Tuesday, September 24, 2013

இளையராஜா செய்து வைக்கும்: "வள்ளித் திருமணம்"!

சென்ற பதிவில், இளையராஜா-முருகன் பாடல்கள் = (சினிமாவில்) "six-o-six"-ன்னு சொல்லியிருந்தேன்!

ஒடனே.. ட்விட்டர் நண்பர்கள் சிலர், ராஜா (எ) கடலில் மூழ்கி,
மூச்சடக்கி, முத்துக் குளித்து,
6->9 ஆக்கி, சில அழகிய முத்துக்களை எடுத்துக் கொடுத்தனர்:)

So.. இளையராஜா-முருகன் = 9 songs!
பதிவின் இறுதியில், ஒரு பட்டியலாய் இட்டு வைக்கிறேன்! போதுமாய்யா?:)

@_drunkenmunk (எ) வேங்கடேஸ்வரன் கணேசனுக்கு = என் களிமிகு - முருக நன்றி பல!
@sicmafia, @mayilsk = thanks to these great Raja fans too!

பெண் ஜென்மம் (எ) பழைய படம் பார்க்க நேரிட்டது;
அதன் விளைவு: ஒரே Family சினிமாவில் = இரண்டு முருகன் பாடல்கள்!
*முதற் பாடல் = சென்ற வாரம்
*இரண்டாம் பாடல் = இந்த வாரம்!

இன்றைய செவ்வாய், ஒரு கதா காலட்சேபம்!
= செய்வது: பி.சுசீலா

என்ன வியப்பா இருக்கா?:)
இளையராஜா செய்து வைக்கும் = வள்ளித் திருமணம்!


vaLLi kodi - creeper
வள்ளித் திருமணம் = சங்கத் தமிழில் ஊறி விட்ட ஒன்னு!
கொடிநிலை கந்தழி வள்ளி -ன்னு தொல்காப்பியம்!

கந்து (எ) நடுகல்லில் படர்ந்த வள்ளிக் கொடி
= தமிழ்த் தொன்மத்தின் "யாரோ"
= குடி காத்த முன்னோர்கள்! ஆணும்-பெண்ணுமாய்!

விநாயகர், நாரதர் எல்லாம் பின்னாள் சம்ஸ்கிருதக் கலப்பு;
இந்தக் கலப்பெல்லாம் இல்லாமலேயே, வள்ளித் திருமணம் = உள்ளம் உருக்குவது!

வள்ளி:
= முல்லை நில நடுகல், திருமாலின் மகள்!
= குறிஞ்சி நில முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!

மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை! முன்னே-பின்னே நெருங்கிப் பார்த்ததும் இல்லை!

இப்படித், தான் பார்க்காத ஒரு முருகனுக்காக...
பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்...
சில சமயம் வீரத் தமிழச்சியாய், விரட்டவும் விரட்டினாள்! :)


* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* இது கைக்கிளையா? one-sided? = தெரியாது...
* முருகன் வருவானா? = தெரியாது...
= இருப்பினும், "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!

காடு - மேடு - குகைகள் தோறும்,
கால் தேயத் தேய,
மனமும் தேயத் தேய..

அதனால் தான் முருகன், "தேய்ந்த போன வள்ளி" - அவள் பாதத்தை இன்றும் பிடித்து விடுகிறான்!
என்னாது? பொம்பளை காலை, ஆம்பிளை, சதா பிடிச்சி விடுவதா?

ஆமாம்!
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
-ன்னு அருணகிரி மட்டுமே, இயைந்து பாடுவாரு! மதப் பிடிப்புள்ள வேறு யாரும், முருகன், அவ காலைத் தொட்டான் -ன்னு பாட மாட்டாங்க!

காதல் பாதங்களுக்கு, முருகன் செய்யும், "பாதுகா பட்டாபிஷேகம்"!
பாதம் வருடிய மணவாளா! 
பாதம் வருடிய மணவாளா!

வள்ளியின் காதல் = "கைக்கிளை" -ன்னு சொல்ல மனசு வருமா?
கைக்கிளை = Not Just one-sided Love!
முல்லை/ குறிஞ்சி அகத் திணைகளுக்கும் = முற் சொல்லப்படுவது கைக்கிளையே! = ஏன்?
Try reading tholkaapiyar's heart & sangam landscape = here

இதுவே வள்ளித் திருமணம்! அவன் வருவானா?-ன்னு கூட அறியாது,
* அவள் = அவனே அவனே!
* அவனுக்கு = அவளே அவளே!



பொதுவா, வள்ளித் திருமணத்தைத் தொடாத, சொற்பொழிவாளர்களே இல்லை! (சம்ஸ்கிருதம் கலந்து தொட்டாலும்)
வாரியார் முதற்கொண்டு..., புலவர் கீரன், தேச மங்கையர்க்கரசி, நாகை முகுந்தன் -ன்னு பலரும் தொடும் Topic!

அதைச் சுசீலாம்மா தொட்டால்?
பாட்டுக்கு அரசி = கதா காலட்சேபத்துக்கும் அரசி ஆகிறார்:))

முருகன் பாமாலை (எ) Album - அதில், சுசீலாம்மா, முருகன் வரலாற்றைப் பாட்டாத் தான் பாடுவாங்க! ஆனா, கதா காலட்சேபமாக???
= வாரியார் போல் செய்து காட்டும் வாய்ப்பு?
= இளையராஜா உருவத்தில் வந்தது!

கீழே, நீங்களே கேட்டு மகிழுங்கள்! = ராஜாவின் "காலட்சேப" இசையை;
Subtle Veenai & Violin - ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா, ஏய்ச்சுப் புட்டேனே!:)))



வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள் - அந்தப்
புண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்!

(நம்பிராசன் திருமகளான வள்ளியின் பேரழகை, நாரத மாமுனி வந்து, முருகனிடம் சென்று...)

கண்டேன், கனியொன்று கண்டேன்
வடிவேலனே, சிவபாலனே,
உன் பின்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம்..
கண்டேன், கனியொன்று கண்டேன்

அழகிய விழி வண்ணம், மழைநிகர் குழல் வண்ணம்
உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம்!
கண்டேன், கனியொன்று கண்டேன்

(வள்ளியின் வடிவழகை நாரதர் சொல்லக்கேட்டு.. வேலவன் வேடனாகக் கோலம் பூண்டான்; மானைத் தேடும் பாவனையில், மங்கை வள்ளி இருக்கும் தினைப் புனத்தினுக்கு வந்து சேர்ந்தான்)

எந்த மான்? தேடி வந்த மான்?
(- என்று வள்ளி கேட்க...)
மேயாத மான் - புள்ளி
மேவாத மான்

பாயும் நடையழகும், பின்னல் நடையழகும்
கண் கவரும் முகமும் இதழும் - பொன்
செங் கமலம் எனவே திகழும் - தனில்
அந்தம் மிகுந்திட வந்து பிறந்தது... மேயாத மான்...

(அவன் சொன்ன மான், இந்தக் கன்னி மான் என்று கண்டு கொண்ட வள்ளி, சினந்தாள், சீறினாள்)

மானைத் தேடி வந்த வேடா
அடடா மூடா - சரி தான் போடா - உன்
கள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா? - அட
மானைத் தேடி வந்த வேடா!

(உடனே வேடனாய் இருந்த வேலன், மர வேங்கையாய் மாறி, வள்ளியைத் தொடர்ந்து வந்து..)

ஆவியே, என் ஆருயிர் சஞ்ஜீவியே, மன்மதன் என்னும்
பாவியே, மலர்க் கணைகள், தூவியே வாட்டுறான் கண்ணே!
ஆயல் ஓட்டும் பெண்ணே! - பெண்ணே! பெண்ணே!

(வள்ளி என்ன இந்தக் காலத்து Modern Girlஆ,
சரியென்று உடனே சொல்ல? சாரியென்று மறுத்து விட்டாள்;
வாலிப முருகன் உடனே வயோதிகன் ஆனான்!
வள்ளி குடுத்த தினை மாவைத் தின்ற அந்தத் தாத்தாவுக்கு..)

விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி
(காதல்) சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி!

(வள்ளி பாத்தா, அடி ஆத்தா, இவர் பொல்லாத தாத்தா  என்று வள்ளி வெறுக்க... ஆறுமுகன், அண்ணன் ஆனைமுகனை அழைத்தார்; வள்ளி பயந்து, திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள்; யானை விலகிப் போயிற்று)

ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா
ஏய்ச்சுப் புட்டேனே!

(மறுபடியும் யானையை முருகன் அழைக்க, அது தும்பிக்கையால் வள்ளியைத் தூக்கிப் போட..
அவள் முருகாஆ, முருகாஆ என்று அலற,
வள்ளியை முருகன் வாங்கிக் கொண்டான், கையில் தாங்கிக் கொண்டான்;
மனம் போல் முருகனை வள்ளி மணந்து கொண்டாள்!)

வள்ளியம்மை நாதனுக்கும் 
புள்ளி மயில் வேலனுக்கும்
மங்களம், சுப மங்களம்!
மங்களம், சுப மங்களம்!


(பாட்டைக் கேட்டுக் கொண்டே தட்டச்சியது;
பிழைகள் இருப்பின், தயங்காது சுட்டிக் காட்டவும்; திருத்தி வைக்கிறேன்- நன்றி)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

*கதா காலட்சேப மெட்டில் = இளையராஜா இசை
*கதா காலட்சேப மெட்டில் = சுசீலாம்மா பாடல்
= இது அபூர்வம்!

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela



சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:

1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம்மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது (Bhairavi Ragam)

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

4. தெய்வ வாக்கு படத்தில் - வள்ளி வள்ளி என வந்தான், வடிவேலன் தான் - இளையராஜாவே பாடியது, ஜானகியுடன்

5. கும்பக்கரை தங்கய்யா படத்தில் - என்னை ஒருவன் பாடச் சொன்னான் - இளையராஜாவே பாடியது (kalyani ragam)
----------

6. ஊமை உள்ளங்கள் படத்தில் - மனதினில் புதிய அருவி (வேலனின் தோளில் வேடனின் செல்வி) - சசிரேகா பாடியது (திருத்தணி, பரங்குன்றம் எல்லாம் வரும்)

7. புயல் பாடும் பாட்டு படத்தில் - வேல் முருகனுக்கு மொட்டை ஒன்னு போடப் போறோம் டோய் - மலேசியா வாசுதேவன் பாடியது (Mohana Ragam)

8. பெண் ஜென்மம் படத்தில் - செல்லப் பிள்ளை சரவணன் - யேசுதாஸ்/ பி. சுசீலா பாடியது (Maand Ragam) 

9. அதே பெண் ஜென்மம் படத்தில் - வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் வேலனை மாலையிட்டாள் - பி.சுசீலா பாடியது (கதா காலட்சேபமாக)

= Raja-Murugan Songs (எ) நவரத்தினங்கள் இவையே!

Tuesday, September 17, 2013

"இளையராஜ முருகன்": செல்லப் பிள்ளை சரவணன்!

பொதுவா...
முருகனைப் பற்றிய இளையராஜா பாடல்கள் மிகவும் குறைவு (சினிமாவில்)

தனிப்பட்ட Album-களில், இசைஞானி அவர்கள், சில பல பாடி/ இசையமைத்து இருக்கலாம்!
(கீதாஞ்சலி Album - முருகனை நினை மனமே)

ஆனால் சினிமாவில்?


1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம் - மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

வள்ளி வள்ளி என வந்தான் என்ற "பொதுவான" பாட்டும் உண்டு!
But, இவ்ளோ தான் "ராஜா-முருகன்" கூட்டணியா?:(


அல்ல!
பெண் ஜென்மம்!

அண்மையில் ஒரு தேடலில், அபூர்வமான ராஜா பாடல் ஒன்னு கிடைச்சுது = ராஜா & சுசீலாம்மா Solo
நீண்ட நாள் கழிச்சிக் கேக்குறேன்; மிக்க இனிமை!

ஒரு கோயிலின் இரு தீபங்கள், இரு வேறு திசை பார்ப்பது என்ன?
ஒரு பாடல் தான் நாம் பாடினோம்; இறு வேறு இசை கேட்பதென்ன?

This song is very close to my feelings!
ஆனா, அப்படியே நூல் பிடிச்சிப் போனாக்கா.....
Wow! அதே படத்தில் = 2 முருகன் பாடல்கள்!
Dei Loosu Muruga, two more Raja Songs for u da!:)

Someone lucky to have u, my honey:) .. And you are lucky to have Raja Songs = 6 in total:))


பெண் ஜென்மம் என்ற படம்!
ராஜாவின் அபூர்வங்களில் ஒன்று! ஆனா இந்தப் படம் பேசப்படாமலே போனது ஏனோ?
*"ஓய் மாமா" என்ற ஜானகி பாடலும் உண்டு, with SPB:)
*சுசீலாம்மா பாடலும் உண்டு, with Yesudass

இது ஆரம்ப இளையராஜா! அதனால் MSV வாடை அடித்தாலும் அடிக்கலாம்:)
ஆனா, Tabla & Guitar காட்டிக் கொடுத்துரும்!
பாடலின் சரணம் அழகோ அழகு! = வள்ளி மான் - புள்ளி மான்! 
செம்மான் மகளைத் திருடும் திருடன் என்ற அநுபூதி போலவே வரும்!

ஒரே படத்தில் = 2 முருகன் பாடல்கள், ராஜ இசையில்:
1. செல்லப் பிள்ளை சரவணன் -  Susheelamma & Yesudass
2. வண்ணக் கருங்குழல் வள்ளி - Susheelamma

இரண்டாம் பாட்டில், இளையராஜா சொல்லித் தரச், சுசீலாம்மா, ஒரு கதா காலட்சேபமே பண்ணுறாங்க:)
So different :)) மேயாத மான்! = அதை, அடுத்த வாரம் பார்ப்போம்!
இன்னிக்கி "செல்லப் பிள்ளை சரவணனுக்கு" hai சொல்லுவோமா?:) வாங்க....



செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
கோபத்தில் மன ஸ்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்!!
(செல்ல)

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் - பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்!
கூந்தலில் மலர் சூடியே - அவன்
கூட நான் வர வேண்டுவான்!
மயங்கி நான் மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்!!

செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
வள்ளியை இன்ப வல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்!
(செல்ல)

மாலையில் ஒரு மல்லிகை - என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை!
மன்மதன் கணை ஐவகை - அதில்
ஓர் வகை இவள் புன்னகை!!

இடை துவள
கலை பயில
(செல்ல)

கார்குழல் உந்தன் பஞ்சணை - இரு
கைகளே உந்தன் தலையணை!
வேலவன் கொஞ்சும் புள்ளி மான் - அதன்
வடிவம் தான் இந்த வள்ளி மான்!

அருகில் நான் வந்தேன்..
இதழ்ச் செந்தேன்
இதோ தந்தேன்
(செல்ல)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

ராகம்: மாண்ட்

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela

Monday, September 09, 2013

குழந்தை முருகன்! ஸ்ரீதேவி முருகன்!

குழந்தை முருகன்-களிலேயே மிக அழகான முருகன் யார்?

* "கந்தன் கருணை" மாஸ்டர் ஸ்ரீதர் = சாட்சாத் சிவபெருமானையே, கொஞ்சம் ஓவராப் பேசுவாரு:)
* ஆனால், "அகத்தியர்" ஸ்ரீ தேவி = அப்பாவி முருகனாய், "இப்ப என்ன நாரதரே செய்யலாம்?" -ன்னு ஏக்கமாய்க் கேட்கும் காட்சி:)


என் முருகன் = ஓவராப் பேசுறவனா?
(அ) அப்பாவி-செல்லம்-புஜ்ஜூ-ஜூஜ்ஜூ வா?:)))
IMHO, Sridevi is very apt for My Murugan Darling!

பெரியவர்களில்: சிவகுமார் முருகன் பொருத்தம்!
கண்ணனுக்கு எப்படி ஒரு NTR அமைஞ்சாரோ, முருகனுக்கு அப்படி ஒரு சிவாஜி அமையவில்லை!
எனினும், இருப்பவர்களில்... சிவகுமார், கொஞ்சம் நன்கு பொருந்தி வருவாரு!

பேசாம, என் அபிமான நடிகை.. சிலுக்கே முருகனா நடிச்சீறலாம்:)
சிலுக்கின் கண்ணும் = முருகன் வேலும் ஒன்னு தான்:))

ஆனால், சிலுக்கை முருகனா நடிக்க, ஆச்சாரக் காராள் விடுவாங்களோ என்னமோ?
சிவகுமாரையே, பல நிபந்தனைகளின் பின், முருகனா நடிக்க விட்டவங்களாச்சே:)

வாங்க, இன்னிக்கி "அப்பாவி முருகன் - ஸ்ரீ தேவி முருகனைப்" பார்ப்போம்:)



மலை நின்ற திருக்குமரா மால்மருகா - தமிழ்க்
கலை தந்த தவச்செல்வா வேல்முருகா!
 (மலை நின்ற)

அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்!
(மலை நின்ற)

தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு!
(மலை நின்ற)

படம்: அகத்தியர்
வரி: உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
குரல்: TR மகாலிங்கம்
இசை: குன்னக்குடி


பாட்டெல்லாம் நல்லாத் தான் இருக்கு! அழகான வீணை இசை..
ஆனா, மயிலு மேல நாரதர் எப்படி ஏறலாம்?

என்னடா மயிலாரே? என்னவன் ஊர்தியில் இன்னொருவன்(ர்) ஏறுவதா?:))


Thursday, September 05, 2013

Pop Music Murugan!

தமிழ் பாப் (Pop) இசைச் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்ற = சிலோன் மனோகர்;
AE Manoharan என்பதே முழுப் பெயர்;


சுராங்கனி - சினிமாப் பாடலாக அல்லாமல், Album பாடலாகப் பாடிப் புகழ் பெற்றவர்;
இன்னும் பல துள்ளல் பாடல்கள்:
அன்பு மச்சாளே என் ஆசை மச்சாளே, பிராந்தி பியர் விஸ்கி போடாதே... :))

அந்த ஈழக் கலைஞர், முருகன் மேல் பாடிய பாடல்
= மால் மருகா, எழில் வேல் முருகா! Pop Music Murugan!
அதுவே இன்றைய பாடலாக.. முருகனருள் வலைப்பூவில்!


என்ன திடீர்-ன்னு Pop இசை? -ன்னு பாக்காதீங்க!:)

ஈழத்தின் மிகப் பிரபலமான முருகன் ஆலயம் = நல்லூர்க் கந்தசாமிக் கோயில்! (யாழ்ப்பாணம்)
அங்கு நடைபெறும் 21 நாள் உற்சவம்.. இப்போது!
அதை முன்னிட்டே, இந்த நல்லூர் முருகன் பாடல்!

இந்த நல்லூர் முருகன் முன்பு தான், திலீபன் எனும் ஈழப் போராட்ட இளைஞன், உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தான்..
நல்லூர் முருகனை நினைக்கும் போதெல்லாம், திலீபன் நினைவும் எனக்கு வந்து சேரும்!

*கதிர்காமத்தில் பல பண்பாடுகளின் ஒத்திசைவு = பெளத்தம்/ இஸ்லாம்/ முருகன்!
"உருவாய் அருவாய்" என்பதில் அருவம்! காண முடியாது முருகனை! சித்திர முருகன் மட்டுமே!

*நல்லூரில் = தமிழ் மட்டுமே பரவும் முருகனைக் காணலாம்!
இன்று உருவ வழிபாடு வந்து விட்டாலும், ஈழத்தில் வேல் வழிபாடே மிகத் தொன்மையானது!



நல்லூர் 21 நாள் உற்சவப் பதிவுகளுக்கு:
என் இனிய நண்பர், இசைமிகு, கானா பிரபா-வின் தளத்துக்குச் சென்று ரசிக்கவும்;

முன்பு, கதிர்காமத்துக்கு என்று தனிப்பதிவு இட்டது போல்...
பின்பு ஒரு நாள், நல்லூர்க் கந்தசாமிக் கோயிலுக்கும் இடுகிறேன்..

இப்போது, பாடலை மட்டும் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!



Pop Music Murugan:

மால்மருகா - எழில் வேல்முருகா - நீயே!
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே!
முருகா வடிவேலா!
தருவாய் அருள் குமரா!

நல்லூர் நாயகனே - நல்வழி காட்டும் ஐயா!
நம்பிய பேர்களது - துன்பங்களைத் தீரும் ஐயா!
நல்லூர் எம்பதியே!
நம்பிக்கையின் ஒளியே!

கனிமலைக் கந்தவேளே - காப்பது நீ ஐயா!
கதியே நீயென்றால் - பதியே சரணம் ஐயா!
கந்தா கதிர்வேலா!
வருவாய் சிவபாலா!

ஏழுமலை இறையினிலே - எழுந்திடும் குமரேசா!
ஆறுதலைத் தந்திடுவாய் - ஆறுமுகா அழகேசா!
குமரா எழில் முருகா!
குறுகுறு நகை அழகா!

தோகைமயில் ஏறிவரும் - சேவல் கொடியழகா!
பழமுதிர் சோலைகளில் - பவனி வரும் வடிவழகா!
அரகர ஆறுமுகா!
அருளே திருக்குமரா!

லண்டன் பாரிஸ் சுவிஸ் - ஜேர்மனி நோர்வே ஆஸி
கனடா வாழ்த் தமிழன் - நாயகனே முருகைய்யா!
உலகாள் தமிழ்த் தலைவா!
உமையாள் திருக் குமரா!

சிவனின் மைந்தன் ஐயா - சிங்கார வேலன் ஐயா!
தகப்பனுக்கு உபதேசம் - செய்த சுவாமி நீ ஐயா!
தவறுகள் பொறுத்திடுவாய்!
தமிழரைக் காத்திடுவாய்!!

அரகர ஆறுமுகா!
அருளே திருக்குமரா!

குரல்: சிலோன் மனோகர்
வரி: ?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP