அழகென்ற சொல்லுக்கு முருகா...
முருகா... முருகா...
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)
சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)
ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)
குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)
பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)
அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)
***
சேந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும் போது அவனை அவனுடைய பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வேன். இந்த மார்கழி வந்தால் அவனுக்கு மூன்று வயது நிறைகிறது. கூடுந்தில் (Van) ஏறியவுடன் 'பாபா. முருகா கீத் பஜே. முருகா கீத் பஜே' (அப்பா. முருகா பாட்டு வேணும். முருகா பாட்டு வேணும்) என்று தொடங்கிவிடுவான். அவன் பள்ளியை அடையும் வரை அவனும் சேர்ந்து பாடிக் கொண்டு வருவான். மற்ற நேரங்களில் நான் 'அழகென்ற சொல்லுக்கு' என்றால் அவன் 'முருகா' என்று சேர்ந்து பாடுகிறான்.
அந்த வயதில் அவன் அக்காவிற்கு ஹனுமான் சாலீஸா பிடித்திருந்தது. இப்போது 'எந்தப் பாட்டைப் போட்டாலும் சரி' என்று இருக்கிறாள்; இவனும் அப்படி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். :-)
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)
சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)
ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)
குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)
பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)
அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)
***
சேந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும் போது அவனை அவனுடைய பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வேன். இந்த மார்கழி வந்தால் அவனுக்கு மூன்று வயது நிறைகிறது. கூடுந்தில் (Van) ஏறியவுடன் 'பாபா. முருகா கீத் பஜே. முருகா கீத் பஜே' (அப்பா. முருகா பாட்டு வேணும். முருகா பாட்டு வேணும்) என்று தொடங்கிவிடுவான். அவன் பள்ளியை அடையும் வரை அவனும் சேர்ந்து பாடிக் கொண்டு வருவான். மற்ற நேரங்களில் நான் 'அழகென்ற சொல்லுக்கு' என்றால் அவன் 'முருகா' என்று சேர்ந்து பாடுகிறான்.
அந்த வயதில் அவன் அக்காவிற்கு ஹனுமான் சாலீஸா பிடித்திருந்தது. இப்போது 'எந்தப் பாட்டைப் போட்டாலும் சரி' என்று இருக்கிறாள்; இவனும் அப்படி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். :-)