Wednesday, January 13, 2021

வங்கக் கடல்மேவு | முருகன் திருப்பாவை - 30

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனை...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-30

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


30/30 | வாழைப்பந்தல் மாதவிச்சொல்! 

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனைப்
பொங்கல் திருநாளில், பொங்குதமிழ்ப் புத்தாண்டில்
நங்கள் திருப்பாவை நோன்புகள் தாம்கழிந்து,
நுங்கு இதழ்ப்பெண்கள், நுண்ணிய அன்பாலே

அங்கப் பறைகொண்ட ஆற்றுப் படைதன்னைத்
தெங்கு வயல்வாழைப் பந்தலின் மாதவிசொல்
சங்கத் தமிழ்வாழ்த்தி இங்கு-இப் பரிசுரைப்பார்
எங்கும் முருகருள்பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!   (30)


இத்துடன், முருகன் திருப்பாவை (நிறைவு) !
முப்பது நாளும் முருகன் திருப்பாவை வாசித்தமைக்கு நன்றி.


மகிழ் திகழ் பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழ்ப் புத்தாண்டு - புத்தொளி வாழ்த்துக்கள்!



1 comments:

Mukil January 14, 2021 10:57 PM  

Wow! Superb! கலக்கிட்டீங்க!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP