Thursday, December 17, 2020

ஓங்கி அறம்வளர்த்த | முருகன் திருப்பாவை - 03

ஓங்கி அறம்வளர்த்த சான்றோர்கள் பேர்பாடி...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-03

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



03/30 | நோன்பு நல்கும் நலங்கள் கூறல்!

ஓங்கி அறம்வளர்த்த சான்றோர்கள் பேர்பாடித்
தீங்கில்லா நற்-சமணம், தீந்தமிழில் தந்தகொடை!
பாங்குடனே பாடிடுவோம் பாவையர் நோன்புதனில்
தாங்குதமிழ் மால்முருகன், மெல்-அருகன் நன்மரபே!

ஈங்குள்ள பைங்கழனி ஒட்டிவிழும் மாம்பழங்கள்,
தேங்கும்நீர் துள்ளி-எழும் தேன்மீன்கள் துள்ளி-விழும்!
வீங்கு-பயிர் வேளாண்மை வீறுடனே மாடு-மனை
நீங்காது நல்-இயற்கை வாழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (03)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP