முருக அன்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Merry Merry Christmas, Happy Happy New Year!
இயேசு நாதப் பெருமான்
(எ) இனிய குழந்தை மூலமாக..
எங்கும் நிறைந்தவரான கர்த்தரே = உமக்கு ஸ்தோத்திரம்!
திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து..
ஒரு கிறிஸ்துவக் கன்னி, முருகன் மேல் பாடும் பாடல்!
(கர்த்தர் மேல பாட வேண்டியவளைக்,
கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு
தப்பா நினைக்காதே-ம்மா என்ற முன்னுரையோடு காட்சி துவங்கும்)
(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும் சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய் சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
உள்ளம் உருகாதா? - எந்தன் ஊனும் உருகாதா? அன்னை அழைத்தால் அருகில் வருவாய் பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)
தங்கரதம் போல் மயில் வாகனத்தில் கந்தன் வந்தால் கவலைகள் தீரும் அங்கம் முழுதும் திருநீறு அணியும் அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும் கந்தா.... அழகுத் திருக்குமரா செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)
நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும் அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம் எந்த நோயும் அணுக விடாதே என்றும் காக்கும் வைத்திய நாதன் வேலா.... கருணை மழை முகிலே பாலா.... பழநி மலை அரசே
---------
திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்
எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய
இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்!
"ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்!
எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்!
இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்!
எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்; அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ!
"பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்!
"சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்)
எம்.எஸ்.சுப்புலட்சுமி (எ) MS Amma
= இவர்கள் இசையைக் கேட்காதவர்கள் கூட இருப்பார்கள்..
= ஆனால் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்!
அந்த MS Amma, பாடிய "முதல் பாட்டு" எது? அதாச்சும் முதலில் ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு? = முதல் வணக்கம் முருகனுக்கே!:)
என்ன வியப்பா இருக்கா?:)
மீராவாக நடித்தவர்.. கண்ணா என்று கதறுபவர்..
அனைத்து தெய்வ வடிவங்களையும் போற்றினாலும்...
எம்பெருமான் திருவேங்கடமுடையான் மீது "ஆழ்ந்த பற்றுதல்" கொண்டவர்;
இன்றும் திருப்பதியில் சிலையாக வாழ்பவர்!
அவரா முருகன் மீது முதல் பாட்டு?:)
ஒரு வேளை, என்னைப் போலவே அவங்களும் போல..
*பொறந்த வீடு = "அப்பா திருமால்" என்றாலும்,
*புகுந்த வீடு = "காதல் முருகனோ" என்னமோ?:)))
அது ஒரு சிறுகதை!
பார்க்கலாமா, இன்றைய செவ்வாய்க்கிழமை? Madurai Shanmugavadivu Subbulakshmi = MSS
சண்முகவடிவு = அம்மா பேரு;
அப்பா பேரு = அதிகம் வெளியிற் தெரிவதில்லை..
கணிகையர் குடியில் உதித்தவர்!
சுப்புலட்சுமிக்குப் 10 வயது (1926)
அன்னிக்கி சாயந்திரம், பள்ளிக்கூடம் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கொறிச்சிட்டு..
வெளியில் போய் விளையாடும் ஆசையில், குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வந்தா....
தாய் சண்முகவடிவு = ஓர் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செஞ்சி வச்சிருக்காங்க!
அவிங்களே ஒரு நல்ல வீணைக் கலைஞர் தான்!
அந்தச் சுற்று வட்டாரச் சூழலும் நட்பும் தந்த அறிமுகத்தால், Oriental Records என்னும் ஒலித்தட்டு நிறுவனம் மூலமாக, இப்படியொரு வாய்ப்பு!
சரி, என்ன பாட்டு பாட?
அதையும் தாயே முடிவு பண்ணி வைச்சாச்சி!
அந்தப் பாட்டை எழுதியவர் = ஒரு பெரும் "வைணவர்"
ஆனால், திருச்செந்தூர் முருகனிடம் ஆராக் காதல் கொண்டவர்; பேரு: பகழிக் கூத்தர் (15th CE)
முருகன் பிள்ளைத் தமிழிலும்..
நூலின் காப்புச் செய்யுளைத் திருமாலுக்கே வைத்தவர்.. குமரப் பெருமான் தனைக் காக்கச் சங்கு ஆழி படைத்த பெருமாளே!
அவர் வயிற்று நோயும் தீர்த்து.. வங்கார மார்பிலணி பதக்கமும் குடுத்த முருகன்!
அவருடைய கதை = இங்கே!
அப்பறமாப் படிச்சிப் பாருங்க! "பகழி" என்ற செந்தமிழ்ச் சொல்லுக்குப் பொருளும் புரியும்!
இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டைத் தான், சுப்புலட்சுமியின் அம்மா, தேர்ந்தெடுத்து வச்சி இருக்காங்க!
ஆனா இதைப் பத்து வயசுப் பொண்ணு பாட முடியுமா? செந்தமிழ்-ல்ல வேற இருக்கே?
நீங்களே கேளுங்கள்..
How MS kid, can extend her voice, to suit the difficult tempo of the song, even at such a small age!
ஒரு பிறந்த நாள் பரிசாய், இந்தப் பாடலை முன்பு எப்பவோ வலையேற்றி இருந்தேன்..
பாட்டின் வரிகள், காணொளியில் கூடவே வரும்:)
மரகத வடிவம் செங்கதிர் வெயிலால் வாகாய் வாடாதோ? மதிமுக முழுதும் தண்துளி தரவே வார்வேர் சோராதோ? (மரகதப் பச்சை உமை அன்னை.. அவ வெயிலால் வாடுறாளே.. அவ மதிமுகம் முழுசும் வியர்வைத் துளியில் சோர்ந்து போகுதே)
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
தாலப் பருவம்
வரிகள்: பகழிக் கூத்தர்
MS "அம்மா" என்று உலகமே பின்னாளில் அழைத்தது..
அந்த "அம்மா" பாடிய தாலாட்டு = இது குழந்தை பாடிய தாலாட்டு!:)
இதுவே MS சுப்புலட்சுமி அவர்களின் முதலில் பதிவு செய்த பாடல் - On LP Records by Oriental Recording Company!
முருகன் துவக்கி வைத்த இசைப் பயணம் = இனிதே "நிறைந்து" முடிந்தது!
வாருங்கள், சீர்காழி-TMS குரலில் பார்ப்போம்/கேட்போம்! திருச்செந்துரின் கடலோரத்தில் -ன்னு ஒன்னா இசைந்து பாடியவங்க, இதில் வசைந்து பாடுறாங்க:) | Very good combo!
செவ்வாய்க்கிழமை வரவேண்டிய பதிவு, சனிக்கிழமை வருகிறது:)
காரணம் = என் சோம்பலே!
ஏதோ மனக் கலக்கம்! சோர்விலேயே இருந்து விட்டேன்;
இந்த வாரம், இன்னுமாடா என் பாட்டு வரலை? -ன்னு கேட்க நினைச்சான் போலும் என் காதலன்!
Twitter-இல் @mokrish மூலமாக வேறு ஏதோ பேச்சு வர, இந்தப் பாட்டும் வர.. இதையே இன்று இட்டு விட்டேன்:)
வரிகள், பாட்டைக் கேட்டுக் கேட்டு எழுதியது; பிழைகள் இருப்பின் சுட்டித் திருத்தவும், நன்றி!
வெற்றி வேல் வெல்லுமடா! வினை தீர்ப்பான் வேலனடா! கற்றவர்க்கும் கல்லார்க்கும், கருணை தரும் தென்றலடா!
பிறந்த வந்த கதையைப் பார்த்தால், பெரிய வீடு தெரியுமடா! மறைந்து போகும் முடிவைப் பார்த்தால், மன்னன் சக்தி புரியமடா!
வணக்கம்! இந்தச் செவ்வாயில் அபூர்வமான பாடல்! MSV - KBSஎன்ற கூட்டணி அபூர்வம்!
கே.பி. சுந்தராம்பாள் (எ) KBS அம்மா
இவரின் பல திரையிசைப் பாடல்கள் = இசையமைப்பாளர் கேவி மகாதேவன் அவர்களுக்கே சென்று அமைந்து விட்டன;
MSV -க்கு = KBS அம்மாவின் ஒரு பாடலும் அமையவில்லை..
அப்படியும் அமைஞ்ச இந்த ஒரே படம், வெளிவராமலேயே போனது:(
படம்: ஞாயிறும் திங்களும்
சிவாஜி, தேவிகா, முத்துராமன், கே.ஆர்.விஜயா எனப் பலரும்..
இயக்குநர்: ஸ்ரீதர்
இத்துணை புகழ் மிக்கோர் இருந்தும், படம் வெளிவரவில்லை..
இந்தப் பாடலை வலையேற்றி உதவியுள்ளார், MSV Quiz ஆர்வலர்!
அவர் காலடியைத் தொட்டுக் கொள்கிறேன்!
கேட்டுச் சொல்லுங்கள், KBS (எ) செந்தமிழ் நங்கையை! - கீழே பட்டையைச் சொடுக்குங்கள்
வீறு தமிழ்ப் பாலுண்டு, வெற்றிக்கு வேல்கொண்டு ஆறுதலைத் தந்த முருகா! ஏறுமயில் சேவலென சூரபதன் மேல்மீது கூறுபட வென்ற முருகா! ஆறுபடை வீடுமலை மீதுகொடி ஆடஎம்மை அரசாள நின்ற முருகா! அத்தனிடமே பெரிய தத்துவம் உரைத்(து)அரிய வித்தென விளைந்த முருகா!
-------------
ஓங்காரம் குடிகொண்டு ஆங்காரம் தனைவென்று ரீங்காரம் செய்யும் முருகா
இதே படத்தில், இன்னும் 2 பாடல்கள் உண்டு, அம்மா குரலில்!
* கேட்ட வரம் கொடுக்கும்
* வகுத்தால் வகுத்த
MS Viswanathan இசையில், KBS அம்மா குரல் வெளி வரலீன்னாலும்
TK Ramamurthi இசையில், வந்ததாச்சும் ஒரு பெரிய ஆறுதல்..
= சக்தி லீலை -ன்னு படத்தில் பாடி இருப்பாங்க..
கேவி மகாதேவனுக்கே பல KBS பாடல்கள் அமைஞ்சி விட்டாலும்..
வேறு சில இசையமைப்பாளர்களுக்கும் கொஞ்சமா அமைஞ்சது, ஒரு வரமே!
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-08)!
இன்றைய பாட்டாய் = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் (ஏற்கனவே இட்ட பாடல் தான்; ஆனா ஒவ்வொரு சட்டியின் போதும், இதை இடுவது வழக்கம், அம்புட்டுதேன்:)
ஆனா, அதுக்கு முன்னாடி... சூர சங்காரம் என்று "கதை"; அது எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் "சொல்லப்படுவது" திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சட்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க,
வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!
தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை!
எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான்.
எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது.
முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.
மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார்.
பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து,
தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!
தூது செல்லும் வீரபாகு முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை!
தேவ இளவரசன் "ஜெயந்தனைத்" தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கு ஆறுதல் சொல்கிறான் வீரபாகு!
அவனுடன் இருக்கும் மற்ற அமரர்களுக்கும் படைபலத்தைச் சொல்கிறான்;
பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான்!
ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடா உள்ளத்தால் தூது முறிகிறது.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.
முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார். ஈழத்தில், ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.
பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக,
கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.
கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது.
சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிகிறார்கள்!
முருகனின் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, அசுர குலமே மூழ்கிப் போகிறது;
வெற்றித் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றார்.
இப்படிச் சூரனை அழித்த மனக்கேதம் தீர்க்க, முருகன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன்.
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க,
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்! ஆக, "கதைப்படி", சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!
திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!
இது ஈழத்துக்கும், முருகனுக்குமே உள்ள தொடர்பு....
இன்றைய சட்டிப் பாடல்...
= திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்! கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா? மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
நண்பர் ஒருவரின் மடிக்கணினியில் இருந்து நிறைய பாடல்களை என்னுடைய பென் டிரைவிற்குச் சில வாரங்களுக்கு முன் மாற்றிக்கொண்டு வந்தேன்.
நேற்று இந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. கையில் இருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு முழுதும் கேட்டபிறகு வேலையைத் தொடர்ந்தேன்.
சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ஒரு அருமையான மெலடி.
பழனி என்னும் ஊரிலே பழனி என்ற பேரிலே பவனி வந்தான் தேரிலே பலனும் தந்தான் நேரிலே - முருகன் பலனும் தந்தான் நேரிலே பழமுதிரும் சோலையிலே பால்காவடி ஆடி வர தணிகைமலைத் தென்றலிலே பன்னீர்க் காவடி ஆடிவர சாமிமலைக் கோயிலிலே சக்கரைக் காவடி ஆடிவர செந்தூரின் வாசலிலே சந்தனக் காவடி ஆடிவர
(இதே படத்தில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, மிக அழகான Melody பாடல், கேட்டுப் பாருங்கள்..)
தியாகய்யா, பக்த ராமதாசு -ன்னு ஆரம்ப காலத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் = நாகையா
வயதான பின்..
நாகையா நடிக்காத பெரும் படங்களே இல்லை எனலாம்! அதுவும் நடிகர் திலகம் சிவாஜியோடு!
*சம்பூர்ண ராமாயணத்தில் தசரதன் ஆகட்டும் - சிவாஜி பரதன்
*தில்லானா மோகனாம்பாளில் குரு - சிவாஜி சிக்கல் சண்முகசுந்தரம்
தெனாலி ராமன், பாவ மன்னிப்பு,
ஆலய மணி, பச்சை விளக்கு...
தியாகய்யர், பக்த ராமதாசு போன்ற படங்களில் தானே இசையமைத்து, பாடியும் இருக்காரு நாகையா!
Legends எனப்படும் விழுமம்!
அவர்களை அறிந்து கொள்ள, நமக்கு வயாசாகிப் போகத் தேவையில்லை; அதுவும் Internet யுகத்தில்!
வள்ளுவரைப் படித்தால் வயசாகி விட்டதா என்ன?
இசைஞானி இளையராஜா, ரஹ்மான் புகழ் பாடும் வேளையிலே...
தமிழ்ச் சினிமாவின் இசை மேதைகள் = ஜி.ராமநாதன், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் என்று விழுமங்களையும் அறிந்து கொள்வோம்!
பார்த்திபன் கனவு -ன்னு ஒரு நாவல்!
அமரர் கல்கி எழுதி, பின்பு திரைப்படமா எடுத்தாங்க;
"தமிழ் - தெலுங்கு - சிங்களம்" -ன்னு மும் மொழிகளில் வந்த முதல் படம் (1960);
மாமல்லபுரம் சிற்பங்கள் அமைக்கும் காட்சியெல்லாம் காணலாம்!
Ponniyin Selvan Fame ஓவியர். மணியம் தான், படத்தின் கலை இயக்குநரும் கூட!
படத்தில் அப்பர் பெருமான் கூட வருவாரு!
பிள்ளைக் கறி தந்த பரஞ்சோதி/ சிறுத்தொண்டர், தான் அவ்வாறு செய்தது "தவறு" -ன்னு ஒப்புக் கொள்ளும் படமும் கூட:)
சிவகாமியின் சபதம் -நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தான்; ஆனா கதைக்களம் வேற!
கரிகால் பெருவளத்தானின் சோழ மரபில் வந்த பார்த்திபன்;
பல்லவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, "தனிச்சோழம்" காணவேண்டும் என்பதே அந்தப் பார்த்திபனின் கனவு;
ஆனால் போதுமான படைபலம் இல்லை;
பின்னாளில்.. அவன் மகன் விக்கிரமன், பல்லவனின் மகளையே காதலித்துக் கைப்பிடித்து, அந்தக் கனவையும் நனவாக்குகிறான்!
சோழன் கனவு நனவாகப், பல்லவனே (நரசிம்ம வர்ம பல்லவனே) பலப் பல உதவிகள் செய்கிறான்:)
இது போன்ற "வரலாற்றுத் திரிபு"களுக்கு, கல்கியைப் பிலுபிலு என்று பின்னாளில் பிடிச்சிக்கிட்டாங்க!:)
ஜெமினி, கணேசன் வைஜயந்திமாலா,
ரங்காராவ், வீரப்பா, பாலைய்யா, அசோகன்,
(ஆரம்ப கால) சரோஜா தேவி, ராகினி, குமாரி கமலா
-ன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே உண்டு!
பாடகர்களும் = நட்சத்திரப் பாடகர்களே;
பி.சுசீலா, பி.லீலா இவர்களுடன் சேர்ந்து கொண்டது = பிரபல மேடைப் பாடகி, ML வசந்தகுமாரி!
ஆயனாரின் மகள் சிவகாமியாக = குமாரி கமலா ஆட..
அதற்கு MLV பாடும் பாட்டே = இன்றைய பாடல்!
வள்ளியின் முருகக் கனவை, ஆயன் மகள் ஆடிக் காட்டுகிறார்! பாருங்கள்!
அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி கந்தன் வரக் காணேனே வண்ண மயிலே, வண்ண மயிலே
ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத் துன்பத்தைக் கொத்தி எடுத்திடவே, உதடு அவரைத் தேடுதடி
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)
தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி? கள்ளச் சிரிப்பாலே கன்னத்தைக் கிள்ளிவிட்டு அள்ளி அணைத்திடவே, அவர் வரக் காணேனே
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)
குரல்: M.L. வசந்தகுமாரி
வரி: விந்தன்
இசை: வேதா
படம்: பார்த்திபன் கனவு
முருகனின் செவ்வாயில் இட வேண்டிய பதிவு;
ஆனா மருத்துவமனையில் இருந்தேன்;
நேற்றே வீடு வந்து சேர்ந்தேன்; அதான் வெள்ளியில் வருது; தாமதத்துக்கு மன்னிக்க:)