Monday, July 08, 2013

Can Murugan Dance? சிந்தனையில் மேடை கட்டி!

ஈசன் நடனம் ஆடுவாரு! முருகன் நடனம் ஆடிப் பாத்து இருக்கீங்களா?

Dance of Murugan! Very Rare!
ஆனா, செந்தூரில், அருணகிரிக்காக ஆடி இருக்கான்!

எவ்ளோ "சுகித்து" வாழ்ந்த அருணகிரிக்கு, ஒரு "பிள்ளைத்தனமான" ஆசை; முருகனை ஆட வச்சிப் பாக்கணும்-ன்னு.. :))
திருச்செந்தூரில், வாய் விட்டுக் கேட்டேபுட்டாரு!


Haiyo, இப்பிடித் திடீர்-ன்னு கேட்டுப்புட்டாரே; அவனுக்கு ஆடத் தெரியுமா?
= பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, டிஸ்கோ... :)

டேய் முருகா, நானும் உன் "தய்யா தக்கா"-வைப் பாக்கணும்டா; பாத்துட்டு ஒன்னைய காதோரமா கேலி பண்ண, எனக்கு ரொம்ப ஆசை!:)

Hey, என்ன தான் இருந்தாலும், மாமா ஈசனைப் போல ஒன்னால ஆட முடியுமாடா?
sorry sorry; He 8 ft, You 16 ft:)
ஆடுறா முருகா, ஆடுறா!  Please da... love u da!


முருகனை, நம்ம விருப்பத்துக்கெல்லாம், "ஆடுறா, ஆடுறா" -ன்னு ஆட வைக்கலாமா?
= அது சரியா? தப்பா?

* சரி-ன்னா, எப்படி ஆட வைக்கலாம்?
= சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்

* தப்பா?
= இல்லவே இல்லை! அவன் விருப்பமும் அது தான்!

ஆனா, நம்ம சுயநலத்துக்கெல்லாம் ஆட மாட்டான்; அவனே அவனே-ன்னு காதலிக்கும் போது, அவன் காதலிக்கு ஆடும் காதலன்!

செந்தமிழில் சொல்லெடுத்து, எந்தனையே பாட வைப்பான்..
நான் பாட, அவன் ஆட
என்- சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்


திருமலை-தென்குமரி -ன்னு ஒரு படம்;
வடவேங்கடம் to தென்குமரி = Bus Tour!

என் அபிமான இயக்குநர் ஏ.பி. நாகராஜன்; நம்ம குன்னக்குடி தான் படத்துக்கு இசை!
படத்தில், பல சுவையான (இன்றைய பசங்களுக்கு மொக்கையான) காட்சிகள்:)

பல தலங்களையும் காட்டுவார்கள்;
பல தரப்பு (மொழி-இனம்-பணம்) குடும்பங்கள், ஒரே பேருந்தில், ஒன்றாகச் செய்யும் தல தரிசனம்!
Of course, சுருளிராஜன் & மனோரமா the best! ...and young Sivakumar, like today's Suriya:)

திருத்தணியில், இந்தப் பாடல் படமாக்கப்பட்டது...



சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து
எந்தனையே பாட வைத்தான்..
(சிந்தனையில்)

தணிகைமலை மேல் அமர்ந்தான்
தத்துவமே பேசு கின்றான்
பழனிமலை தேடி வந்தான்
பரம்பொருளாய்க் காட்சி தந்தான்..
(சிந்தனையில்)

செந்தூரில் கோயில் கொண்டான்
சிங்கார வேலைக் கண்டான்
அழகர்மலை சோலை நின்றான்
ஆடும்மயில் ஏறி வந்தான்..
(சிந்தனையில்)

பரங்குன்றில் ஆட்சி செய்தான்
பாமாலை சூடிக் கொண்டான்
சாமிமலை வாசல் வந்தான்
காவடிகள் கோடி கண்டான்..
(சிந்தனையில்)

இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்:  சீர்காழி கோவிந்தராஜன்
படம்:   திருமலை தென்குமரி

வரிகள்: தென்கச்சி பாரதிசாமி
(அதிகம் அறிந்திராத கவிஞர்; அம்மன் மேல் பல பாடல்கள் எழுதியவர்; Album (இசைத்தொகை) -யாக வெளி வந்திருக்கு;

2 comments:

திண்டுக்கல் தனபாலன் July 08, 2013 9:50 PM  

திருமலை தென்குமரி - என்றும் அலுக்காத படம்... பயணம்...!

குமரன் (Kumaran) September 23, 2013 12:12 PM  

ஆற்றுப்படை வீடுகள் ஆறினையும் அழகாகத் தொகுத்த பாடல்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP