Friday, August 10, 2007
Monday, August 06, 2007
ஆடிக்கிருத்திகையில் ஆடிவரும் அழகன்

பல்லவி
கந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது.. ........( கந்தா வந்தருள்)
அனுபல்லவி
செந்தூர் வளர் குஹா அடிமையின்
சிந்தாகுலம் தீர நீ வலிய
வந்தால் உந்தன் மஹிமை குறையுமோ
வள்ளி மணவாளா புள்ளி மயிலேரும்....(கந்தாவந்தருள்)
சரணம்
பச்சிளங் குழந்தையைப் பெற்ற தாய்
பரிந்தணைப்பது கடனன்றோ
பரம தயாகரன் என்று பேர் புகழ்
படைத்தவன் நீயன்றோ
ஸச்சிதானந்த மூர்த்தி சரவணோத்
பவ குஹனே சங்கரன் மகனே
தயவுடனே திருமால் மருகா-- மன
மிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து...(கந்தாவந்தருள்)
கந்தனே எனக்குமுன் வந்து நின்று உன் அருள்மழையைப் பொழியக்கூடாதா.எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி. திருச்செந்தூர் வளர் குஹா என்னுடைய சிந்தனையில் எப்போது இருக்கும் பயத்தை தீர்க்க வரக்கூடாதா உன்னை இவ்வளவுதூரம் வருந்தி வருந்தி நான் அழைத்தால் தான் வருவாயோ ஏன் என்மீது அன்பு கொண்டு
நீயே வலிய வந்து என்னைக் காத்தால் அதனால் உன் மஹிமை என்ன குறைந்துவிடுமோ. சிசுவை ரக்ஷிப்பது தாயின்கடமை. உனக்கு பரம தயாகரன் என்ற பேர் அதை காப்பாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ண்ம் இருந்தால், திருமாலின் மருமகனே, நீயே மனமிரங்கி தயவோடு உன் அடிமையான என்னை காத்தருள வா என்று உரிமையோடு அழைக்கிறார் திரு.சிவன் அவர்கள்
சரி அழகன் தரிசனம் ஆயிற்று பாடலையும் பார்த்தாகி விட்டது இனி இந்தப்
பாடலை மும்பை ஜெய்ஸ்ரீ தன் இனிய குரலிசையால் உருகி உருகிப் பாடுவதை இங்கே கேட்டு மகிழுங்கள்">
எல்லாம்வல்ல திருத்தணிமுருகன் எல்லாருக்கும் நன்மைகளைத் தந்து அருளட்டும்.!
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 8/06/2007 09:44:00 PM 8 comments
Labels: *கந்தா வந்தருள் தரலாகாதா, classical, திராச, பாபநாசம் சிவன், மும்பை ஜெயஸ்ரீ