Wednesday, December 23, 2020

தூமணி மாடங்கள் | முருகன் திருப்பாவை - 09

தூமணி மாடங்கள், முற்றத்துக் கூடங்கள்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-09

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


09/30 | நான்காம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

தூமணி மாடங்கள், முற்றத்துக் கூடங்கள்,
பூமணித் தீபங்கள் பூண்டு விளக்கெரிய,
யாமம் விலகியும், யானையின் கோட்டுக்கால்
தாமம்சூழ் கட்டிலில், தூங்கும்பொற் செல்வீநீ!

மாமி எழுப்பீரோ? மாமன்மார் செல்லமோ?
காமநல் தூக்கத்தாள் தாழ்திறக்க மாட்டாளோ?
மாமாயன் வில்முருகன் மச்சானை முன்னிட்டு
நாமம் பலகோடி சொல்லேலோ ரெம்பாவாய்!   (09)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP