Sunday, December 27, 2020

புள்ளின்வாய் பைம்பொழிலில் | முருகன் திருப்பாவை - 13

புள்ளின்வாய் பைம்பொழிலில், உன்பேர் அகவுதுகாண்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-13

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


13/30 | எட்டாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

புள்ளின்வாய் பைம்பொழிலில், உன்பேர் அகவுதுகாண்!
துள்ளித் துடித்தெழுவாய், தூக்கம் களைந்தெழுவாய்!
பிள்ளைப் பெதும்பைகளும் நோன்புக் களம்தன்னில்
மெள்ளத் திரள்கின்றார்; நீமட்டும் தூங்குவையோ?

வெள்ளி எழுந்து, பெருவானில் மின்னிற்றே!
வெள்ளி-எதிர் செல்வோம், விழுமையிலை சோதிடத்தில்!
கள்ளக்  கதிர்வேலன், செவ்வேள் தனைக்கூட
கள்ளம் விலக்கிக் கலந்தேலோ ரெம்பாவாய்!   (13)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP