Monday, June 23, 2014

வேலனைப் பாடுவதே வேலை!


நீல மயில் மீதில் ஏறி நித்தம் நித்தம் ஆடி வரும்

கோல எழில் கொண்டவனே வேல் முருகா!

உன்னைக்  கொஞ்சிக் கொஞ்சிப் பாடுவதென் வேலை முருகா!



பாலனாக வந்து பர சிவனுக்கே பாடஞ் சொன்ன

பார்வதியின் புத்திரனே வேல் முருகா!

            உந்தன் புகழைத் தினம் பாடுவதென் வேலை முருகா!



வீறு கொண்டு சூரன் தன்னை வேலைக் கொண்டு வீழ்த்தி விட்ட

வெற்றி வடி வேலவனே வேல் முருகா!

            உன்னைப் போற்றித் தினம் பாடுவதென் வேலை முருகா!



தேவர் தம்மைக் காத்த பின்னே தேவ யானைத் தேவியைத் தன்

தாரமாகக் கொண்டவனே வேல் முருகா!

            உந்தன் தாள் பணிந்து பாடுவதென் வேலை முருகா!



காட்டுக்குள்ளே வேடுவனாய் காதல் கொண்ட கிழவனாய்

வேடமிட்டு வந்தவனே வேல் முருகா!

            உந்தன் லீலைகளைப் பாடுவதென் வேலை முருகா!



ஆறு படை வீடு கொண்டு அன்பு மிக்க பக்தருக்கு

ஆறுதலைத் தருபவனே வேல் முருகா!

                        உன்னை அன்பு மீறப் பாடுவதென் வேலை முருகா!


--கவிநயா

Saturday, June 14, 2014

செல்லக் குழந்தை!


தர்பாரி கானடாவில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு மனம் ம(நெ)கிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


நீ என் குழந்தையடா – உன்னை
மடியேந்துதல் என் உரிமையடா… முருகா…
(நீ என்)

தீச்சுடரில் பிறந்தாய்
தீங்கனியாய் வளர்ந்தாய்
மாங்கனியால் பழனி
மாமலையில் அமர்ந்தாய்!      
(நீ என்)

உன் முகம் காண்கையிலே
உள்ளத்தில் ஒரு நேசம்
திருமுகம் காண்கையிலே
தோன்றுது தனிப் பாசம்!

திருமகள் மருமகனே
திருப்புகழ் நாயகனே
அறுமுகத் திருமகனே
அருகினில் வா குகனே!
(நீ என்)

கூவி அழைக்கின்றேன்
குமரா திரு முருகா!
தாவி எனை அணைக்க
தக்ஷணமே வருவாய்!

தத்தித் தவழ்ந்து வரும்
தங்கத் திருப் பாதம்
எட்டி எனை உதைத்தால்
கிட்டிடுமே மோக்ஷம்!
(நீ என்)


--கவிநயா

படத்துக்கு நன்றி:  http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html

Tuesday, May 27, 2014

பிறந்தநாள்: திருத்தணி முருகா, தென்னவர் தலைவா!

எனக்கு ரொம்ப நாளா ஓர் ஆசை, லூசுத்தனமான ஆசை தான்:)
முருகன்!
=அவனை, ஆளுயரம் செஞ்சி,
=எனக்கு இணையா, துணையா
=உயிருள்ள உறவு போல், வீட்டிலேயே வச்சிக்கடணும்-ன்னு ஆசை:)


என்னை விடக் கூடுதல் உயரம்
என்னை விடக் கூடுதல் அழகு
என்னை விடக் கூடதல் ஆண்மை
என்னை விடக் கூடுதல் ஆசை
என்னை விடக் கூடுதல் அன்பு
என்னை விடக் கூடுதல் கூடல்

*நம்ம உயரமே இருக்குறதால.. அவன் தோள் மேல கை போட்டுக்கலாம்!:)
*தலை சீவி விடலாம், Shave பண்ணி விடலாம்..
*அவனுக்கு Tie கட்டி விடலாம்:)
*எச்சி தோசை, கடிச்சிக் கடிச்சிச் சேர்ந்து சாப்பிடலாம்..
*போர்த்திக்கிட்டு கதகத-ன்னு தூங்கலாம்

இன்னும் என்னென்னமோ.. :)



இப்படி, "நம் உயர" முருகன் திருமேனி..
(சிலை-ன்னு சொல்ல எனக்கு வாய் வரலை)
சில சினிமாப் படங்களில், எப்பவாச்சும் வரும்; அதைப் பார்த்தாலே, என் கற்பனை துள்ளிக்கிட்டுப் பறக்கும்!

கீழ்வானம் சிவக்கும் படத்தில்,
வீட்டின் தோட்டத்தில் முருகன் இருப்பான்;
சிவாஜியும் சரிதாவும், அவனைச் சுத்தித் தான் சண்டை போட்டுக்குவாங்க:)
ஆனா அவன் கொஞ்சம் சிறுசு; பொடியன்!

பெரியவனா, ஆண் மகனா, உற்ற தோழனா
என் உசரத்துக்கே இருக்கும் ஒரு  முருகன்!
படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
Video வில் நீங்களே பாருங்க : எம்புட்டு துணைவனா எனக்கு இருப்பான்-ன்னு:)

பாடல்: திருத்தணி முருகா, தென்னவர் தலைவா!
வரி: கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை: MSV

இன்று (May 27):  இந்த முருகனருள் வலைப்பூவின் முன்னோடியான,
தோழன் இராகவன் (ஜிரா) பிறந்தநாள்
அவன் நினைவாக, இந்தப் பாடலை, இங்கே இட்டு, ஆசி வேண்டுகிறேன்!

Happy Birthday Ragava
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

*நல்ல உணவும், நளி மிகு உடையும்,
*இசை தவழும் உறையுளும்,
*வெற்றி மிகு பணியும்
*மாறிலா உறவும், திருப் புகழும்
உன்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!


நடனப் பாடல்: ஆடுறது யாரு? -ன்னு நல்லாக் கவனிச்சிப் பாருங்க:)
கேள்வியின் நாயகனே, என்றன் கேள்விக்குப் பதில் ஏதய்யா?:)



தாம் தித் தாம் - தை தித் தை
தாம் தித் தாம் - தை தித் தை

திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
(திருத்தணி)

தேன் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
காணும் - கண்ணில் எங்கும் - கண்டாள் உந்தன் தேவை
(திருத்தணி)

கந்த வேளை எந்த வேளும்
வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு
சொல்லுவதில்லை!
உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம்
அண்டுவதில்லை!

மலையும் நீயே, கடலும் நீயே
வானும் நீயே,  நிலமும் நீயே

பஞ்ச பூதம் - ஒன்று கூடும் மன்றம்
வந்த பேர்க்கு - வாழ்வு நல்கும் குன்றம்
மங்கல குங்குமம் - கிண்கிணி மங்கலம்
ஓம் எனும் மந்திரம் - யாவையும் சங்கமம்

ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
அலைகள் கலகலென
இலைகள் சலசலென
மலைகள் மடமடென
உலகம் இசை பொழிய

வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா!



திருத்தணி = வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நிகழ்ந்த ஊர்!
(அருகிலேயே தான் சொந்த ஊரு, வள்ளிமலை)

முருகனுக்குக் காமம் தணிந்த இடம் = தணிகை:)
கோபம் தணிந்த இடம், போட்டியில் தோற்றான் = சும்மா புராணக் கற்பனை!
அசுரர் குடி கெடுத்த ஐயா  =  முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது!

* முருகன் = தமிழ் நிலத்தின் மூத்த குடி! முன்னோர் நடுகல்!
* வள்ளி = அவனேயே வாழ்வில் சுற்றிக் கொண்ட காதல் துணைவி!
= இவர்கள் இருவரின் காதலும்/காமமும் தணிந்தவொரு தணிகை

கொடிநிலை கந்தழி வள்ளி - என்னும் தொல்காப்பியம்!
குறிஞ்சி நிலத் தமிழ் தொன்மங்களாய்.. குடி காத்த முருகன்!
நம்மையும் காக்கட்டும்!
பிறந்த நாள் பையன் இராகவனையும் காக்கட்டும்! பல்லாண்டு பல்லாண்டு!

Thursday, February 13, 2014

வேலன்-tines Day!

சும்மா கிண்டலுக்குத் தான்...
Valentines Day, தமிழில் எழுதும் போது வேலன்-டைன்ஸ் என்று ஆவதால்..

வேலன் யாரு? = என்-"அவன்" தானே!
அதான், என்னவனுக்கே, இந்தக் காதல் வாழ்த்தும் சொல்லீடறேன்:)

Happy Valentines Day, Muruga! Love u Honey:)
Kisses to u all over | முத்தத் திருமுழுக்கு



சிலப்பதிகாரத்தில், பெண்கள் விரும்பும் காதல்-முருகன் காட்டப் பெறுவான்;
எங்கே?
கோவலன் அறிமுகமாகும் கல்யாணப் பந்தலில்!

ஆயத்தில், கோவலன் நுழையும் போது, பெண்கள் பலரும், பண் தேய்த்த மொழியில் அவனைப் பாராட்டுறாங்க!
பார்த்தவுடனே வணங்கவல்ல முருகன் போல் இருக்கானே! நல்ல மாப்பிள்ளை-ன்னு பாராட்டு பெறும் கோவலன்!

மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ? 
(சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - மங்கல வாழ்த்து)

கண்டேத்தும் செவ்வேள்
= கண்ட மாத்திரத்தில் தானாய்க் கை குவியும், மனங் குவியும் செவ்வேள்!

அதனால், "வேலன்"-டைன்ஸ் நாள் அன்று, நாம் வேலன் பாட்டு ஒன்னைப் பார்ப்போமா?
சினிமாப் பாட்டு தான்! அசூயை வேணாம்!:)
சினிமாவா இருந்தாலும், அந்த மொழியில் சிரிப்பவனும் அவனே தான்!
In Ilayaraja's husky voice & percussion of tabla rocking throughout the song!


படம்: தெய்வ வாக்கு
குரல்: இளையராஜா, ஜானகி
வரி: வாலி
இசை: இளையராஜா



வள்ளி வள்ளி என வந்தான்
வடி "வேலன்" தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான்
புதுக் கோலம் தான்

சொல்லித் தரச் சொல்லி கேட்டு - தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்ப வல்லி என்று - தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி..)
-----------

சொல்லால் சொல்லாதது..
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது..
கைகள் தொட இந்நாள் ஒன்றானது

வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா?
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா?

என்னை மீண்டும் 
கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் - நாணம் என்னம்மா?
(வள்ளி வள்ளி..)
-----------

வந்தாள் புல்லாங்குழல் 
வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி 
மங்கைக்கு அது காதல் நீலாம்பரி

அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத் தான் என் கண்கள் சந்திக்கும்

எந்தன் ஜீவன் 
கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு, இங்கு யாரும் இல்லையே!
(வள்ளி வள்ளி..)


மண வாழ்க்கை = ஒரு "மாதுர்யமான" (மதுரமான) பயணம்!

அந்தப் பயணம் செய்யப் படித்துறையில் காத்திருக்கும்..
நல்ல பெண்களுக்கும்
கையசைத்து வழியனுப்பக் காத்திருக்கும் அம்மா-அப்பாவுக்கும்..
இந்த வேலன்-tines day, ஒரு புதுப்பக்கத்தைத் திருப்பட்டும்!
வரட்டும் வேலன்!

வள்ளி வள்ளி என வந்தான்
வடி "வேலன்" தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான்
புதுக் கோலம் தான்

Sunday, January 19, 2014

தைப் பூசம்: ஒரே பாடல் - இரு கவிஞர் - பல முருகன்!

தைப் பூசம் அன்று, இங்கு பதிவிட முடியாத படி, உடல் சூழ்நிலை..
அதனால் என்ன?
இதோ.. மிக்க அழகானதொரு பாடல் = ஒரே பாடல் - இரு கவிஞர்!

ஒரே பாட்டை ரெண்டு பேரு எப்படி எழுத முடியும்?
அதுவும் கவிஞர் கண்ணதாசன் & மருதகாசி..
ஈகோ -ன்னு ஒன்னு இருக்கே! என் வரியில் இன்னொருவன் கை வைப்பதா?

நம் தலை வரியிலேயே, அந்த முருகன் தான் கை வைப்பதும்:)
அப்பறம் என்ன, என் வரி என் வரி? = அல்லாம் அவன் வரி! அவனை வரி!

ஒரே பாடல் - இரு கவிஞர்
ஆனால்... பல முருகன்கள்! பல ஊர் முருகன்கள்!




வழக்கம் போல், நான் இடும், "துணைவன்" படத்தில் இருந்து தான் இதுவும்:)

துணைவன் = என் மனத்தோடு பேசும் படம்!
இரண்டு அன்பானவர்கள் இடையே...
கருத்து ஒற்றுமை வேண்டுமா?
(அ) முருக ஒற்றுமையே போதுமா? -என்னும் படம்!

கே.பி.சுந்தராம்பாள் அம்மா பாடும் அபூர்வப் பாடல்கள்!
வாரியார் சுவாமிகளும், படத்தில் நடிச்சி இருப்பாரு;

வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல ஆரம்பக் காட்சி;
அதெல்லாம்.. “பொய், பொய், யாரும் நம்பாதீங்க”-ன்னு Hero, AVM Rajan உள்ளே நுழைவாரு:)
வாரியார் நடிப்பும், நல்லாத் தான் இருக்கும்; It will tempt me, everytime I see the movie:)
Vaariyar has “appeared” in other movies, but not to this big length, I think
சிவகவி – கதை வசனம் மட்டுமே
தெய்வம், துணைவன், திருவருள், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி...
ஆனா, துணைவன் படத்தில் மட்டும் = வாரியார் காட்சிகள் மிக நீளமானவை:)

கணவனும் மனைவியும், ஊர் ஊராகச் சென்று பாடும் காட்சி, தங்கள் பிள்ளைக்காக!
அறுபடை வீடு மட்டுமன்றி, இன்னும் பலப்பல முருகு ஆலயங்கள்!


108 பெருமாள் திருத்தலம்
274 சிவ ஸ்தலம்

இப்படி, ஆழ்வார்கள் – நாயன்மார்கள் போல்..
தலம் தலமாகச் சென்று பாடிய முருகன் ஆலயங்கள் “குறை”வு தான்;
ஆனா, அந்தக் குறை -> நிறை செய்ய வந்த ஓர் உள்ளம்
=அதுக்கு, “அருணகிரி” -ன்னு பேரு!

ஆழ்வார்கள் “மங்களாசாசனம்” போல்,
முருக “மங்களாசாசனம்” செய்வித்தவர் = அருணகிரி

அதுவும் பன்னிருவராய் இல்லாது, ஒரே ஒருவராய்…
ஒத்த மனுசனாய் நடையாய் நடந்து…
அந்த ஆலயங்கள் = கந்த ஆலயங்கள்!

இந்தச் சினிமாப் பாட்டில் = மொத்தம் 28 முருகன் ஆலயங்கள் வரும்!
Please note them, as you hear the song!
Have underlined each temple, in the lyrics of the song;
காணுங்கள், தைப்பூச நாயகனை, தைப் பூசத்து அன்று!



(மருதகாசி)

மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
(மருத மலையானே நாங்கள்)

உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே
அன்னை தந்தையுடன் உன்னை சிவன்மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே

வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே

திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூசித்த குமரா
தென்திருமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா

வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்டமலைத் தெய்வமே வெற்றி வேலே

அமரர் கூட்டம் ஆடவும், அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரக்கோட்ட தவமணியே
அண்ணல் ராமலிங்க வள்ளல் நெஞ்சினில்,
அருள்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தகோட்டத் தமிழ்க்கனியே

தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே

வீறிட்டு எழுந்த சூரன் போரிட்டு அழிய
திருப்போரூரில் வேல்விடுத்து நின்றவா
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா

பக்தர்கள் தேரூர் பவவினை தீருர்
உத்திரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே; மயிலை ஆடச் செய்தவனே

வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன்
பெற்ற முருகனே சண்முகா முத்துக்குமாரா
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா

திண்புயச் சூரனை வென்றதை முனிவர்க்கு
எண்கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா
கந்தன்குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா

தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணையிருப்பாய்
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்காரவேலா
செட்டிமகன் என்னும் இறைவா, செந்தமிழின் தலைவா
எட்டிக்குடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவா

பழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று
திருப்புகழ் பாடிய வயலுரா
புலவன் நக்கீரன் புனைந்த 
முருகாற்றுப்படை போற்றும் விராலி மலை வீரா

கொன்றதொரு சூரனைக் கோல மயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
கந்தய்யா எங்களின் கவலையைத் தீரய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா

-------------------------------------

(கண்ணதாசன்)

பருவத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே

தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட வா… வா ..வா

வள்ளியூரிலே குடிகொண்ட வள்ளிமணாளா வழிகாட்டு
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டு

அலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
நலம் பெற வேண்டும் மகனய்யா
நம்பிக்கை தருவாய் கந்தய்யா

தணியாத கோபம் தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே
கனிந்த முகம் காட்டு கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனே

தந்தைக்கு ஓம் எனும் மந்திரப்பொருள் சொன்ன
சுவாமி மலை வாழும் குருநாதா
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா

பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர் சோலைக்கு வந்தவனே
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே

திருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
வேலவனே..
வேலவனே..

படம்: துணைவன்
வரி: மருதகாசி & கண்ணதாசன்
இசை: கேவி மகாதேவன்
குரல்: TMS & பி.சுசீலா



பாட்டில் வரும் முருக ஆலயங்கள்: 28

முருகனின் தலங்கள் என்னென்ன -ன்னு ஒரு நூலே இருக்கு;
= சுப்ரமணிய ஷேத்திரக் கோவை
= காஞ்சி சிதம்பர முனிவர் எழுதியது;

பிள்ளைத் தமிழ் நடையில் அமைஞ்சி இருக்கும்;
= 100 பாடல்கள்; 100 தலங்கள்
கைலாசத்தில் ஆரம்பித்து, கேதாரத்தில் முடிப்பாரு!
------------

கந்த சட்டிக் கவசத்திலும், மொத்தம் 12 தலங்கள் வரும்;
*சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -ன்னு சென்னிமலையில் (சரகிரி) துவங்கி..
*சமரா புரிவாழ் சண்முகத் தரசே   -ன்னு திருப்போரூரில் (சமராபுரி) முடியும்!

மாலவனுக்கு = 108 திவ்ய தேசம்
மருகன் முருகனுக்கு = 28 திவ்ய தேசம் தானா?

108 திவ்ய தேசத்துக்கும் மேலான ஒரு திவ்ய தேசம் இருக்கு!
= அது 109 ஆம் திவ்ய தேசம்;
= என் “மனம்” எனும் திவ்ய தேசம்!

*அங்கு, தள்ளு முள்ளுக் கூட்டம், தரகர்கள் இல்லை!
*அங்கு, ஜருகண்டி இல்லை, தட்டில் விழும் ரூபாய் நோட்டுக்கு ஏற்றவாறு அருள் இல்லை!
*அங்கு, சிறப்புத் தரிசன டிக்கெட் இல்லை! எல்லாரும் ஓர் நிறை!
*அங்கு, நானும் அவனும் மட்டுமே!
என் மனமே முருகனின் திவ்யதேசம்! 
உடல் எடுத்தேன், உன் உறவுக்கு!
உளம் கொடுத்தேன், உன் நிறைவுக்கு!
என் மனசு = 109 ஆம் திவ்ய தேசம் வாழ்க!!

Wednesday, January 01, 2014

Happy New Year திருத்தணி முருகா!

உங்கள் அனைவருக்கும் வெற்றிமிகு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy New Year 2014:)
ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருத்தணிப் படி உற்சவம்! திருத்தணி முருகன் = "துரை" முருகன்!:)

"துரை" முருகன் என்ற பேர் எப்படி வந்தது?
அட, முருகனுக்கும்-துரைக்கும் என்னய்யா தொடர்பு?
தமிழ்க் கடவுள் தானே நீயி?
ஒனக்கு எப்படிடா, வெள்ளைக்காரத் "துரை"ப் பட்டம்?:)

"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:)
செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:)

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்..
இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!

கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?

வெள்ளையர் காலத்தில் நம்மவர்கள், புத்தாண்டு அன்று..
*துரைகளுக்குக் கூடுதல் சலாம் போட்டு,
*துரைகள் வீட்டு வாசலில் கால் கடுக்க நின்று வாழ்த்தி,
*துரை கலெக்டர்கள், துரை சர்கள் -ன்னு ஒரே துரை பூஜை தான்!


ஆங்கிலப் புத்தாண்டு அன்று, துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப..
வள்ளிமலை சுவாமிகள், திருத்தணிப் படி உற்சவத்தை, வேண்டுமென்றே Jan 1st நடத்தத் துவங்கினார்; முருகனும் "துரை" ஆனான்:)

Hey Muruga Durer, I aime ous (French).. I love you da:))

துரைகளுக்கு எல்லாம் பெரிய துரை= "தணிகை மலைத் துரை"!
அநதத் "துரை" முருகனுக்கு வாழ்த்து சொல்வோம்..
ஆங்கிலேயர்களுக்குச் சலாம் வேண்டாம் என்று எழுந்த பாடல்..

வள்ளிமலை சுவாமிகள் என்பவர்,
சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!



திருத்தணி = 5ஆம் படை வீடு அல்ல!
"குன்று தோறாடல்" என்பதே 5ஆம் படைவீடு;

அந்தப் பல குன்றுகளில், திருத்தணியும் ஒன்று! அவ்ளோ தான்!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! என்பது திருப்புகழ்;


திருத்தணி -ன்னாலே = முருகனுக்கு, மாம்பழக் கோவம் "தணி"ஞ்ச இடம் -ன்னு ஒரு புராணக் கதை உருவாக்கிட்டாங்க; உண்மை அதுவல்ல!
* கோபம் தணிஞ்ச இடமல்ல!
* காமம் "தணி"ஞ்ச இடம் = திருத்-தணி!

தண்ணீர் -> தண் -> தணி;
* அனல் = தண்ணீரில் தணியும்!
* அனல் காமம் = வள்ளி (எ) பெண்ணீரில் தணியும்!

சங்கத் தமிழ்த் தொன்மமான, குறிஞ்சி நிலக் காதல் பறவைகள்:
முருகன் - வள்ளி;  அவிங்களுக்குத் திருமணம் நிகழ்ந்த இடம் = திருத்தணி!
முருகக் காதல், வள்ளியிடம் தணிந்த மலை = தணிகை மலை!
இதுவே புராணம் கலவாத தமிழ்ப் பழங்குடியியல்!

ஏனோ... திருத்தணியைத் "திருமணத் தலம்" என்றே பலரும் நினைச்சிப் பார்ப்பதில்லை!
அடுத்த முறை போனீங்க-ன்னா, மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க:
அங்கு இருப்பது மாப்பிள்ளை முருகன் - மணப் பொண்ணு வள்ளி!

திருத்தணிக்கு அருகில் தான்..
வள்ளி பிறந்து வாழ்ந்த = வள்ளி மலை!
எங்க வடார்க்காடு மாவட்டம்... I have a deep fantasy abt vaLLi malai & thaNigai malai;

இந்த வாரச் செவ்வாயில் = திருத்தணிப் பாட்டே!
"ஆங்கிலத் துரைகளுக்குச் சலாம் போடாதீர்கள்...
அவர்களை விட பெரிய துரை = தணிகை மலைத் துரை" (எ) பாட்டு;


கேட்டுக் கொண்டே வாசிக்கவும்..


தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா

அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா
ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா
ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா

என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா
பாவி என்னை மறந்திடாதே - வா வா வா
--------------

வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா
வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா

என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா

திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப்
பெருந் துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
--------------

சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சல் ஆரம்ப மாயன்

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
சம்ப்ரம-ஆ னந்த மாயன்

மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால்
வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே
வந்துநீ அன்பில் ஆள்வாய்
--------------

கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா

கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா
கண்டலே சன்சொல்-வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று-மோ தும் ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!


வரிகள் & குரல்: பெங்களூர் ரமணியம்மாள்

அம்மாளின் குரல் = ஆண்மைக் குரல்; முடவனையும் துள்ளி ஆட வைக்கும்;
குரல் மட்டுமல்ல, தானே பாட்டு எழுதவும் செய்வார்கள்;

இந்தப் பாட்டு, மகாகவி பாரதியின், "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" மெட்டில் எழுதியது; (முன் இரு பத்திகள்)
பின் இரு பத்திகள் - திருச்செந்தூர் திருப்புகழ் - பாட்டில் பயன்படுத்திக் கிட்டாங்க;
அம்மாளைப் பற்றி மேலும் அறிய = இங்கே (old kathirgamam post)

முருகா, என் காதல் துரையே ...
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா
Happy New Year திருத்தணி முருகா!

Hey Honey, Muruga Durer, I aime ous.. I love you da:))

Thursday, December 26, 2013

கிறிஸ்துமஸ் முருகன்!

முருக அன்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Merry Merry Christmas, Happy Happy New Year!

இயேசு நாதப் பெருமான்
(எ) இனிய குழந்தை மூலமாக..
எங்கும் நிறைந்தவரான கர்த்தரே = உமக்கு ஸ்தோத்திரம்!


திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து..
ஒரு கிறிஸ்துவக் கன்னி, முருகன் மேல் பாடும் பாடல்!

(கர்த்தர் மேல பாட வேண்டியவளைக்,
கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு
தப்பா நினைக்காதே-ம்மா என்ற முன்னுரையோடு காட்சி துவங்கும்)

(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும்
சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா
மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய்
சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
 

உள்ளம் உருகாதா? - எந்தன்
ஊனும் உருகாதா?
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)

தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

கந்தா.... அழகுத் திருக்குமரா
செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)

நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும்
அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம்
எந்த நோயும் அணுக விடாதே
என்றும் காக்கும் வைத்திய நாதன்

வேலா.... கருணை மழை முகிலே
பாலா.... பழநி மலை அரசே

---------

திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்


Tuesday, December 10, 2013

பி.சுசீலா: ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்!

ஐந்தெழுத்து, ஆறெழுத்து என்று சொல்லுவார்கள், சமய உலகிலே!
எட்டெழுத்தும் உண்டு!

*பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய
*ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ

எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய
இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்!

"ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்!
எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்!

இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்!
எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்;
அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ!


"பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்!
"சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்)

பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை..
-ன்னு கந்த சட்டிக் கவச வரிகள் ஞாபகம் வருதா?:)
அதே "பவம்" ஒழி சரவண பவன் அவன்!

சிவபெருமானின் கண்ணொளி, கங்கைக் கரையில், தர்ப்பைக் காட்டிலே (சரவணத்திலே), ஆறு பொறிகளாக இறங்கிற்று;
இப்படி நம் பிறப்பை அறுக்க = பிறந்தவன் (தோன்றியவன்) முருகப் பெருமான்!

அதனால் சரவணம் + பவம் = சரவண பவ
இந்தத் திருவாறெழுத்து, முருக அன்பர்களுக்கு மிக்க இனிப்பானது!

அந்த ஆறெழுத்தை வச்சி, இன்னிக்கி ஒரு பாடல்; சுசீலாம்மாவின் தேன் குரலில்... பழைய அபூர்வப் பாடல்..
(சினிமாப் பாடல் அல்ல, Album Music) - கேட்போமா?

(Note: மேற்சொன்னது எல்லாம் சம்ஸ்கிருத மரபு!
இவை சங்க தமிழ் மரபு அல்ல! தமிழ் முருகன் = இயற்கை வழிபாடே!)



ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் - நல்ல
அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம் - நல்ல
அன்பை வளர்க்கும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் - நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் - நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் - நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் - நல்ல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)


குரல்: பி.சுசீலா
வரி: பாரதிசாமி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

எல்லா வரிகளிலும் "மந்திரமாம்" -ன்னு வரும்; கூடவே "நல்ல" -ன்னு தொக்கும்!
அத்தகு "சரவண பவ" (எ) திருவாறெழுத்தை நினைச்சிப் பார்ப்போம், சுசீலாம்மாவின் தேன் குரலில், நம் மனசையோட்டி!

"சரவண பவ"னார் சடுதியில் வருக!

Tuesday, December 03, 2013

The 1st song of "Child" MS Subbulakshmi

எம்.எஸ்.சுப்புலட்சுமி (எ) MS Amma
= இவர்கள் இசையைக் கேட்காதவர்கள் கூட இருப்பார்கள்..
= ஆனால் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்!

அந்த MS Amma, பாடிய "முதல் பாட்டு" எது? அதாச்சும் முதலில் ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு?
= முதல் வணக்கம் முருகனுக்கே!:)

என்ன வியப்பா இருக்கா?:)
மீராவாக நடித்தவர்.. கண்ணா என்று கதறுபவர்..

அனைத்து தெய்வ வடிவங்களையும் போற்றினாலும்...
எம்பெருமான் திருவேங்கடமுடையான் மீது "ஆழ்ந்த பற்றுதல்" கொண்டவர்;
இன்றும் திருப்பதியில் சிலையாக வாழ்பவர்!


அவரா முருகன் மீது முதல் பாட்டு?:)
ஒரு வேளை, என்னைப் போலவே அவங்களும் போல..
*பொறந்த வீடு = "அப்பா திருமால்" என்றாலும்,
*புகுந்த வீடு = "காதல் முருகனோ" என்னமோ?:)))

அது ஒரு சிறுகதை!
பார்க்கலாமா, இன்றைய செவ்வாய்க்கிழமை?


Madurai Shanmugavadivu Subbulakshmi = MSS

சண்முகவடிவு = அம்மா பேரு;
அப்பா பேரு = அதிகம் வெளியிற் தெரிவதில்லை..
கணிகையர் குடியில் உதித்தவர்!

சுப்புலட்சுமிக்குப் 10 வயது (1926)
அன்னிக்கி சாயந்திரம், பள்ளிக்கூடம் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கொறிச்சிட்டு..
வெளியில் போய் விளையாடும் ஆசையில், குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வந்தா....

தாய் சண்முகவடிவு = ஓர் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செஞ்சி வச்சிருக்காங்க!

அவிங்களே ஒரு நல்ல வீணைக் கலைஞர் தான்!
அந்தச் சுற்று வட்டாரச் சூழலும் நட்பும் தந்த அறிமுகத்தால், Oriental Records என்னும் ஒலித்தட்டு நிறுவனம் மூலமாக, இப்படியொரு வாய்ப்பு!

சரி, என்ன பாட்டு பாட?
அதையும் தாயே முடிவு பண்ணி வைச்சாச்சி!



அந்தப் பாட்டை எழுதியவர் = ஒரு பெரும் "வைணவர்"
ஆனால், திருச்செந்தூர் முருகனிடம் ஆராக் காதல் கொண்டவர்;
பேரு: பகழிக் கூத்தர் (15th CE)

"முருகா முத்தம் தருகவே, முருகா முத்தம் தருகவே"... ன்னு
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடிய திருமால் அன்பர்!

முருகன் பிள்ளைத் தமிழிலும்..
நூலின் காப்புச் செய்யுளைத் திருமாலுக்கே வைத்தவர்..
குமரப் பெருமான் தனைக் காக்கச்
சங்கு ஆழி படைத்த பெருமாளே!

அவர் வயிற்று நோயும் தீர்த்து.. வங்கார மார்பிலணி பதக்கமும் குடுத்த முருகன்!
அவருடைய கதை = இங்கே!
அப்பறமாப் படிச்சிப் பாருங்க! "பகழி" என்ற செந்தமிழ்ச் சொல்லுக்குப் பொருளும் புரியும்!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டைத் தான், சுப்புலட்சுமியின் அம்மா, தேர்ந்தெடுத்து வச்சி இருக்காங்க!
ஆனா இதைப் பத்து வயசுப் பொண்ணு பாட முடியுமா? செந்தமிழ்-ல்ல வேற இருக்கே?

நீங்களே கேளுங்கள்..
How MS kid, can extend her voice, to suit the difficult tempo of the song, even at such a small age!


ஒரு பிறந்த நாள் பரிசாய், இந்தப் பாடலை முன்பு எப்பவோ வலையேற்றி இருந்தேன்..
பாட்டின் வரிகள், காணொளியில் கூடவே வரும்:)

மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ?
மதிமுக முழுதும் தண்துளி தரவே
வார்வேர் சோராதோ?
(மரகதப் பச்சை உமை அன்னை.. அவ வெயிலால் வாடுறாளே..
அவ மதிமுகம் முழுசும் வியர்வைத் துளியில் சோர்ந்து போகுதே)

கரமலர் அணைதந்(து) இன்புறு மடவார்
காணாதே போமோ?
கனமணி குலவும் குண்டலம் அரைஞாண்
ஓடே போனால் வார்
(மலர்க் கரத்தால் அணைத்து மகிழும் பெண்கள், குழந்தையைக் காணாது போகலாமா?
கனமான மணிகள் குலாவும் குண்டலம், அரை ஞாண் கயிறோடே நீ ஓடலாமா?)

பொருமிய முலையும் தந்திட உடனே
தாய்மார் தேடாரோ?
புரவலர் எவரும் கண்(டு) அடி தொழுவார்
போதாய் போதா நீள்
(முலை துடிக்குதே பாலூட்ட; அடேய், ஒன்னை ஒங்கம்மா தேடுறாளே!
தமிழைக் காக்கும் புரவலர்கள், உன் அடியைத் தொழுத் தேடுவார்களே!
* போதாய் = வருக | (நீராடப் போதுவீர், போதுமினோ?)
* போதா = போதம் (எ) ஞானம் மிக்கவனே)

சரவண மருவும் தண்டமிழ் முருகா
தாலே தாலேலோ
சதுமறை பரவும் செந்திலை உடையாய்
தாலே தாலேலோ
(சரவணத்தில் வளரும் தண்டமிழ் முருகா - தாலே தாலேலோ!
நான்மறை போற்றும் செந்தில் (எ) திருச்செந்தூர்க்காரா - தாலே தாலேலோ!)


திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
தாலப் பருவம்
வரிகள்: பகழிக் கூத்தர்

MS "அம்மா" என்று உலகமே பின்னாளில் அழைத்தது..
அந்த "அம்மா" பாடிய தாலாட்டு = இது குழந்தை பாடிய தாலாட்டு!:)

இதுவே MS சுப்புலட்சுமி அவர்களின் முதலில் பதிவு செய்த பாடல் - On LP Records by Oriental Recording Company!
முருகன் துவக்கி வைத்த இசைப் பயணம் = இனிதே "நிறைந்து" முடிந்தது!



செந்திலைக் கொண்ட தண்டமிழ் முருகா 
I Love U தாலேலோ
செவ்வாய் எச்சில் காதலன் முருகா 
I love U தாலேலோ

Sunday, December 01, 2013

நினைத்தது எத்தனையிற் ...... தவறாமல்
நிலைத்த புத்தி தனைப் ...... பிரியாமல்

கனத்த தத்துவம் உற்று ......  அழியாமல்
கதித்த நித்திய சித்து ......   அருள்வாயே

மனித்தர் பத்தர் தமக்கு ......  எளியோனே
மதித்த முத்தமிழில் ...... பெரியோனே

செனித்த புத்திரரில் ...... சிறியோனே
திருத்தணிப் பதியில் ...... பெருமாளே.
----------------


நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும்,

நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும்,

பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும்,

வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.

மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே,

மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,

சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே,

திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே

Friday, November 29, 2013

முருகன் சிவாஜி vs நாத்திக சிவாஜி!

"சிவாஜி படங்களில் முருகன் பாடல்கள்" -ன்னு தனிப் பதிவே இடலாம்..

*வெற்றிவேல் -ன்னு = கந்தன் கருணை வீரபாகு நடை ஆகட்டும்..
*கண்கண்ட தெய்வமே -ன்னு = கீழ்வானம் சிவக்கும் ஆகட்டும்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முத்து!

இன்று இரண்டு சிவாஜிக்கள்!
= முருகன் சிவாஜி & நாத்திகச் சிவாஜி..
ஒருவரோடு ஒருவர் - முரண்பட்ட பாட்டுச் சண்டை:)

இன்னிக்கி, மனிதனும் தெய்வமாகலாம் படத்திலிருந்து ஒரு பாடல்;
முன்பே இந்தப் படத்தை, நாம பார்த்துள்ளோம், இந்த வலைப்பூவில்!


அந்தப் பாடல்: சிவாஜி (எ) நடிகர் திலகம், முருகனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பணிவிடைகள்..
தட்டித் தட்டித் தாலாட்டும் முருகனின் பெரியாழ்வாரோ -ன்னு கூடத் தோனும்!

இந்தப் பாடல்: ஆத்திக-நாத்திகப் பாட்டுச் சண்டை:)

வாருங்கள், சீர்காழி-TMS குரலில் பார்ப்போம்/கேட்போம்!
திருச்செந்துரின் கடலோரத்தில் -ன்னு ஒன்னா இசைந்து பாடியவங்க, இதில் வசைந்து பாடுறாங்க:) | Very good combo!

செவ்வாய்க்கிழமை வரவேண்டிய பதிவு, சனிக்கிழமை வருகிறது:)
காரணம் = என் சோம்பலே!
ஏதோ மனக் கலக்கம்! சோர்விலேயே இருந்து விட்டேன்;

இந்த வாரம், இன்னுமாடா என் பாட்டு வரலை? -ன்னு கேட்க நினைச்சான் போலும் என் காதலன்!
Twitter-இல் @mokrish மூலமாக வேறு ஏதோ பேச்சு வர, இந்தப் பாட்டும் வர.. இதையே இன்று இட்டு விட்டேன்:)

வரிகள், பாட்டைக் கேட்டுக் கேட்டு எழுதியது; பிழைகள் இருப்பின் சுட்டித் திருத்தவும், நன்றி!



வெற்றி வேல் வெல்லுமடா! வினை தீர்ப்பான் வேலனடா!
கற்றவர்க்கும் கல்லார்க்கும், கருணை தரும் தென்றலடா!

பிறந்த வந்த கதையைப் பார்த்தால், பெரிய வீடு தெரியுமடா!
மறைந்து போகும் முடிவைப் பார்த்தால், மன்னன் சக்தி புரியமடா!

இடைப்பட்ட இடத்தில், கடன்பட்ட மனிதா
ஏன்டா உனக்குப் பொய்யறிவு?
ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
---------------

இறைவனாலே உலகம் என்றால், ஏழைகளை ஏன் படைத்தான்?
ஒருவன் வாழ ஒருவன் வாடும், உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்?

கடன்பட்ட முருகன், உடன்பட்ட நமக்குக்
காட்டிய கருணை இது தானா?
கதை சொல்ல வேண்டாம் அண்ணா, அதிலே தான் அரசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
---------------

குழந்தை போல அவனைப் பார்த்தால், கூட வந்து கொஞ்சுமடா!
குழந்தை இங்கு கோடி உண்டு, குமரன் என்ன தேவையடா?

ஆத்திரம் கொண்டவன் நாத்திகன் ஆவான்
அவனே அவனுக்குப் பகையாவான்!
நாத்திகம் என்பது சுய மரியாதை
நம்பிய மனிதன் தன்னை ஆள்வான்!

உன் கண்ணில் ஒருநாள் தோன்றும் வடிவேலன் அரசாட்சி!
உன் நெஞ்சில் ஒருநாள் தோன்றும் பெரியாரின் மனசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)

வெற்றிவேல் முருகனுக்கு - அரோகரா!
வேலக்குடி வேலனுக்கு - அரோகரா!

படம்: மனிதனும் தெய்வமாகலாம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன் & TMS

வலப்பக்கப் பட்டியில் "கவிஞர்-இசையமைப்பாளர்-பாடகர்" தொகுப்பு மட்டுமே, இது வரை கொடுத்துருக்கேன்..
சிவாஜி (எ) நடிகரின் தொடுப்பும் கொடுக்கணுமோ? முருகா!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP