மயில் வாஹனா! வள்ளி மன மோஹனா!
மயில் வாஹனா! வள்ளி மனமோஹனா! மா (மயில்)
சரவண பவ! வரமருள்வாய்! வா! மா (மயில்)
கயிலாயம் முதல் மலைகளில் எல்லாம் களித்து
விளையாடும் பன்னிரு கையா! முருகையா! (மயில்)
பூர்ண சந்திரன் போலும் அறுமுகா!
புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா!
ஆரணப் பொருளே! அடிமை எனை ஆள
வா வா வா! இராமதாசன் பணி குஹா!
இராகம்: மோஹனம்
இயற்றியர்: பாபநாசம் சிவன்
பாடியவர்கள் : ப்ரியா சகோதரியர்
1 comments:
ராதா ஜெயலட்சுமி குரலில் இந்த பாடலை கேட்கும்போது முருகப்பெருமான் நம் முன்னே நிச்சயம் நிற்பார்.
Post a Comment