Sunday, January 03, 2021

முப்பத்தும் பத்தும் | முருகன் திருப்பாவை - 20

முப்பத்தும் பத்தும் உடன்சேர்த்து ஒன்பதின்மர்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-20

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


20/30 | தமிழ் காக்கத் துயிலெழாய்!

முப்பத்தும் பத்தும் உடன்சேர்த்து ஒன்பதின்மர்,
தப்பாது ஏத்தும் முருகா துயிலெழாய்!
செப்பம் உடைய திருச்செந்தில் செவ்வேளே,
ஒப்பம் தமிழுக்குக் கந்தா துயிலெழாய்!

தெப்பம்போல் தொல்குடிக் காத்திடும் வள்ளிநீ,
நப்பின்னை வீட்டின் நலமே துயிலெழாய்!
அப்பமும் பிட்டும் அளிப்போம் குளிக்கவா,
இப்போதே எம்மைநீர் ஆட்டேலோ ரெம்பாவாய்!  (20)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP