Tuesday, December 22, 2020

கீழ்வானம் கீழ்ச்சிவக்கும் | முருகன் திருப்பாவை - 08

கீழ்வானம் கீழ்ச்சிவக்கும்; பல்-எருமைக் கீழ்வீட்டில்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-08

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


08/30 | மூன்றாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


கீழ்வானம் கீழ்ச்சிவக்கும்; பல்-எருமைக் கீழ்வீட்டில்
தாழ்வான கால்வாயில் சூழ்ந்துமிக மேயுதுபார்!
ஆழ்வார்கள் தீந்தமிழில் ஆசைமிக கொண்டவளே,
சூழ்ந்துவரும் தோழிகளைச் செல்லாமல் காத்து-உன்னை,

ஏழ்பாரும் உய்விக்கும் ஏந்தல் முருகனிடம்
வீழ்வாய்நீ காதலில் வந்தே-யாம் கூவுகிறோம்!
பாழ்-வாயில் சாக்குபல சொல்லாமல் நீ-எழுந்து
ஆழ்வாய்நீ வாராய், அருளேலோ ரெம்பாவாய்!   (08)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP