Wednesday, December 16, 2020

வையத்து மங்கையரே | முருகன் திருப்பாவை - 02

வையத்து மங்கையரே, நம்-பாவை நோன்புக்கு...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



02/30 | நோன்பு நோற்கும் முறை விளக்கல்!

வையத்து மங்கையரே, நம்-பாவை நோன்புக்குச்
செய்வன என்னென்ன? செப்புகிறேன் கேளீரே!
பெய்வோம் பிற-உயிர்க்கு, அன்பும் தமிழறமும்
மெய்யாய் மனத்தினிலே, மேலோட்டப் பேச்சல்ல!

தையல் மகளிர்-நாம், தேவையிலாச் சாதியினைப்
பையப் புறம்தள்ளிப், பைந்தமிழின் வள்ளுவத்தைச்

செய்ய மிக-ஓதிச், செந்தில்-அவன் சேவடியை
உய்யும்-ஆறு என்றே உகந்தேலோ ரெம்பாவாய்!   (02)


முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP