மாலை தனைச் சூடுவான்)
----------------

சற்றே சரிந்த குழலே துவளத் - தரளவடம்
குற்றே அசையக் - குழை ஊசலாட - துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக - நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இழுக்கத் - தலையலங்காரம் புறப்பட்டதே!!!



TMS in a cheeval advt.

99 or 100?
= அந்த "ஒன்னுல" தான் அவன் வாழ்க்கை விதி, ஒத்த நூலில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்காம்!
*அம்பிகாபதி 100 பாடல்கள் பாடினால் = காதல் - கை வரும்;
*இல்லையேல் = சாதல் - தலை போகும்!

அருணை கிரி - நாதன் அழைத்திட
முத்தைத் தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த - தழைத்த கருணையை
-ன்னு வருவதால் தானோ, இந்தப் பாட்டு இன்னும் எனக்குள் ரீங்காரம் இட்டுக்கிட்டே இருக்கு?

*கடவுள் வாழ்த்தோடு சேர்த்து நூறா?
*(இல்லை) கடவுளைச் சேர்க்காமல் நூறா?

எது எப்படியோ, முருகனைச் சேர்த்துத் தான் என் நூறும், பேரும், ஊரும், உயிரும்!
முருகனால், தலை போகும் என்றால்... போய் விடட்டுமே!
அவன் இதழ்க் கோட்டோரம், அவன் புன் சிரிப்பே தலை;  என் தலை தலையல்ல!

முருகனுக்கும்-எனக்கும்,
for both of us...
வடிவேலும் மயிலும் துணை

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP