Friday, October 25, 2013

பார்த்திபன் கனவு: வண்ண மயிலே, வண்ண மயிலே!

பார்த்திபன் கனவு -ன்னு ஒரு நாவல்!
அமரர் கல்கி எழுதி, பின்பு திரைப்படமா எடுத்தாங்க;
"தமிழ் - தெலுங்கு - சிங்களம்" -ன்னு மும் மொழிகளில் வந்த முதல் படம் (1960);
மாமல்லபுரம் சிற்பங்கள் அமைக்கும் காட்சியெல்லாம் காணலாம்!
Ponniyin Selvan Fame ஓவியர். மணியம் தான், படத்தின் கலை இயக்குநரும் கூட!

படத்தில் அப்பர் பெருமான் கூட வருவாரு!
பிள்ளைக் கறி தந்த பரஞ்சோதி/ சிறுத்தொண்டர், தான் அவ்வாறு செய்தது "தவறு" -ன்னு ஒப்புக் கொள்ளும் படமும் கூட:)


சிவகாமியின் சபதம் -நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தான்; ஆனா கதைக்களம் வேற!
கரிகால் பெருவளத்தானின் சோழ மரபில் வந்த பார்த்திபன்;

பல்லவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, "தனிச்சோழம்" காணவேண்டும் என்பதே அந்தப் பார்த்திபனின் கனவு;

ஆனால் போதுமான படைபலம் இல்லை;
பின்னாளில்.. அவன் மகன் விக்கிரமன், பல்லவனின் மகளையே காதலித்துக் கைப்பிடித்து, அந்தக் கனவையும் நனவாக்குகிறான்!

சோழன் கனவு நனவாகப், பல்லவனே (நரசிம்ம வர்ம பல்லவனே) பலப் பல உதவிகள் செய்கிறான்:)
இது போன்ற "வரலாற்றுத் திரிபு"களுக்கு, கல்கியைப் பிலுபிலு என்று பின்னாளில் பிடிச்சிக்கிட்டாங்க!:)


ஜெமினி, கணேசன் வைஜயந்திமாலா,
ரங்காராவ், வீரப்பா, பாலைய்யா, அசோகன்,
(ஆரம்ப கால) சரோஜா தேவி, ராகினி, குமாரி கமலா
-ன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே உண்டு!

பாடகர்களும் = நட்சத்திரப் பாடகர்களே;
பி.சுசீலா, பி.லீலா இவர்களுடன் சேர்ந்து கொண்டது = பிரபல மேடைப் பாடகி, ML வசந்தகுமாரி!

ஆயனாரின் மகள் சிவகாமியாக = குமாரி கமலா ஆட..
அதற்கு MLV பாடும் பாட்டே = இன்றைய பாடல்!

வள்ளியின் முருகக் கனவை, 
ஆயன் மகள் ஆடிக் காட்டுகிறார்! பாருங்கள்!



அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே, வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத் துன்பத்தைக்
கொத்தி எடுத்திடவே, உதடு அவரைத் தேடுதடி
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?
கள்ளச் சிரிப்பாலே கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே, அவர் வரக் காணேனே
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

குரல்: M.L. வசந்தகுமாரி
வரி: விந்தன்
இசை: வேதா
படம்: பார்த்திபன் கனவு

முருகனின் செவ்வாயில் இட வேண்டிய பதிவு;
ஆனா மருத்துவமனையில் இருந்தேன்;
நேற்றே வீடு வந்து சேர்ந்தேன்; அதான் வெள்ளியில் வருது; தாமதத்துக்கு மன்னிக்க:)
தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?

1 comments:

திண்டுக்கல் தனபாலன் October 25, 2013 7:04 AM  

முதலில் உடல்நலம்... பதிவுகள் அப்புறம்...

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP