Saturday, December 26, 2020

கனைத்திளம் கன்றெருமை | முருகன் திருப்பாவை - 12

கனைத்திளம் கன்றெருமை காராம் பசுக்கள்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-12

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


12/30 | ஏழாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


கனைத்திளம் கன்றெருமை காராம் பசுக்கள்
நினைத்தவுடன் பால்பொழியும் நீள்வீட்டு நங்காய்!
வினைக்கு உயிராகும் வேளாண்மை செய்யும்
பனைக்குத் திமிலுயரம் காளைகள் துள்ளும்!

பனியின் துளிவீழும் செங்கழனிப் பைங்கால்
குனித்துப் பழனிவயல் குன்றோன்கைக் கூப்பும்!
இனித்த இளங்காலை வாராய்நீ பெண்ணே
அனைத்தும் முருகே அறிந்தேலோ ரெம்பாவாய்!   (12)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP