Thursday, November 23, 2006

016. வனவேடன் ஒருவன் வந்தான்

எத்தனையே அரிய பெரியவர்கள் கவி சமைத்துக் கந்தனைக் களித்திருக்கிறார்கள். அதை இசை வல்லுனர்கள் இனிமை கூட்டி உளமும் உயிரும் உருகிடப் பாடிப் புண்ணியம் செய்திருக்கிறார்கள். நாமும் முருகன் மேல் பாடல் எழுதி அதற்கு இசையும் கோர்த்தால் எப்படியிருக்கும் என்று நெடுநாள் ஆவல். ஆவல் பெருகினால் செயல்படுத்துவது கந்தனல்லவா. கவியும் தந்து அதைப் பாட ஷைலஜா அவர்களையும் அறிமுகப்படுத்தினான். இதோ பாடல். இதை இங்கே ஷைலஜா அவர்களின் இனிய மெட்டிலும் குரலிலும் கேட்கலாம்.



வனவேடன் ஒருவன் வந்தான்
எனைக் கணை போலும் விழியாலே
உருக்கியே நின்றான்
முருகன் என்னும் பெயரோடு (வனவேடன்

சிலை தொட்ட கை கண்டுச் சிலையாவதோ
மலை தோற்ற தோள் கண்டு மலைப்பாவதோ
தலையோடும் அறிவில் அவன் தலைப்பாவதோ
நிலைமாறி நான் இன்று தடுமாறவோ (வனவேடன்

வேல் கொண்ட கந்தன் எனக் காட்சி நின்றான்
கோள் தன்னை விரட்டி நல்ல ஆட்சி தந்தான்
பாலுள்ளம் பொங்கி எழ மாட்சி செய்தான்
கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான் (வனவேடன்

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, November 18, 2006

015: என்னைக் கா வா வா! முருகா வா வா!

கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?

சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!

பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)

தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)


ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!




இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சுதா ரகுநாதன்
இராகம்: வராளி
தாளம்: ஆதி

Thursday, November 16, 2006

014 : தமிழுக்கு உரிமை உண்டு!!!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?

முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ நீ இப்படி இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!





பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!


திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்
இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்

Sunday, November 05, 2006

013 : எத்தனை கண் வேண்டுமைய்யா?

தங்க ரதத்தில் சுப்ரமணிய சுவாமி, திருத்தணி


எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு! (2)
- எத்தனை கண்

தணிகைதனில் கோவில் கொண்ட
சுப்ரமணிய நாதா நீயும்
சேவற்கொடி தானும் கொண்டு
தங்க ரதம் ஏறி வர!
- எத்தனை கண்

குன்றதனில் ஏறி நின்றே
குமரகுரு நாதா நீயும்
குறையிலாத செல்வம் தருவாய்
செந்தில் வடி வேலவனே!
- எத்தனை கண்

அறுபடை வீடு கொண்ட
ஆறுமுக நாயகனே!
உன்னடியை நாடி வந்தோம்
பொன்னடியைத் தாருமைய்யா!
- எத்தனை கண்

முத்தான முத்துக் குமரா!
காக்கும் கதிர் வேலவனே!
பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!
- எத்தனை கண்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP