Monday, October 28, 2013

நடிகர் நாகையா பாடும்: திருமுருகா ஒருதரம்..

நடிகர் நாகையா - நம்ம எல்லாருக்குமே தெரியும்!
சென்ற காலத்து நல்ல குணச்சித்திர நடிகர்...

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
-ன்னு உருக்கமாகப் பாடும் காட்சியில், அவர் நடிப்பைத் தான் பாத்துருக்கோமே?

*கண்ணன் பாட்டில் அவர் நடிச்சாரு; பாடவில்லை!
*கந்தன் பாட்டில் நடிக்கிறாரு; அவரே பாடவும் பாடுறாரு!

வியப்பா இருக்கா?
எதிர்பாராதது -ன்னு ஒரு படம்; பாட்டும் எதிர்பாராதது தான்:)

சிவாஜி-பத்மினி காதல்!
சிவாஜி வெளிநாட்டுப் படிப்புக்குச் சென்றிருக்கும் வேளையிலே... ஏழை வீட்டுப் பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது:(

மணமகன் யாரு? = சிவாஜியின் அப்பா!
என்ன.............. எதிர்பாராதது தானே?

(இன்றும் சினிமாவில், இரு மனம் ஒத்த காதலர்கள்..
ஆனா, தகப்பன் என்னைக்கோ பண்ண தப்பால், "அண்ணா-தங்கை" முறை-ன்னு பின்னாடி தெரிய வருமாம்;
பிரிஞ்சிடணும் = ஹிந்து தர்ம சாஸ்திரம்!
அடேய், "தர்மத்தை", ஆட்டின அப்பனுக்குச் சொல்லு, மனங் குடுத்த காதலர்க்கு அல்ல)

காதலி பத்மினியா? = "அம்மா" பத்மினியா?
சிவாஜியால் மறக்க முடியலையே! என்ன தான் பண்ணுவாரு?

கற்பனையான வாழ்வு; கற்பனையான காதல்!
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?????
= அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா!



திருமுருகா என்று
ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம்
பெருகுது கண்ணீர்

சிறுமதியால் உள்ளம்
இருண்டிடும் வேளையில்
அருளொளி வீசும்
ஆண்டவன் நீயே
(திருமுருகா என்று..)

அப்பனும் பிள்ளையும்,  நீதான் ஐயா
அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?
கருணா நிதியே கதிர் வடிவேலா
(திருமுருகா என்று..)

திருமுருகா, திருமுருகா, திருமுருகா



படம்: எதிர்பாராதது
வரி: ?
குரல்: சித்தூர் V. நாகையா
இசை: CN பாண்டுரங்கன்

(இதே படத்தில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, மிக அழகான Melody பாடல், கேட்டுப் பாருங்கள்..)

தியாகய்யா, பக்த ராமதாசு -ன்னு ஆரம்ப காலத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் = நாகையா
வயதான பின்..
நாகையா நடிக்காத பெரும் படங்களே இல்லை எனலாம்! அதுவும் நடிகர் திலகம் சிவாஜியோடு!

*சம்பூர்ண ராமாயணத்தில் தசரதன் ஆகட்டும் - சிவாஜி பரதன்
*தில்லானா மோகனாம்பாளில் குரு - சிவாஜி சிக்கல் சண்முகசுந்தரம்

தெனாலி ராமன், பாவ மன்னிப்பு,
ஆலய மணி, பச்சை விளக்கு...

தியாகய்யர், பக்த ராமதாசு போன்ற படங்களில் தானே இசையமைத்து, பாடியும் இருக்காரு நாகையா!

Legends எனப்படும் விழுமம்!
அவர்களை அறிந்து கொள்ள, நமக்கு வயாசாகிப் போகத் தேவையில்லை; அதுவும் Internet யுகத்தில்!
வள்ளுவரைப் படித்தால் வயசாகி விட்டதா என்ன?

இசைஞானி இளையராஜா, ரஹ்மான் புகழ் பாடும் வேளையிலே...
தமிழ்ச் சினிமாவின் இசை மேதைகள் = ஜி.ராமநாதன், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் என்று விழுமங்களையும் அறிந்து கொள்வோம்!

Legends are Legends!

5 comments:

திண்டுக்கல் தனபாலன் October 28, 2013 10:20 PM  

மிகவும் அருமையான பாடல்...

// வள்ளுவரைப் படித்தால் வயசாகி விட்டதா என்ன? // அதானே...?!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Anonymous October 29, 2013 2:51 AM  

வணக்கம்
நெஞ்சை கவர்ந்த பாடல்....

பதிவு பற்றிய விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown November 05, 2021 11:58 PM  

Nice to listen such old song. Thank you.

RAMANATHAN March 16, 2022 11:05 AM  

உள்ளம் உருகும் உண்மையாகவே முருகனிடம் நம்மை கொண்டு செல்லும் கனகசுரபி என்பவர் எழுதிய அற்புதமான பாடல் எதிர்பாராதது படத்தில்
தன்னுடைய சொந்த குரலில் சித்தூர் நாகையா அவர்கள் பாடுகின்றார் ! அருமை ! நாகையா அவர்கள்

Anonymous May 01, 2022 2:18 AM  

உருகுது நெஞ்சம் பெருகுதுகண்ணீர்
அருமையான வரிகள்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP