Monday, November 16, 2015

சின்னச் சின்ன முருகன்!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!



சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்

எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!

கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்

கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்

தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!

சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்

சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்

தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!

கந்தனென்று நானழைக்க வருவான், அவன்

பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்

ஆறுமுகமாகி வந்த ஒருவன்!

அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்

இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்

சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!

ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்

கூறும் அடி யார்கள் வினை களைவான்!



--கவிநயா

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP