Wednesday, November 16, 2011

ஆதாரம் நின்திருப் பாதாரம்!

இந்தச் செவ்வாயில், செவ்வாயன் சேயோனின் எளிமையான பாட்டு ஒன்னு!

பொதுவா...TMS சினிமா/பின்னணிப் பாடகர்-ன்னு பலரும் அறிவாங்க!

ஆனா....அவர் ஒரு சிறந்த கச்சேரிப் பாடகர் (மரபிசை) என்பது சிலர் மட்டுமே அறிவாங்க! தமிழிசை/ கர்நாடக மேடைக் கச்சேரிகளிலும் கொடி கட்டியவர் TMS!
அப்படியான ஒரு பாட்டு, இந்தச் செவ்வாய் முருகனருளில்!

New York விட்டு வெகு தொலைவு வந்திருக்கேன்...
ஒருவன் ஊருக்கு வந்துவிடு, போதும் அங்கு இருந்தது-ன்னு என்னைக் கூப்பிடுகிறான்!
முருகவா....ஆதாரம் நின்திருப் பாதாரம்!


ஆதாரம் நின்திருப் பாதாரம் - இந்த
அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?
(ஆதாரம்)

ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் - போற்றும்
போதனே சுவாமி நாதனே, என்றும்
(ஆதாரம்)

பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ
பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ
கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ
கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே
(ஆதாரம்)

2 comments:

sury siva November 17, 2011 7:34 AM  

muruga !! neeye aadharam.

subbu rathinam

குமரன் (Kumaran) November 18, 2011 4:55 PM  

அருமையான பாடல். நன்றி இரவி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP