Monday, January 04, 2021

ஏற்ற கலத்துக்கும் | முருகன் திருப்பாவை - 21

ஏற்ற கலத்துக்கும், ஏலாத எக்கலத்தும்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-21

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



21/30 | மதியார்க்கும் மதிப்பவர்க்கும் ஆற்றுப்படை செய்வாய்!

ஏற்ற கலத்துக்கும், ஏலாத எக்கலத்தும்,
தேற்ற மருந்தாகும்; தீம்பால் விருந்தாகும்
ஆற்ற அருந்தமிழ்ச் செல்வனே நீயெழாய்!
பேற்றைத் தவங்கள் அலங்கார நின்னிசை

ஏற்கும் குறிஞ்சிக்கு ஏந்தலே நீயெழாய்!
மாற்றாரை மாற்றும் முருகவேள் நின்னிடம்,
ஆற்றாது வந்தோம், தருகவே ஆறுதல்!
போற்றியெம் முத்தம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!  (21)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP