Friday, January 08, 2021

ஒருத்தி முருகனாய் | முருகன் திருப்பாவை - 25

ஒருத்தி முருகனாய் ஓரிரவில் தொட்டு...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-25

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


25/30 | வள்ளி போற்றி!

ஒருத்தி முருகனாய் ஓரிரவில் தொட்டு
ஒருத்தி முருகனாய் வள்ளிக்கு ஆனாய்!
இருத்தி மனத்துள் உனக்கென்றே வாழ்ந்தாள்
இருத்தி அவளேநின் முத்தியும் ஈவாள்!

கருத்தில் புணர்ச்சிசெய்ய கந்தா வருக!
உருத்தி உடல்தந்து உன்னுயிரில் என்னைப்
பொருத்தும் பொருள்தந்து பொங்கல் தமிழாய்
வருத்தங்கள் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (25)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP