Monday, December 21, 2020

கீசுகீசு என்று-எங்கும் | முருகன் திருப்பாவை - 07

கீசுகீசு என்று-எங்கும், கீச்சுது-பார் புள்குருவி!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-07

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


07/30 | இரண்டாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

கீசுகீசு என்று-எங்கும், கீச்சுது-பார் புள்குருவி!
ஏசுது உன்னைத்தான், என்-திருடி எந்திருடீ!
வீசுது வெண்ணெயின் வாசங்கள் உன்வீட்டில்
பேசுது-பார் கை-வளைகள்; பெண்கள் தயிர்கடைய!


தீசல் கரும்-பானை சும்மாட்டின் மேடைமேல்
மூசொலி பல்-கயிறும் மத்தும் நடனமிட,
வாசநெய் மண்டி, பொரிச்ச முருங்கை-இலை
ஆசையாய் இல்லம் திறவேலோ ரெம்பாவாய்!   (07)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP