Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்த நாள்! "முருக" வாழ்த்து!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!


அவளுக்கு, என்னவன் முருகனின் வாழ்த்து இதோ:

"கோதை" பொற் குறிஞ்சி மாது கச்சு அணிந்த
     கோமளக் குரும்பை ...... புணர்வோனே 

கோலம் உற்றில் அங்கு சோண வெற்பு உயர்ந்த
     கோபுரத்தில் அமர்ந்த ...... பெருமாளே
------------


இது எங்கூரு, திருவண்ணாமலைத் திருப்புகழ்!

தற்கொலையில் இருந்து காத்த = முருகன்! அந்தக் "கோபுரத்து இளையனார்" சந்நிதி;
அதான் அருணகிரி, கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே -ன்னு பாடுறாரு!

கச்சு அணிந்த கோமளக் குரும்பை
= கச்சை இறுக்கக் கட்டிய மார்பு உடையவள்...
= "கோமளக் குரும்பை"; ஆகா என்னவொரு "கிக்"கான சொல்லு! Romantic:)

"கோதை" பொற் குறிஞ்சி மாது
= கோதை-ன்னா மாலை; மாலை சூடிய குறிஞ்சிப் பெண் (வள்ளி)
= கோதை -ன்னு வருவதால், இதையே ஆண்டாளுக்கு, என் முருகனின் வாழ்த்தாகவும் இட்டேன்;
------------

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் - என் முருகவனோடு
உற்றோமே ஆவேன், அவனுக்கே ஆட் செய்வேன்
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர் எம்பாவாய்!

இது = நீ எனக்குக் காட்டிக் குடுத்த காதல் வாழ்வு!
Happy Birthday Kothai!


1 comments:

Kavinaya August 09, 2013 11:51 AM  

//இது = நீ எனக்குக் காட்டிக் குடுத்த காதல் வாழ்வு!
Happy Birthday Kothai!//

Same... Same...!!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP