Friday, December 25, 2020

கற்றுக் கறவையாம் | முருகன் திருப்பாவை - 11

கற்றுக் கறவையாம் மாடுகளும் ஆடுகளும்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-11

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


11/30 | ஆறாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


கற்றுக் கறவையாம் மாடுகளும் ஆடுகளும்
குற்றம் விலகிய கோவல் பதிவாழும்!
செற்றார் செருச்செய்யும் வெட்சி கரந்தையுமே
நற்றமிழின் கூர்-புறங்கள், முல்லை அகத்திணையே!

இற்று இறுக்கிவிட்ட இஞ்சும் இடுப்பழகி
முற்றம்நீ வாராயோ, நப்பின்னை நன்மயிலே?
அற்றம் அழித்திடும் ஆண்மைக் குறிஞ்சிக்கோன்
கற்ற தமிழே பொருளேலோ ரெம்பாவாய்!   (11)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP